NewsBlog

Thursday, October 31, 2013

விருந்தினர் பக்கம்: 'ஆகவேதான் சொல்கிறேன்'



“ஒற்றை மத ஆதிக்கமும், ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பும் நாட்டின் பன்முகப் பண்பாட்டு அழகைச் சீர்குலைப்பவை. 

பசுவதைத் தடைச்சட்டம் என்பதன் பெயரால், இந்துக்கள் என்று இவர்கள் அடையாளப்படுத்துகிற மக்களிலேயே தலித்துகள் உள்ளிட்ட ஒரு பெரும்பகுதியினரின் மாட்டுக்கறி உணவுப் பழக்கத்தை இழிவுபடுத்துகிறார்கள். 

தகுதிக்கே வாய்ப்பு என்று கூறி இட ஒதுக்கீட்டு நியாயங்களை மறுப்பதன் மூலம் சமூக நீதியை ஒழித்துக்கட்டி, இந்துக்கள் என்று இவர்கள் அடையாளப்படுத்துகிறவர்களிலேயே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோரின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறவர்கள்...

காங்கிரஸ் ஆட்சி மக்கள் மீது திணிக்கிற மோசமான பொருளாதாரக் கொள்கைகளை அப்படியே ஆதரிப்பவர்கள். அதன் அடிப்படையிலும் இவர்கள் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்குப் பகையாளிகள்.

ஆகவேதான் சொல்கிறேன், ஆர்எஸ்எஸ் - பாஜக கொள்கைகள் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரானவை.”

-தொலைக்காட்சி விவாதங்களில் இக்கருத்தை நான் சொல்கிறபோதெல்லாம் பாஜக பிரமுகர்கள் இது தவறானது என்று சொல்வதில்லை, தங்களது கொள்கைகளின் நியாயங்களைச் சொல்வதில்லை. 

மாறாக அவர்களுடையே ஒரே எதிர்வாதம் என்ன தெரியுமா? “கம்யூனிஸ்ட்டுகள் போலித்தனமானவர்கள்...!”

-  குமரேசன் அசாக்
Kumaresan Asak

0 comments:

Post a Comment