முஸ்லிம்களுக்கு
10 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 28 இல், சிறைநிரப்பும்
போராட்டம் நடத்த இருக்கிறது. கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவளிக்க தயார் என்கிறார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன்.
தீபாவளி பண்டிகைக்கு
இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இனிப்புகளின் விலை 30 விழுக்காடு அளவு உயர்ந்துள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரிப்புதான் காரணம் என்கிறார்கள் ஓட்டல் உரிமையாளர்கள்.
வாக்காளர் பட்டியலில்
பெயர் சேர்க்க கடைசி நாள் 31.10.2013. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அக்.1 முதல் அக்.
31 வரை வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தங்களுக்காக விண்ணப்பங்கள்
பெறப்படுகின்றன.

சியாரா லியோன்
சர்வதேச கப்பல் பதிவுக் கழகம் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு தூத்துக்குடியில் பிடிபட்ட
அமெரிக்க கப்பல் சம்பந்தமாக ஒரு கடிதம் எழுதியுள்ளது. “அமெரிக்க கப்பலை இந்தியா சட்டவிரோதமாக
பிடித்து வைத்துள்ளது. கப்பலையும், அதில் இருந்தோரையும் உடன் விடுவிக்க வேண்டும்! புழல்
சிறையில் இருக்கும் கப்பல் ஊழியர்களுக்க சரியான உணவு வழங்கப்படவில்லை! சரியான மருத்துவ
வசதிகள் செய்து தரப்படவில்லை!”- என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment