NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Sunday, June 30, 2013

என் கேள்விக்கு என்ன பதில்: "இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியல்லவா?”

ஒருமுறை அமிர்தஸரில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் அல்லாமா ‘ஷிப்லி நுஃமானி’ (ரஹ்) அவர்கள் ‘மகளிர் உரிமைகள்’ பற்றி சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இஸ்லாம் பெண்களுக்கு நியாயமான… நிறைவான உரிமைகள் வழங்கி இருப்பதையும், அதில் ஆண் – பெண்ணுக்கு இடையே எந்த பாராபட்சமும் காட்டவில்லை என்பதையும் மௌலானா விவரித்துக் கொண்டு வந்தபோது, இடையே ஒருவர் ஒரு கேள்வியை எழுதி மேடைக்கு அனுப்பினார்.
 
“இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் பெண்களுக்கு ஆண்களைவிட ஒரு பங்கு குறைவாக வழங்கப்படுகிறதே! இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியல்லவா?” – இதுதான் கேள்வி.
மெளாலான அவர்கள் இப்படி பதிலளித்தார்கள்:
“உண்மையில், இதில் பெண்களுக்கு எந்தவிதமான உரிமை இழப்பும் இல்லை.
நேர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால் ஆணுக்குச் சமமான பங்கு பெண்ணுக்குக் கிடைக்கிறது என்பது மட்டுமல்ல.
இந்த வாரிசுரிமைச் சட்டம் அவளுக்கு லாபகரமாக இருக்கிறது.
எப்படியென்றால்..
சொத்தில் ஒரு பங்கு ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் கிடைக்கிறது. ஆகவே அவளுக்குக் கிடைத்த சொத்துப் பங்கு அப்படியே தனியாக இருக்கும்.
அதேபோல, திருமணத்தில் கிடைத்த மஹர்த் தொகையும் அவளுடையதே!
ஆனால், சொத்தில் இரண்டு பங்கு பெற்ற ஆண் அவன்,
  • தனக்காகவும்
  • தன் மனைவிக்காகவும்
  • குழந்தைகளுக்காகவும்
  • பெற்றோருக்காகவும்
செலவழிக்க வேண்டும்.

இப்பொழுது சொல்லுங்கள்; சொத்தில் கிடைத்த பங்கின் மூலம் அதிக லாபம் பெறுவோர் யார்?"
இந்த பதிவுக்காக முகநூலில் வந்த கமெண்ட்: அடக்கடவுளே! என்னா ஒரு நியாயம்? (Adak kadavule! Enna oru Niyayam.!)

பதில்: அன்புள்ள (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) அய்யாவுக்கு, இந்த பதிவில் வாரிசுரிமை - சொத்துரிமை சம்பந்தமான ஒரு முக்கிய கேள்விக்கான பதில் உள்ளது. பதில் அளித்தவர் தலை சிறந்த அறிஞர் பெருமக்களில் ஒருவர். இந்த தீர்வை அல்லது பதிலை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், சிறு பிள்ளைத் தனமாக 'கமெண்ட்' அடிப்பதற்கு பதிலாக அறிவார்த்த ரீதியாக இந்த கேள்விக்கான தீர்வை அளித்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன். ஒருவேளை பொறுத்தமான தீர்வாக அது இருந்தருந்தால் நான் ஏற்றுக் கொண்டிருப்பேன்கூட. ஆனால், மாற்று தீர்வு சொல்வதற்கு பதிலாக கிண்டலடித்து சென்ற லட்சக்கணக்கானோரை காலம் தன்னுள் புதைத்துக் கொண்டுள்ளது. படைத்தவன் தன் படைப்புகளுக்காக அளித்துள்ள அருள் மார்க்கம்தான் இஸ்லாம். உலகின் நான்கு பேரில் ஒருவர் பின்பற்றும் மார்க்கம்.உங்களைவிட மெத்த படித்த பேரறிஞர்கள் முதல் கடைநிலை பாமரன்வரை ஏற்று தனது வாழ்வில் செயல்படுத்தும் மார்க்கம். அதனால், விமர்சனம் என்ற போர்வையில் கிண்டலடிப்பதைவிட நல்ல தீர்வுகளை தாங்கள் சொல்வீர்கள் என்று நம்புகின்றேன்.

கேள்வி:  Mannikkavum Aiyya. Idhu islam sammanthappattadhu enbadharkaga kindal adikkavillai.Endha madham sammandhappattirundhalum idhaiye seithiruppen.Endha poruthamana theervaiyum idhai thandi neengal Yerka povadhillai.Ennudaiya siru pillai thanamana purithal ennavendral oru penn thanakkagavum,than kanavarukkagavum,than kuzhanthaigalukkagavum than petrorukkagavum eduvum seyya thevaiye illai enbadhu ungal mudivu.Penn thanadhu pangai vaangi vaithukkondu aanukku adangiye vazhavendum.enbadhuthan.En mudivu ennavendral Pengalukkana pangai mudivu seyya aangal yaar?Every human being is equal.There should be no gender disparity.Aanum pennum sernthathuthan ulagam,No up no down.You can't be touchy and post things like this in general."Islamiarukku mattum" endru pottirunthal Naan Nichayam Idhil thalai ittirukka matten.I am extremely sorry Had I wounded your religious sentiments.It is my mistake to have taken this as a general economical issue.Besides,You know Majority is running the country ,we know how they do.Nirka,Nambikkaiyin adippadaiyil seyyum edhaipatriyum sammandhapattavaraithavira yaarum pesa mudiyathu,Social,economical endral nambikkai ange koodathu,only scientific ,logical,reasonable solution thaan vendum.Neengal ennai islathukku ethiri endru nambugireergal adhuthan prachinai.Naan podhuvaaga sari endru nambuvathai ,sonnal ivar ketpaar ennum idathilthan solven.Naan Socrates illai,Plato illai,Karl marx,Ambedkar,periyar illai,Budha illai,adhanaal Niraya Bayam undu.

பதில்: அய்யா, நீங்கள் ஒன்று தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்திலாவது சொல்லுங்கள். ஆங்கில எழுத்து கலந்த தழிழை வாசிப்பது எனக்கு கடினமாக உள்ளது. 

அடுத்தது என்னுடைய பதிவில் விமர்சனம் கூடாது என்று நான் எங்கேயும் சொல்லவில்லை. விமர்சனங்களை வரவேற்கிறேன். அது எந்த மத கருத்தாக இருந்தாலும் நையாண்டி வேண்டாம் என்கிறேன். இதில் (நையாண்டியில்) நிச்சயம் உங்களுடன் என்னால் உடன்பட முடியாது. இன்று பொதுவாக ஒரு சிலர் தன்னை எந்த சமய அமைப்பிலும் இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள் தங்களைப் போலவே. எந்த கொள்கைகைளையும் சாராமல் இந்த உலகில் யாரும் வாழ முடியாது. 

ஒவ்வொரு கொள்கையும் .. வாதமும்.. இஸமும்.. ஒரு சமயம்தான்! ஒரு நம்பிக்கைதான்! அறிவியல் என்ற சொல்லெடுத்து கவசம் தரித்துக் கொண்டாலும் அவர்களும் சமயவாதிகள்தான்! கம்யூனிஸ்ட்டுகளுக்கு மார்க்ஸ் தெய்வம் மற்றும் தாஸ் காப்டிலிஸம் வேதம் என்பதைப் போல முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர் பின்பற்றும் இறைவன்களும், வேதங்களும் வெவ்வேறானவை. 

 
அடுத்தது இருபாலரும் சமம் என்று ஒரு கருத்தை வைத்து பெண்ணை போகப் பொருளாக.. பணிச் சுமை மற்றும் குடும்ப சுமை என்று இரண்டு சுமைகளையும் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாக்குகிறார்கள். மேலை நாட்டுப் பெண்கள் இன்று சந்திக்கும் துயரங்களைத்தான் தங்களைப் போன்றோர் தாங்கிப் பிடிக்கிறார்கள். சமம் என்ற போர்வையில் அவர்கள் துயரப்படுவது கட்டாயம் என்கிறீர்கள். எங்களைப் போன்ற பழமைவாதிகள், பாமரர்கள் சொல்லும் அவரவர்க்கான எல்லைகள் என்ற யாதார்த்த கருத்துக்கள், எல்லா கால நடைமுறைக்கும் ஏற்ற கருத்துக்கள் தங்களுக்கு பிற்போக்குத்தனமானவையாக தெரிவதில் வியப்பில்லை. 



சட்டங்களை சொல்ல நீங்கள் யார் என்கிறீர்கள். தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உற்பத்தியின் எல்லா சட்டங்களையும் படைத்தவன் என்ற நிலையில் நீங்கள்தான் வகுக்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். 

மனித இனத்தைப் படைத்த இறைவன்தான் சட்டங்களை சமைக்க முழு தகுதியானவன். இதைதான் இஸ்லாம் சொல்கிறது. அதை ஏற்று நடைமுறைப்படுத்துபவரே முஸ்லிம்கள். 

இஸ்லாமும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களும் பெரும்பான்மை என்னும் இனத்திலிருந்து சிறுபான்மை இனமாக முளைத்தெழுந்த அதிபெரும்பான்மையினர் என்பதை மறந்திட வேண்டாம். அச்சத்திற்கு அப்பாற்பட்ட இனம் இது. எத்தனையோ இன்னல்களை.. இடுக்கண்களை கடந்துவந்தவர்கள்.(சில மாநிலங்களைத் தள்ளி உங்கள் காலத்திலேயே முஸ்லிம்கள் அடைந்த இந்த துன்பங்களை தாங்களும் பார்த்திருப்பீர்கள்) பெரும்பான்மை இனம் ஆட்சிபுரிகிறது என்ற காரணத்துக்காக எங்கள் கொள்கைகளை விட்டுத்தர சொல்கிறீர்களா? என்றும் தெரியவில்லை. 

வரலாற்றில் பதிந்துள்ள ஒவ்வொரு பேரறிஞரும் தனிநபரே! அந்த தகுதி அடைவதற்கு உங்களுக்கும் தடையில்லை! நீங்கள் பேசுங்கள்.. அதிகதிகம் பேசுங்கள்! அந்த பேச்சுக்களை முதலில் உங்கள் குடும்பத்தில் நடைமுறைப்படுத்துங்கள். அடுத்தது உங்கள் உறவினர் வட்டத்தில் மற்றும் தோழமை வட்டத்தில் செயலாக்கப்படுத்துங்கள். வெற்றி உங்களுடையதே! அதேபோல ஒவ்வொரு கருத்தையும் ஆரோக்கியமாக விமர்சனம் செய்யுங்கள். கூடவே தீர்வுகளையும் முன்வையுங்கள். 

எனது கருத்துக்கள் அனைவருக்கும் பொதுவானதுதான். இந்த கருத்துக்களை நான் செயல்படுத்துவதோடு என்னைப் பின்பற்றுபவரும் செயல்படுத்துவதை பார்க்கிறேன். 

மனித இனத்துக்கான எல்லா பிரச்னைகளுக்கான தீர்வுகளும் என்னிடம் உள்ளன. அவை வெறும் எழுத்துக்களாக மட்டுமல்லாமல் ஏற்கனவே செயலருவம் பெற்றவை என்ற உற்சாகத்தோடும் இருக்கிறேன். இறைவன் நாடினால்.. வெகுவிரைவில் செயலுருவம் பெறும் என்றும் நம்புகின்றேன். 

ஏனென்றால் எனது கருத்துக்கள் படைத்தவன் அவன் படைப்புகள் நேர்வழி பெற அருளிய உயர் கருத்துக்கள்!

Saturday, June 29, 2013

விருந்தினர் பக்கம்: 'கிழிந்த பேண்ட்டுக்கு மேல் அணிந்த ஜட்டி!'

 
"உத்தர்கண்ட் மாநிலத்தின் கேதார்நாத் பகுதி இயற்கைப் பேரழிவில் சிக்கிக்கொண்ட குஜராத் புனித யாத்திரைப் பயணிகள் 15,000 பேரை நரேந்திர மோடி மீட்டார். அதற்காக 3 போயிங் விமானங்கள், 80 டொயோட்டா இன்னோவா கார்களை ஈடுபடுத்தினார். மருத்துவக் குழுக்களை விமானம் மூலம் கொண்டுபோய் இறக்கினார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாம்களை அமைத்தார்..." 

..... இப்படியாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டின் ஜூன் 23 இதழில் செய்தி வந்தது.

"ஆகா பார்த்தீர்களா? மோடியின் நிர்வாகத் திறமையை!"- என்று பாஜக தொண்டர்கள் தெருக்களிலும் இணையப்பதிவுகளிலும் புகழ்ந்தோதினார்கள். ஏதோ மோடியே ஹெலிகாப்டரிலிருந்து கயிறில் தொங்கி ஒவ்வொருவராகக் கைப்பிடித்துக் காப்பாற்றியது போல் சித்தரித்தார்கள். உத்தர்கண்ட் மாநில அரசை விடவும், அங்கே ஒரு ரவுண்டு விமானம் மூலம் பார்வையிட்டுவிட்டுத் திரும்பிய குஜராத் மாநில முதலமைச்சரின் நடவடிக்கை பல மடங்கு சிறப்பாக இருந்தது என்று அரசியலைப் பூசவும் அவர்கள் தவறவில்லை.

அவ்வளவு கடுமையான மழை வெள்ளம், நிலச்சரிவு, மழை ஓயும்போது மட்டுமே மீட்பு என்றிருந்த சூழலில், பேன்ட்டுக்கு மேல் ஜட்டியணிந்த எந்த சூப்பர்மேன் வந்திருந்தாலும் 3 நாட்களில் 15,000 பேரை மீட்டிருக்க முடியாதே? சிந்திக்கத் தெரிந்த பலரும் ஊடகங்களில் இந்தக் கேள்வியை எழுப்பினார்கள். அப்படியே மோடி 15,000 பேரை மீட்டார் என்பதை நம்பினாலும், குஜராத்காரர்களை மட்டும்தான் மீட்டார் என்பது, பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் என்று காட்டப்படுகிறவருக்கு அழகல்லவே என்ற கேள்வியும் எழுந்தது. பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கே கூட சகித்துக்கொள்ள முடியாமல் எப்படி இந்த 15,000 பேர் என்ற எண்ணிக்கை கிடைத்தது என்று விசாரிக்கத் தொடங்கினாராம்.
இப்போது உண்மை வெளிவந்துள்ளது. முதன் முதலில் இந்தச் செய்தியை எழுதிய ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆசிரியர்களில் ஒருவரான ஆனந்த் சூண்டாஸ், அந்த 15,000 என்ற எண்ணிக்கையையும் மற்ற மிகை விவரங்களையும் கொடுத்தது பாஜக-வேதான் என்று உடைத்திருக்கிறார். அக்கட்சியின் உத்தர்கண்ட் மாநில தலைவர்களில் ஒருவரான 'அனில் பலூனி' அந்த விவரங்களைக் கொடுத்தாராம். 'இந்த விவரம் சரியானதுதானா?'- என்று கேட்டபோது, மற்ற பாஜக தலைவர்கள், குஜராத்திலிருந்து வந்திருந்த பாஜக இளைஞர் பிரிவினர் முன்னிலையில், “அனைத்து விவரங்களும் உண்மைதான், மோடி அற்புதமான செயலைச் செய்திருக்கிறார்” என்றாராம் பலூனி.

‘தி ஹிண்டு’ நாளேட்டிற்கு (ஜூன் 28) அளித்த பேட்டியில் இதையெல்லாம் தெரிவித்திருக்கிறார் சூண்டாஸ்.

பலூனி சொன்னதன் அடிப்படையில் கிளப்பிவிடப்பட்டது காற்றடைத்த பலூன்தான் என்பது ஒரு வாரத்திற்குள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கெட்டிக்காரன் புழுகு எட்டு நாள் என்பார்கள். அந்த அளவுக்குக் கூட தாங்கவில்லை மோடி சாகசப் புழுகு.

அரசியலில் கூட்டாளிகள் யாரும் இல்லை என்பதால், இப்படிப்பட்ட புனைவுகளைக் கூட்டணி சேர்த்து மக்களை ஏமாற்றிவிடலாம், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளை அள்ளிவிடலாம் என்று கணக்குப் போட்டது நரேந்திர மோடியை தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராகத் தேர்ந்தெடுத்த பாஜக. பலூன் உடைந்துவிட்டதால் அடுத்த புனைவுக்குத் தயாராகிக்கொண்டிருப்பார்களோ?

தகவல்: எஸ். சத்திய மூர்த்தி 
(மூலம்: தீக்கதிர் - ஆசாத்)

Friday, June 28, 2013

என் கேள்விக்கு என்ன பதில்: ஈரானின் புதிய அதிபரும் - அமெரிக்காவின் கொள்கையும்..!


கேள்வி: சமீபத்தில் ஈரானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஹசன் ரூஹாணி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க மாட்டேன் என்று ரூஹாணி சொல்லியிருப்பதால் அந்தப் பகுதியில் நெருக்கடி குறைந்து அமைதி நிலவ வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்! 

பதில்: பெத்தண்ணா அமெரிக்காவுடன் எந்த உலக நாடும் மோதல் போக்கை மேற்கொள்வதில்லை. அண்ணன்தான் உலக நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்து ரத்த களறியாக்கிக் கொண்டிருக்கிறது. அண்ணனுடைய வெளிவிவகார கொள்கையுடன் ஈரானின் கொள்கை ஒத்துப் போனால் நட்பு நாடு! இல்லையென்றால்.. தூக்குக்கயிறு! 

கேள்வி: நீங்கள் சொல்வதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது! வாஸ்தவம்தான் அத்திபட்டியில தண்ணி இல்லனுன்னு சொல்லிட்டு சும்மா இருந்தா எப்படி தீர்வு வரும்? முஸ்லிம் நாடுகள் அதுவும் இரண்டு ஹரம்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சவூதி அரேபியாவே அமெரிக்க அடிமையாக இருக்கிறதே தீர்வு என்ன?  

பதில்: உலக மகா யுத்தங்களைத் தொடர்ந்து சோவியத் உலகமும், மேற்கத்திய உலகமும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட நாடுகளின் முஸ்லிம் இளைஞர்களையும், யுவதிகளையும் தங்கள் நாடுகளில் இறக்குமதி செய்துகொண்டு சித்தாந்த கல்வி அமைப்பை திணித்தனர். அவர்களை தங்கள் பொம்மை பிரதிநிதிகளாய் திரும்பவும் அந்தந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிபர்களாக்கினர். மூளைச் சலவைச் செய்யப்பட்ட கம்யூனிஸ - மேற்கத்திய பெயர் தாங்கி முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாத்தை புறம் தள்ளி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த வினை இது. எகிப்தின் ஹோஸ்னி முபாரக், லிபியாவின் கடாபி, இராக்கின் சதாம் உசேன் வரை இதுதான் தொடர்ந்தது.  இன்னும் தொடர்கிறது. 

இஸ்லாம் வேண்டும் என்று சொல்லப்பட்டவர்கள் தீவிரவாதியாக சித்தகரிக்கப்பட்டார்கள். 'அபுகாரிப்' மற்றும் 'குவாண்டனாமோ' சிறைக் கொடுமைகளைவிட மோசமான கொடுமைகள் சொந்த நாட்டு மக்கள் மீது சொந்த ஆட்சியாளர்களால் ஏவிவிடப்பட்டன.

ஹிஜாப் அணிந்த பெண்கள் 'விபச்சாரிகள்' என்று பிரகடனப்படுத்தப்பட்டார்கள்.

கலிமாவின் 'இலாஹ்', 'இறைவன் வணக்கத்துக்குரியவன்' என்பது மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் இன்னொரு பொருளான சட்டங்களைத் தர வல்லவன் என்பது புறக்கணிக்கப்பட்டது. இதை பறைச்சாற்றும் 'பாங்கோசை' முஸ்லிம் நாடுகளில் தடை செய்யப்பட்டது.

இதிலிருந்து மீளும் போராட்மே இன்றைய செய்திகள்.

ஆக,
  • இஸ்லாத்தைப் பின்பற்றுவதும், 
  • அதை அடுத்தவர்க்கு எடுத்துச் சொல்வதும், 
  • அதன் அடிப்படையில் கூட்டமைப்பை உருவாக்குவதும்.. 
  • அல்லது ஏற்கனவே இப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள கூட்டமைப்பை பலப்படுத்துவதும்,
  • அதன் அடிப்படையில் சமூக மாற்றத்தை உருவாக்குவதும் 
இன்று முஸ்லிம்கள் முன் உள்ள கடமையாகும்.

இது அந்தந்த நாட்டு மக்கள் அவரவர் நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஒப்ப தீர்மானிக்க வேண்டிய அதி முக்கிய விஷயம் என்பது கவனிக்கத்தக்கது. 

Wednesday, June 26, 2013

சுற்றுச்சூழல்: ‘சுற்றுச்சூழலை கெடுக்கும் தெர்மகோல்...!’


பாலிஸ்ட்ரெயின் என்ற வேதியல் பெயர் கொண்ட தெர்மகோல் ஒரு பாலிமர்தான்! பிளாஸ்டிக்கின் எல்லா தன்மைகளும் கொண்ட அபாயகர மானது இது.
தெர்மொகோல் எல்லா துறையினராலும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இது பிரதானமாக பாக்கிங் செய்ய அதிகதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
அதுவும் பழம் முதற்கொண்டு செல்போன் மற்றும் தொலைக்காட்சி பெட்டி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை சந்தைக்கு அனுப்ப இது பெரிதும் கையாளப்படுகிறது. உணவு பொருள்கள்களுக்காகவும் இது பயனாகிறது. தெர்மகோல் மிகவும் லேசானது என்பதே இதன் ஆபத்துக்கு அதி தீவிரமாக உள்ளது.
நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடும் இது நமது நீர் நிலைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. வீட்டு சாக்கடையிலிருந்து பாதாள கழிவுநீர் குழாய்கள் வரை அடைப்பு ஏற்படுத்துவதில் வல்லவை. மேலும் இவை நீர் உறிஞ்சும் தன்மை அற்றவை. ஆதலால் பரவி இருக்கின்ற இடங்களில் நீரை பூமிக்கு அனுப்பாமல் தடை செய்துவிடும்.
பிளாஸ்டிக் பொருட்கள் போல மக்காத தன்மை கொண்டதுதான் தெர்மகோல். இன்னும் சொல்லப்போனால்.. பிளாஸ்டிக் கூட சில நூற்றாண்டுகளில் மக்கிவிடும் தன்மை கொண்டது. ஆனால் இந்த தெர்மொகோல் என்னும் அரக்கனுக்கு மக்கும் தன்மையே கிடையாது என்பதே இதன் ஆபத்தை உணர போதுமானதாகும். 
வெளி நாடுகளில் தெர்மகோல் அழிக்கபடாமல் சேகரித்து வைத்து மறு சுழற்சிக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த கழிவுகளை சேகரிக்க தனியான துறை இயங்குகிறது.
குறிப்பாக சீனாவில் இருந்து வரும் பொம்மைகள் அனைத்தும் இவ்வாறு மறு சுழற்சியின் மூலம் உற்பத்தி  செய்யப்பட்டவைதான்!
தெர்மகோல் என்னும் அசுரனிடமிருந்து நாளை தலைமுறையைக் காக்க..
  • முடிந்த மட்டும் சேகரித்து வைத்து (எளிதில் தீப்பற்றக் கூடியவை. எச்சரிக்கை) மறு சுழற்சிக்கு ஏற்ப்பாடு செய்ய வேண்டும்.
  • கைவினை பொருட்களுக்கான மூலப் பொருளாகவும் இவற்றை பயன்படுத்தலாம்.
  • பிளாஸ்டிக் ஒழிப்பு போல் தெர்மொகோல் ஒழிப்பு பிரசாரத்தை முன் எடுத்து செல்லலாம்.
  • தெர்மகோல் மிகவும் ஆபத்தானது. ஆகையால், இவற்றை கால்நடைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
  • இவற்றை எரித்தால் நச்சு தன்மை (பிளாஸ்டிக் போல்) கொண்ட வாயுக்கள் வெளியேறும். ஓசோன் படலத்தை ஓட்டையாக்கிவிடும்.
  • முக்கியமாக குழந்தைகள் இதை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • கரி விஷ வாயுக்களை உறியும் தன்மை உடையதால் ஒரு புனல் போன்ற தகரத்தில் கரியை  நிரப்பி அதில் தெர்மகோலை எரிய விட்டலாம்.

Saturday, June 22, 2013

Vizigal - எப்போது விடுதலை?

Wednesday, June 19, 2013

Vizigal - 'மீன்கள்'

Sunday, June 16, 2013

Vizigal - தெருமுனை கூட்டம்.

Saturday, June 15, 2013

விருந்தினர் பக்கம்:'கையெழுத்து'


 
நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழில் சில பக்கங்கள் எழுதும் வாய்ப்பு என் சித்தப்பா மகன்(தம்பி தான்) மூலம் கிடைத்தது. விவசாயத்தைப் பெருக்க வேண்டியதன் அவசியம் குறித்த கட்டுரையைப் பள்ளியில் கேட்டிருப்பதாகவும், நான் எழுதிக் கொடுத்தால் copy -செய்து கொள்வதாகவும் சொல்லிக் கெஞ்சினான். "விவசாயம்" என்று நான் எழுதும் போதே என் சாயம் வெளுத்தது. 'வி' னா, வீணாய் போய் 'லி'னா மாதிரி இருந்ததைப் பார்த்து சிரித்தான் என் தம்பி. என் கையெழுத்து முன்பை விட மிக மோசமாகியிருந்தது. கடைசியாக நான் 'எழுதி' மூன்று வருடமாவது இருக்கும். என் computer-வந்ததிலிருந்து, டிக் செய்வதற்கும், underline-செய்வதற்கும், sign-செய்வதற்கும் தான் நான் பேனா எடுத்திருக்கிறேன். ink pen -பிளஸ்டூவோடு நின்று போனது.

என் கையெழுத்தைப் பார்க்கும் போது என் வாழ்வின் பல நிகழ்வுகள் அலையடிக்க ஆரம்பித்தன. என் கையெழுத்தை விட என் தங்கையின் கையெழுத்து நன்றாக இருக்கும். என் வீட்டு பாடங்களை அவள் எழுதிக் கொடுத்து வகுப்பில் தமிழாசிரியரிடம் மாட்டியிருக்கிறேன். என் அத்தை என் கையெழுத்தை மாற்ற எடுத்த முயற்சிகளில் நானே வென்றேன். என் கையெழுத்தின் லட்சணம் குறித்து நான் என்றும் கவலைப் பட்டதில்லை -MBA சேரும் வரை.

இதுவரையில் நான் பார்த்திலேயே ஆகச் சிறந்த கையெழுத்துக்கு சொந்தக்காரனான நண்பன் சாய்ராமின் கையெழுத்தைப் பார்த்த பிறகு, என் கையெழுத்து இன்னும் கேவலமானது போல் இருந்தது. அதற்கு முன்பு வரை என் BSC.  நண்பன் சரவண குமாரின் கையெழுத்து தான் சிறந்தது என்றிருந்தேன். பள்ளியில் என் நண்பன் பாலச்சந்தரின் கையெழுத்து மணிமணியாய் இருக்கும். அதைவிட அலங்கரிப்புகள். அவனுடைய கணக்கு நோட்டைத் திறந்தால் ஏதோ பெண்களின் கோல நோட்புக்கை திறந்தது போல இருக்கும். அததனை அலங்காரம். சூத்திரங்களுக்கு நெளி நெளியாக அடிக்கோடுகள். பதில்களுக்கு விதம் விதமான பெட்டிகள் என அமர்க்களப் படுத்தியிருப்பான். அதையும் மல்லிகை வாசம் வருகிற பால்பாயின்ட் பேனாவால் எழுதியிருப்பான். 4D -ல் ஒரு கணக்கு நோட்டு அவனால் தான் செய்ய முடியும்.



ஆனால் கையெழுத்தை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தவன் சாய்ராம் தான். அவன் MBA வில் 'தங்கப் பதக்கம்' வாங்கியதற்கு குண்டு குண்டான கையெழுத்தும் ஒரு முக்கிய காரணம். signature- கூட அவன் பிரித்து தனித்தனி எழுத்தாகத்தான் எழுதுவான் (இப்போது எப்படி இருக்கிறான்? என்று தெரியவில்லை) அவன் எதை எழுதினாலும் அது மார்க் ஆக மாறியது.

NASA வைப் பற்றி WASA வில் (wage and salary administration) எழுதினாலும், பீடியைப் பற்றி OD யில் (organization development) சொன்னாலும் அது மார்க் ஆனது. 'ஜோக்' இல்லை, உண்மை. 'அம்மா' என்பதை கேவலமாக எழுதுவதை விட 'அய்யோ' என்பதை அழகாக எழுதுவதன் முக்கியத்துவம் நான் அறிந்து கொண்டேன். 
இந்த சமயத்தில் கையெழுத்தில், பெரிய ஓவியர் போல வித்தியாசமான 'ஸ்டோர்க்ஸை' கையாண்ட எனது நண்பன் ராகவனைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவனைப் போலவே அவன் கையெழுத்தும் மிக வித்தியாசமானது. அவன் "ரகு காலில் நல்ல அடி" என்று எழுதிக் கொடுத்தால் "ராகு காலத்தில் நல்லா படி" என்று தான் படிப்பீர்கள். அப்படியொரு 'கங்கனம்' ஸ்டைலில் எழுதி திணறடிப்பான்.

துணை இயக்குனர் வாய்ப்பு தேடி சென்னையில் அலைந்த காலங்களில் சில இயக்குனர்கள் என் கையெழுத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். வடபழனியில் ஒரு இயக்குனரை பார்க்கச் சென்ற போது, அவரின் உதவியாளர், "ஹீரோவுக்கும், ஹீரொயினுக்கும் முதல் சந்திப்பு சண்டையில் ஆரம்பிக்குது! இதுக்கு சீன் எழுது பார்க்கலாம். " என்றார்.
நான் பல்சரில் வரும் நாயகனை, ஸ்கூட்டியில் வரும் நாயகி மோதிவிடுவதாக, அதன் சண்டை காட்சியை எழுதிக் காண்பித்தேன்..படித்துப் பார்த்தவர் பேய் அறைந்தது போல் ஆகி, பேப்பரை என்னிடம் கொடுத்தார். நான் கொஞ்சம் நம்பிக்கையுடன் அவரை பார்க்க, "உன் கையெழுத்து நல்லா இருக்கு" என்றார். "சீன் சகிக்கவில்லை" என்பதைத் தான் அவர் அப்படிச் சொன்னார். இருப்பினும் முதலும் கடைசியுமாக என் கையெழுத்து பாராட்டப்பட்டது அன்று தான். 

பள்ளிகளில் 95 மார்க்குக்கு பாடம் நடத்திவிட்டு 5 மார்க் கையெழுத்துக்கு என்று ஒதுக்கலாம். அதன் அழகை அளவிட சில முறைகள் தேவைப்படும். அதற்கெல்லாம் இங்கே யாருக்கு நேரம்  இருக்கிறது? கையெழுத்தை வைத்து மனிதனின் மன நிலையை கணிக்க முடியும் என்று உளவியல் சொல்கிறது. இது உண்மை தான். எப்போதும் படபடப்பாக இருப்பவரின் கையெழுத்து பெரும்பாலும் கோணல்மாணலாக இருக்கும். ரிவர்ஸில் யோசித்தால் நிதானமாக, அழகாக எழுதினால் பதட்டம் குறையும். ஆக நல்ல கையெழுத்து BPயை குறைக்கலாம் இல்லையா? 

அடுத்த தலைமுறை தவறவிடும் விஷயங்களில் கையெழுத்தும் ஒன்றாய் இருக்கும். தேர்வுகள் எல்லாம் 'டாபிளட்டில்' எழுதப்படலாம். முழு இங்க்கையும் காட்டும் கண்ணாடி 'கேம்லின்' பேனா மியூசியத்தில் இருக்கலாம்.

என் தம்பி "என்னன்னா இது? விவசாயத்தைப் பத்தி எழுதச்சொன்னா... நீ ஏதோ கையெழுத்தைப் பத்தி கிறுக்கியிருக்க? இது யாருக்கு வேணும்?" என்றான். 

நான் மட்டும் இதை வைத்து என்ன செய்வேன்? படிப்பதற்கு யாருமே இல்லை.என்றாலும, நிச்சயம் வாசிக்கப்படும் என்ற நம்பிக்கையில்  நான் (சரளா... என் laptop-ஐ எடு....!)
 
நன்றி: சிவக்குமார் அசோகன்

விழிகள்: கனவே கலையாதே!


Friday, June 7, 2013

வாழ்வியல்: 'சிறகுகள் விரியுங்கள்.. பறவைகள் போல!'

"வாழ்க்கை என்பது விமானப்பயணம். சிலருக்கான ஓடுதளங்களை அவர்களுடைய குடும்பமோ முன்னோர்களோ உருவாக்கியிருப்பார்கள். உங்களுக்கான ஓடுதளம் முன்னமே உருவாக்கப்பட்டிருந்தால், அதில் ஓடத் தொடங்கி உயரப்பறங்கள். இல்லையென்றால், உங்கள் ஓடுதளங்களை நீங்களே உருவாக்குங்கள்". - புகழ்பெற்ற பெண் விமானி ஒருவர் தன் சுய சரிதையில் எழுதியிருநதது இது.
உண்மைதான்! சில விஷயங்கள் இல்லையென்பதற்காகவே பலவற்றை செய்யாமல் விட்டு விடுகிறோம்.
போதிய கல்வி இல்லை, போதிய வசதி-வாய்ப்புகள் இல்லை என்பவையெல்லாம்  சொல்வதற்கான சில காரணங்களாகலாம்.  ஆனால் கடக்க முடியாத காரணங்கள் அல்ல.
பிறந்த சூழலிலும் வளர்ந்த சூழலிலும் இருக்கிற பின்னடைவுகள், புதிய இலக்குகள் நோக்கிப் புறப்பட உத்வேகம் தர வேண்டும். தகுதியின்மைதான் தகுதிகளைத் தேடிச் செல்வதற்கான அடிப்படைத் தகுதி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் கனவுகளை எட்டும் தகுதி உங்களுக்கு உண்டு என்கிற நம்பிக்கையை உறுதியாக உருவாக்கிக் கொண்டால், தகுதிக் குறைவுகளை எல்லாம் நிறைவு செய்கிற வழிகள் தாமாகவே புலப்படத் தொடங்கும். உதாரணமாக, சொந்தமாக ஒரு வீடு வாங்குவது என்கிற கனவு ஒருவர் காண்பதாக வைத்துக் கொள்வோம்.
அந்தக் கனவு, அவருக்குள் தோன்றிய ஆசையா, அல்லது நிர்ப்பந்தங்கள் காரணமாய் அப்படி ஓர் இலக்கை வகுத்துக் கொண்டாரா என்று முதலில் பார்க்க வேண்டும்.
சரி.. நிர்பந்தம் என்பது என்ன? உடன் பணிபுரிபவர்கள் எல்லாம் சொந்தமாக வீடுகட்டிக் கொண்டதால்.. தானும்  வீடுகட்ட வேண்டும் என்று நினைத்தால்.. அது நிர்ப்பந்தம்.
கனவு என்பது? சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்கிற தீவிரம் அவருக்குள் தணலாய் எரிந்தால்.. அது அவருடைய கனவு.
இந்த சூழல்களில் இப்படிப்பட்டவருக்கு ஏற்பட வேண்டிய நம்பிக்கை கலந்த துணிவு ஒன்றே ஒன்றுதான். "என்னுடைய கனவை என்னால் நிச்சயம் எட்ட முடியும்" – என்பதுதான் அது.
இதன்பிறகு என்ன? இலக்குகளை எட்டுவதற்கான வழிமுறைகள் மள மளவென்று பாதைகள் திறக்கும்.
  • கடன் வாங்குவது,
  • ஓய்வு நேரங்களில் டியூஷன் எடுப்பது,
  • புதிதாக வீடு கட்டும்போதே கீழே சில கடைகளைக் கட்டி வாடகைக்கு விடுவது
என்று விதம் விதமான வழிமுறைகள் அவை. ஒன்றை எட்டவேண்டும் என்கிற கனவு உங்களுடையதாக இருந்தால் அதனை எட்டுகிற உத்திகள், வழிகள், வாய்ப்புகள் எல்லாவற்றையும் உங்களின் தீவிரமே உருவாக்கித் தந்துவிடும்.
தயக்கம் படர்ந்த கனவுகள்தான் தேங்கிப் போகின்றன. தெளிவில்லாத இலக்குகள் நிச்சயம் குழப்பத்தையே உருவாக்கும் அல்லவா?
எந்தவோர் இலக்கைத் தொடுவதன்றாலும், முதலில் நீங்கள் கலந்துரையாட வேண்டியது உங்கள் மனதோடுதான்.
ஆம்.. ஒரு இலக்கை எட்ட நினைக்கும் முன் கொஞ்சம் ரிலாக்ஸாக கண் மூடி அமருங்கள்.
ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளியேற்றுங்கள். உங்கள் திட்டங்களை மனதில் காட்சிப்படுத்துங்கள்.  உங்கள் கனவென்னும் அந்த இலக்கு  தூரத்தில் தெரிகிற மலைச்சிகரமாக எண்ணி அதைச் சென்றடைவதற்கான வழிமுறைகள் குறித்து யோசியுங்கள்

அந்த இலக்கை எட்டத் தேவையான அடிப்படை வழிகள், எடுக்க வேண்டிய முயற்சிகள் அதற்கென ஆகக்கூடிய காலம் என்று எல்லாவற்றையும் மனதில் பட்டியலிடுங்கள். இந்த வழிகளை பலப்படுத்திக் கொண்டால் இலக்கை தொட்டுவிட  முடியுமா என்று உங்கள் மனதை கொஞ்சம் கேளுங்கள். அதன்பின் அசாத்தியமான நம்பிக்கையுடன் உங்கள் கனவை… இலக்கை..  எட்டுவதற்கான எல்லா முயற்சிகளையும் முழு வீச்சில் பிரயோகியுங்கள்.
உங்கள் உள்மனதில்  துல்லியமாகத் தெரிவதுதான் நாளைய நிஜம். உண்மையில் ஒவ்வோர் இலக்குமே ஒரு ஓவியம் போன்றதுதான்! கோடுகளுக்கு உயிர் கொடுக்கும் சிரத்தையான பணி அது.
எட்ட வேண்டிய உயரத்தை நோக்கி, மெல்ல.. மெல்ல.. படிப்படியாய் முயல்வது மிக உறுதியான எச்சரிக்கையுடன் காலெடுத்து வைக்கும் மெதுவான முன்னேற்றம் என்பதே அதன் பொருள்.
சிறந்த கல்வியாளராக வேண்டுமா? சிரத்தையுடன் படியுங்கள். படித்தவற்றை பிறருடன் பகிருங்கள். இது நினைவாற்றலை வளர்க்கும். உங்கள் இலக்கு என்னும் கரை கொண்டு சேர்க்கும்.
பிரபல எழுத்தாளராக வரவேண்டுமா?  நாள்தோறும் பல பக்கங்கள் ஈடுபாட்டுடன் படியுங்கள். பிற மொழி எழுத்துக்களை மொழிப்பெயர்த்துப் பாருங்கள். அதைவிட முக்கியம் வாழும் சமூகத்தை உற்று நோக்குங்கள்.
இப்படி படிப்படியாய் மேற் கொள்கிற முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்ற சிகரங்களை நோக்கி நகர்த்திக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு நாளும், நீங்கள் எடுத்த முயற்சிகள் என்னென்ன, அந்த முயற்சிகளால் கிடைத்த முன்னேற்றங்கள் என்னனென்ன என்பதை பட்டியலிட்டுக் கொண்டே வாருங்கள்.
கடந்து வந்த தூரம்.. அது தரும் இன்பத்துக்கும், அடைய இருக்கும் எல்லையைக் குறித்த உற்சாகம் தரும் மகிழ்ச்சிக்கும் ஈடு இணை எதுவும் கிடையாது.
நீங்கள் எட்ட நினைக்கும் இலக்கைத் தொடுவதென்று நீங்கள் (Fixed) 'முடிவு' செய்துவிட்டால், உங்கள் முன்னேற்றம் அதன்பின் ‘Non Stop’தான் போங்கள்! அது யாருக்காகவும்.. எதற்காகவும் நிற்பதில்லை... மாறாக நீங்களாகவே வலிய நிறுத்தினாலே தவிர!
பிறகென்ன பாஸ்? ம்.. ஸ்டார்ட்.. ஓடுங்கள்! இலக்குகள் என்னும் வெற்றிகளை நோக்கி!