NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Friday, January 31, 2014

பெஸ்ட் கிளிக்: 'முகமற்றவர்கள்!'

"சுரண்டலின் முகம் கோரமானாலும்..உழைப்புக்கோ முகமில்லை...

விருந்தினர் பக்கம்:'காந்தி ஏன் கொல்லப்பட்டார்?'

சரியாக 65 ஆண்டுகள் ஆகின்றன. இதேநாள்... 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்து கொண்டிருந்தபோது தேசப்பிதா கொல்லப்பட்டார். ஒரு தொண்டன் போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீயைப்போலப் பரவியது அந்தச் செய்தி: "காந்திஜயைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்..." தகவல் அறிந்து முதலில் படேல்...

இதழியல்: காமிராவில் கைவண்ணம் - 4: 'ஆடாத காமிரா என்றால்..'

காமிரா ஆட்டம் காமிரா ஆட்டம் விலை உயர்ந்த காமிரா ஒன்றை வாங்கிய ஒருவர் என்னிடம் வந்தார். "இந்தக் காமிராவில் ஏதோ கோளாறு போல! படங்கள் தெளிவாக வரவில்ல!" - என்று குறைப்பட்டுக் கொண்டார். "தெளிவாகப் படம் எடுக்க உங்களுக்குத்தான் தெரியவில்லையே தவிர காமிராவுக்கல்ல!" - என்று நான் விளக்க வேண்டியதாயிற்று. படங்கள் தெளிவில்லாமல் மங்கலாக இருப்பது எல்லாம் படமெடுப்பவர்...

Tuesday, January 28, 2014

இதழியல்: அறிவுக்கு வேலை கொடு : வெட்கம்... வேதனை..!

பெரிய பெரிய கட்டுரைகள் எழுதுவது மட்டுமே எழுத்தாளரின் இதழியல் பணிகள் அல்ல; வாசகர் கடிதங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  இவைதான் பத்திரிகையாளர் ஆக ஆரம்பப் பாடம்...

வளைகுடா செய்திகள்: 'பெருகிவரும் மணமுறிவுகள்! சவுதி பெண்களின் மன மாற்றங்கள்!'

விவாகரத்து வழக்குகளால் சவுதி அரசாங்கத்துக்கு மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது. 2012ம் ஆண்டு மட்டும் அங்கு விவாகரத்து பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 30,000 பேர். ஒரு நாளைக்கு சராசரியாக 82 பேர்; ஒரு மணி நேரத்துக்கு 3 பேர் இங்கு விவாகரத்து பெறுகிறார்கள். திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகளில் இந்த மணவிலக்கு நடைபெறுகிறது. இதுவே 2010ல் ஒரு நாளைக்கு விவாகரத்து...

விருந்தினர் பக்கம்: 'ஆனைகளுக்கும் அடி சறுக்கும்!'

“தலைவர்கள் சித்தாந்தப் பின்னணியில் இருந்து உருவாகிறார்களா? அல்லது மக்கள் கூட்டத்திலிருந்து உருவாகிறார்களா” - என்னும் தலைப்பில் 26.01.2014 அன்று நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது.  ஆழி செந்தில்நாதன், திருமுருகன், கிழக்குப் பதிப்பகம் பத்ரி, குமரேசன் ஐயா, ஓவியா, கவிஞர் கலாப்ரியா, பேராசிரியர் ராமசாமி, கடற்கரய், அரவிந்த நீலகண்டன் என ஏகப்பட்ட பிரபலங்கள். ஒவ்வொருவரும்...

இதழியல்: காமிராவில் கைவண்ணம் - 3, 'காமிராவுக்கும் வரம்பு உண்டு'

அமெச்சூர் போட்டோகிராபர் ஒருவர் ஒருமுறை அழகிய வண்ணத்துப் பூச்சிகளை மிக மோசமாக படமெடுத்து வந்து காட்டினார். வண்ணத்துப்பூச்சிகள் போன்றவற்றை எப்படி எடுக்க வேண்டும் என்பதோ, அதற்கெனத் தனிக் கருவிகள் தேவை என்பதோ, அக்கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதோ அவருக்குத்  தெரியவில்லை. ஒரு காமிராவை எப்படி, எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்று ஒரு வரம்பு உண்டு.  நீங்கள்...

அச்சச்சோ: 'நல்ல எண்ணத்துலே சொன்னது... மாற்றிப் போட்டுட்டீங்க!'

'தி.மு.க. தோற்கும் என்று நான் சொன்னது, தி.மு.க. தோற்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. நான் கழகத் தலைவர் கலைஞரிடம், இப்படி பலர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். மதுரை மாநகர் கழகம் கலைக்கப்பட்டிருக்கிறது. திருப்பியும் மாநகர் கழகத்தைக் கொண்டு வாருங்கள். அதேபோல மதுரை மாநகரத்திலும், புறநகரிலும் கிட்டதட்ட 10 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களை எல்லாம் மீண்டும் கழகத்தில் இணைத்துக்...

Monday, January 27, 2014

பெஸ்ட் கிளிக்: 'அனுதின இயக்கம்!'

அனுதின இயக்கம்  ...

பெஸ்ட் கிளிக்: 'சன்னல்'

சன்னல்...

பெஸ்ட் கிளிக்: உதயம்

உதயம்...

இதழியல்: காமிராவில் கைவண்ணம் - 2, 'தேவை தரமான படப்பிடிப்பாளர்'

1950களில், பம்பாயில் விளம்பரங்களுக்கான படங்கள் எடுத்துக் கொண்டிருந்ததேன். அப்போது என்னிடம் 'ஹாசல்பிளாடு' (Hasselblad) காமிரா இருந்தது. உலகிலேயே மிக விலை உயர்ந்த காமிரா அது. அதற்கெனத் தனி லென்ஸ் மற்றும் சில பாகங்களையும் வாங்கி வைத்திருந்தேன். அவற்றைக் கண்ட வாடிக்கையாளர் ஒருவர், "ஓ! மிஸ்டர் மில்லர்! என்ன அழகான காமிரா. நிச்சயம் இது அற்புதமான படங்கள் எடுக்கும்!" - என வியந்து...

Sunday, January 26, 2014

கருத்துப்படம்: 'புலம்பல்!'

நன்றி:  iView...

சிறப்புக் கட்டுரை: 'யார் அந்த வெகுஜனம்; ஆம் ஆத்மி?'

பல ஆண்டுகளுக்கு முன் அப்போது நான்கு வயதான எனது மகள் கேட்டாள்: "அப்பா! இந்த குட்டியூண்டு ஷீக்கள் இங்கே ஏன் கிடக்கின்றன?" அவள் சுட்டிக் காட்டிய இடத்தில் மலைப் போல காலணிகள் குவிக்கப்பட்டு கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருந்தன. ஏறக்குறைய 80,000 ஜோடி காலணிகள், அவற்றில் 8,000 ஜோடிகள் குழந்தைகளுக்குரியன. நாங்கள் அப்போது, ஜெர்மனி நாஜிக்களால் நச்சுப் புகையூட்டி கொல்லப்பட்ட அப்பாவிகளின்...

Friday, January 24, 2014

பெஸ்ட் கிளிக்: 'விடியும்.. ஆனால்.. விடியாத பரிதாபம்!'

"விடிய நினைத்தாலும், விடியாத காலைப் பொழுது உபயம் அரசியல் நாயகர்கள்...

பெஸ்ட் கிளிக்:'அம்மோனியா கொள்கலன்'

சென்னை, எண்ணூர் "உருவம் சிறிதாயினும்.. காரம் பெரிதய்யா..! வெடித்தால் இன்னொரு போபால்தான்!"...

பெஸ்ட் கிளிக்: 'காணாமல் போனது கடற்கரை!'

"வடசென்னைக் கடற்கரை இனி 'பாறைக்கரை'  என்றழைக்கப்படும்; கடல் அரிப்பால் காணாமல் போனது  கரை...

பெஸ்ட் கிளிக்:'காத்திருப்பு'

காத்திருப்பு...

பெஸ்ட் கிளிக்: 'போர்க்களமானது.. வாழ்க்கை!'

போர்க்களமானது.. வாழ்க்கை...

இதழியல்: 'காமிராவில் கைவண்ணம்': 1

ஒரு முறை லண்டனுக்குச் சென்றிருந்தபோது, சில புகைப்படச் சாதனங்கள் வாங்க காமிராக்கள் விற்கும் ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடை லண்டனில் விலை உயர்ந்த ஆடம்பரப் பொருள்கள் விற்கும் பல பொருள் அங்காடித் தொகுதியில் இருந்தது. வேறு எங்குமே கிடைக்காத காமிராவுக்கான சில பொருள்களைத் தேடித்தான் அங்கு சென்றேன். சற்று நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. எனக்கு அருகில் ஒருவர் இருந்தார்....

Thursday, January 23, 2014

நடப்புச் செய்தி: 'முஸ்லிமாக பிறந்ததைத்தவிர வேறென்ன பாவம் செய்தார்கள்?'

சென்ற ஞாயிறு மற்றும் திங்கள் (19.01.2014 மற்றும் 20.01.2014) இரண்டு நாட்கள் வேலூர் மற்றும் பெங்களூரு வழக்கில் சிறைப்பட்டுள்ள சகோதரர்களை காண சென்றிந்தோம். வேலூர் வழக்கில், பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் இருவரும் தனித்தனி பிளாக்கில் உள்ளனர். பண்ணா இஸ்மாயில் போலிஸ் காவலில் ராமநாதபுரத்தில் உள்ளார். மூவரும் சந்தித்து பேச அனுமதி கிடையாது. வழக்கறிஞர் சந்திப்பிலும்...

Wednesday, January 22, 2014

விருந்தினர் பக்கம்: 'ஆர்.எஸ்.எஸ்.ஸின் தோல்கூத்துப் பாவை!'

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. பல்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற, பல்வேறு மொழிகளைப் பேசுகிற, பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் காலங்காலமாக இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை என்பது இந்திய விடுதலைப் போரின்போது மகத்தான விழுமியங்களாக மேலெழுந்தது. சுதந்திர இந்தியா மதச்சார்பின்மை என்னும் மகத்தான அடித்தளத்தின் மீது கட்டப்பட்டடது....