NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Tuesday, October 30, 2012

உக்கிரமான விமானத் தாக்குதல்கள்




சிரியாவின் சர்வாதிகார அரசு இதுவரையும் இல்லாத அளவுக்கு மூர்க்கத்தனமாக வான்தாக்குதல்களை தொடுத்திருக்கிறது.

அதிகாலையில் சிரிய நாட்டின் பல பகுதிகளில் 48 முறை தொடர்ந்து 4 மணிநேரம் போர் விமானங்கள் குண்டுமாரி பொழிந்தன. "இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மிகவும் கடுமையானது!"-என்கிறார் வாட்ச் டாக் மனித உரிமை அமைப்பின்  இயக்குனர் ரமி அப்துல் ரஹ்மான்.

Monday, October 29, 2012

பற்றி எரியும் சிரியா..! செயல் முடங்கிப் போன ஐநா..!!

இன்றைய கருத்துப்படம்:


Sunday, October 28, 2012

மாலாலாவை சுட்டது யார்?

அக்டோபர் 7, பாகிஸ்தானின் தஹ்ரிகே இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் 'வஜிரிஸ்தான்' பகுதியில் நடத்திய அமைதிப் பேரணி உலக மக்களின் நிச்சயம் கவர்ந்திருக்கும்.

தாலிபான்களைச் சாக்கிட்டு பாகிஸ்தான் எல்லைப்புறங்களில் பழங்குடியினர் வசிப்பிடங்களில் அமெரிக்க நடத்திவரும் வான்தாக்குதல்களைக் கண்டித்து நடத்தப்பட்ட பேரணி அது.

'மனம் கனக்கும் அந்த மரணம்!'

தாஃவத் உருது வாரமிருறை பத்திரிகையின் 'செய்தி கண்ணோட்டம்' - என்ற தலைப்பில் வெளியான 'நேரடி மொழிபெயர்ப்பு - 'அந்த மரணம் குறித்த வருத்தம் ஏன்?' என்பதை முழு தலையங்கத்தையும் உள்வாங்கி படிக்கும் போது மறைந்த முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சனன் ஜீ யின் மரணம் படிபபோர் எல்லோரையும் உண்மையில் மனம் கனக்க வைக்கும்.
செப்டம்பர் 20-22, 2012 இல் வெளியான இந்தத் தலையங்கத்துக்கு முன் தாஃவத் பத்திரிகையில் அதன் முதுநிலை ஆசிரியர் பர்வேஸ் ரஹ்மானி 29 ஆகஸ்ட் - 01 செப்.2012 இல், இதே தலைவரைக் குறித்து ஒரு தலையங்கம் தீட்டியது குறிப்பிடத்தக்கது. அந்தத் தலையங்கத்தின் தலைப்பு 'சுதர்ஸன் அவர் நமாஸ் ஈத்' (சுதர்ஸனனும் பெருநாள் தொழுகையும்).

இந்த தலையங்கங்கள் இரண்டுமே இறைவனின் திருச் செய்தியை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாமலேயே ஒரு ஆத்மா தன் இறைவனை அடைந்தது குறித்து பெரும் கவலையிலானது.

அழைப்பாளனின் கனத்து பெருமூச்சும், புடைத்து விம்மும் இதயமுமாய் எழுத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.

சுருக்கமாக, வாசகர் மத்தியில் தாஃவத் என்றழைக்கப்படும் 'ஷெஹ்ரோஸா தாஃவத்', 1953 இல் ஆரம்பிக்கப்பட்ட நீண்ட நெடிய பாராம்பர்யம் கொண்டது.

இந்தியா முழவதும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்களைக் கொண்ட பத்திரிகை. ஆண்டு தோறும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடுநிலையான, நேர்மையான, ஒளிவுமறைவற்ற விமர்சனங்களால் நடுத்தர மக்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், இஸ்லாமிய பேரறிஞர்கள் என்று பலதரப்பட்ட வாசகர்களைக் கொண்ட இந்தியாவின் முக்கிய வாரமிருமுறை ஏடு.

இஸ்லாம் சம்பந்தமான ஆக்ககரமான கட்டுரைகளை, செய்திகளை தாங்கி வருவது இதன் பிரத்தேயகத்தன்மை எனலாம்.

ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களின் ஒரே பிரதிநிதி 'தாஃவத்' என்று கூட இதைச் சொல்லலாம்.

அத்தகைய ஒரு பாரம்பர்யம் மிக்க பேரறிஞர்களை ஆசிரியர் குழுவாக கொண்ட பத்திரிகையின் மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சனன் குறித்த தலையங்கம் தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு வார பத்திரிகையில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது வேதனையானது.

இதே வார இதழில் பல ஆண்டுகள் சிறப்புச் செய்தியாளனாக பணியாற்றிய அனுபவமுண்டு. அதன் ஆசிரியர், "இந்த புலனாய்வு செய்தி திரட்டுவதற்கு பொருத்தமானவர் இவர்தான்!"- என்று சொல்லுவதுண்டு. வாரஇதழுக்கு வரும் செய்திக்கான முதல் தகவல்களாக வரும் போஸ்ட் கார்ட் மற்றும் இண்லாண்ட் லட்டர்களில் இதையே - ''பொருத்தமானவர் இவர்தான்!''- என்று எழுதி தன் கைப்பட அதை என்னிடம் சேர்ப்பதும் உண்டு.

தகவல்களை.. பிரச்சினைகளை சரிப்பார்க்க அடுத்த நாள் கிளம்பும் ஒவ்வொரு தருணமும் பின்னிரவு தொழுகைகளில் நபிகளாருக்கு திருக்குர்ஆன் கற்றுத் தந்த அந்த பிரார்த்தனைதான் நெஞ்சு முழுக்க எழும்.

அது இந்தப் பிரார்த்தனை இதுதான்: "என் இறைவனே, நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும், உண்மையுடன் கொண்டு செல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன் வெளியேற்றுவாயாக!"

நபி பெருமானார் மக்காவைத் துறந்து மதீனா நகருக்கு செல்வதற்கு முன்பாக ஓதிச் செல்லும் பிரார்த்தனை இது.

தகவல்களை சேகரிக்கச் செல்லும் போது மிக மிக நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதன் கவலையின் வெளிப்பாடுதான் இந்தப் பிரார்த்தனையின் நோக்கம்.

அதேபோல, யாரைக் குறித்து குறைச் சொல்லப் போகிறோமோ செய்தி வெளியிடப் போகிறோமோ அவர்தான் நமது முதல் இலக்கு. அவரது வாக்குமூலத்தை, கருத்தைப் பதிவு செய்யாமல் பத்திரிகையில் அந்த செய்தியை வெளியிடுவது பத்திரிகை விழுமியங்களுக்கு எதிரானது; இஸ்லாமிய பண்புகளுக்கு விரோதமானது.

இந்த அளவுக்கோளை முன் வைத்து, கட்டுரையைப் பிரசுரித்திருக்கும் முன் தாஃவத் தலையங்கத்தை படித்திருக்க வேண்டும். புரியாத பகுதிகளை கேட்டு தெரிந்திருக்க வேண்டும். தாஃவத் ஆசிரியரின் கருத்தையும் சேர்த்து பெட்டி செய்தியாக வெளியிட்டிருக்க வேண்டும்.

மற்ற பத்திரிகைகளுக்கும் முஸ்லிம் பத்திரிகைகளுக்கும் மிகப் பெரும் வித்யாசம் இருக்கிறது. நம்பகத்தன்மை. வாய்மை ஆகிய பண்புகளே அவை.

"நாம் பொய் சொன்னால்... இந்த பாயானுங்க உண்மையை புட்டு புட்டு வெச்சுடுவானுங்க..!" - என்று பிற பத்திரிகைகள் நம்மைக் கண்டு அஞ்சும் விதத்தில் நம்மிடையே இருக்க வேண்டிய வாய்மை மிக்க பண்புகள் அவை.

இந்த நேர்மைக்கான பய உணர்வை கேரளத்தில் இன்று மாத்யமம் ஏற்படுத்தி இருக்கிறது!

யாராவது அஙகே பொய் சொன்னால்.. அடுத்த நாளே மாத்யமம் அதன் உண்மை நிலையை எடுத்து வைத்துவிடும்.

அடுத்ததாக, தாஃவத் பத்திரிகையின் தலையங்கத்தைத் தொடர்ந்து, நமது தேசியப் பத்திரிகைகள் குறிப்பாக, 'இண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி இண்டியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இண்டியா இன்னும் பல பத்திரிகைகள் பெரியளவில் தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.

வணிக யுக்திக்கான அந்தத் தலைப்புகளை நீக்கிவிட்டு (தமிழக வார ஏட்டில் எழுதியவர்கள் ஒருவேளை இந்தத் தலைப்பை பார்த்து எழுதிவிட்டார்ளோ என்னவோ) படித்தால்... மிக அற்புதமான செய்திகள் அவை. எந்த கூட்டலும், சேர்த்தலும் அவற்றில் இல்லை.

இதுவரை இந்த பகிர்மான அரங்கில் வெளிப்படாத, பல தகவல்களை அவை வெளியிட்டுள்ளது முக்கியமானது.

தாஃவத் மற்றும் பிற பத்திரிகைளில் வெளிவந்த மொத்த செய்திகளைத் திரட்டி அதன் கருத்துப் பிழிவை எடுத்தால்...

<<<<< மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சனனுக்கு இஸ்லாத்தின் திருச் செய்தி 1975 இல்,எட்டியது.

<<<<< எமர்ஜென்ஸியின் போது, ஜமாஅத் தலைவர்களும், ஆர்எஸ்எஸ் தலைவர்களும் தடைச் செய்யப்பட்ட இயக்கத்தினராக அறிவிக்கப்பட்டு ஒரே சிறையில் .. ஒரே அறையில்... அடைக்கப்பட்ட காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது.(டைம்ஸ் ஆஃப் இண்டியா இதை அழகாக செய்திகளூடே ஒரு பாராவில் வெளியிட்டுள்ளது.)

<<<<< யூஸீஃப் நபியின் சிறைக்குள்ளான அழைப்பியல் முறைமையை ஜமாஅத் தலைவர்கள் கையாண்டதன் விளைவுதான் ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சனின் மனமாற்ற தடுமாற்றங்கள்.. அதை அவர் வெளிப்படுத்த முடியாமல் சுற்றி இருந்த வேலிகள், மனநிலை பாதிக்கப்பட்டவராக பிரச்சாரங்கள் எல்லாம்.

இவற்றை மீறி அவர் போபாலின் 'தஆஜுல் மஸ்ஜிதில்' ஈகைத் திருநாள் அன்று தொழவிரும்பியதும்! முஸ்லிம்களுக்கு வாழ்த்துக்கள் கூற விரும்பியதும்!!

சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகாமலிருக்க.. அல்லது அவரது எண்ணத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கப்பட.. அவர் முஸ்லிம் சகோதரர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று இனிப்பு உண்டது அவருடைய குடும்பத்தாருக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் சொன்னது.

தஆஜுல் மஸ்ஜித் என்பது சாதாரணமான பள்ளிவாசலாக கருதினால் ஏமாந்து போனவர்களாவீர்கள்.

வரலாற்று சிறப்பு மிக்க பள்ளிவாசல் அது. ஆயிரக்கணக்கானோர் தொழுமிடம் கொண்டது!

போபாலின் மூன்றாம் பெண் ஆட்சியாளர் ஷாஜஹான் பேகத்தால்... 1877 இல், கட்டப்பட்ட உலகின் மிகப் பெரிய பள்ளிவாசல்களில் மூன்றாம் இடம் வகிப்பது. அந்த அம்மையாரின் மரணக் காலம்வரை அதாவது 1901 வரை பள்ளிவாசல் கட்டுமானப் பணிகள் முழுமையடையாமலேயே இருந்தன. பள்ளிவாசலுக்கான ஒதுக்கீட்டுத் தொகை வேறு பல நலத்திட்டங்களுக்கு செலவிடப்பட்டுவிட்டது.அதனால், பள்ளிவாசல் கட்டுமானப் பணிகள் 1971 வரை நிறைவடையாமல் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டைக் கொத்தளம் போன்ற கம்பீரத் தோற்றமும், வெங்காய வடிவிலான வெள்ளை வெளேர் நிறத்திலான மூன்று டூம்களும், செம்மண் நிறத்திலான வானுயர நெடிது வளர்ந்த இரண்டு மினாராக்களும் இதன் அழகுக்கு அழகூட்டுபவை.

அதிகாலையில், இருளைக் கிழித்துக் கொண்டு ஒலிக்கும் வைகறைத் தொழுகைக்கான அழைப்பொலிக் கேட்டு யாரும் தொழுகைக்காச் செல்லாமல் இருக்க முடியாது.

இத்தகைய ஒரு மசூதியில்தான் சுதர்சனன் ஜீயும் தொழ விரும்பியதும், சக சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் கூற நினைத்ததும்.

ஆக அவருடைய ஆசைகள் நிறைவேறாமலேயே அவர் தன்னை இன்னார் என்று வெளிப்படுத்திக் கொள்ள முடியாமலேயே மரணமுற்றது யாராக இருந்தாலும் கவலைக் கொள்ளவே செய்யும்.
                                                       

Saturday, October 27, 2012

பரம்பொருள் ஒன்றெனப் பறைச்சாற்றும் பயணம்





பகுத்தாய்தலும், அதன் அடிப்படையில் எல்லாவற்றையும் மறுத்தலும், பகுத்தாய்ந்த அந்த இருத்தல் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்தலும்தான் சத்தியசோதனையாகும்! அதுவும் அந்தஆழ்ந்த தேடலில் கிடைக்கும் நிஜம்தான் பரம்பொருள் என்பது! "கேட்க முடியாத... பார்க்க முடியாத.. எந்தச் செயலையும் சுயமாக செய்ய முடியாத படைப்புகளை வணங்குவதேன்?" ஆணித்தரமான அந்தக் கேள்விகளின் வீச்சில் சமூகமும், பெற்றோர்.. உற்றார் - உறவுகளும் நிலைகுலைந்த
ு போகின்றன..
<><><><><><><><><><><><><><><><><><><><><>
ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புப் பகிர்வு:
````````````````````````````````````
பரம்பொருள் ஒன்றெனப் பறைச்சாற்றும் பயணம்
`````````````````````````````````````````````````
மனித இனத்துக்கு நேர்வழி காட்ட தனது திருத்தூதர்களை அனுப்பி வைத்தான் இறைவன். மனித இனத்திலிருந்தே தோன்றிய அந்த உத்தமர்கள, நல்வழியில் நடப்போருக்கு நற்செய்தியையும், தீயவழியில் உழல்வோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கையும் செய்தார்கள்.