NewsBlog

Tuesday, October 22, 2013

கவிதை: "மீண்டும் எதிர்ப்பார்ப்போடு நான்!"





கும்மிருட்டாய்
எனது மனதின் அத்தனை
சோகங்களையும்
தாங்கியவாறு
குடைப் பிடித்தது
கரும்மேகம்!

இதுவும் கடந்து போகும்
என்பதை நிஜமாக்கி
மழை மேகம்
நகர்ந்தபோது..
நிர்மலமாய் தெளிவடைந்த
என் மனம்
லேசாய் மிதக்கிறது
அதோ அந்த
வெண்மேகமாய்!

அய்யகோ..
பூமித்தாயின் மடியைச்
செழிப்பாக்க வந்த
கார் மேகம்
தன் கடமை
தவறியதைக் கண்டு
நெஞ்சு பதைபதைக்க
சோகத்துடன்
நிற்கிறேன்
மீண்டும் நான்
இன்னொரு கடப்பை
எதிர்நோக்கி!

-    - சின்னக்குயில்

0 comments:

Post a Comment