NewsBlog

Wednesday, August 26, 2020

பையன்னா பரவாயில்ல; பொண்ணுன்னா செலவா?

 

"யார் மூன்று பெண் குழந்தைகள் அல்லது சகோதரிகளுக்குப் பொறுப்பேற்று அவர்களுக்குக் கல்வி, ஒழுக்கத்தைப் புகட்டி, அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை கருணையுடனும், பரிவுடனும் அவர்களிடம் நடந்து கொள்கிறார்களோ அத்தகையோருக்கு இறைவன் சுவனத்தைக் கடமையாக்கிவிட்டான்” – என்று நபிகளார் கூறினார். அப்போது, அங்கிருந்தவர்களில் ஒருவர், ”ஒரு பெண் குழந்தை இருந்தபோதும் இந்த உயர் பதவி கிடைக்குமா? இறைவனின் திருத்தூதரே?” – என்று கேள்வி எழுப்ப, ”ஆம்..!” – என்று ஆமோதிக்கிறார் நபிகளார். இத்தகைய உயரிய பெற்றோரின் சுவனச்சீட்டுகளாக இருக்கும் பெண் குழந்தைகள் நடப்பைக் குறித்து விளக்கியிருக்கிறார் புளியங்குடி சையத் அலி 
 
''''''''''''''''''''''''
என்னங்க நாலாவதும் பொண்ணா?"

"நாலும் பொட்டப்புள்ளையா பெத்து வெச்சுருக்கீங்க கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டா யார் உங்கள பாத்துக்குவா, இதுக்குத்தான் பையன் வேணும்ங்கறது"

"என்ன இருந்தாலும் குடும்பத்துக்கு வாரிசு வேணாமா?"

"பொம்பளப் புள்ளைக வேணுந்தான் ஆனாலும் கடைசி வரைக்கும் பசங்க தான் வருவாங்க"

இந்த சொல்லாடல்கள் எல்லாம் கிராமப்புறங்களைத் தாண்டி, ஹைடெக் சிட்டிகளான பெருநகரங்களில் பேசப்படுகின்றன.

கொஞ்ச நாள் முன்னாடி கூட விஜய் டிவி ‘நீயா நானால’ "பெண்களுக்கு சொத்து பிரிச்சு குடுக்கறது" சம்பந்தமா தலைப்பில விவாதம் நடந்துச்சு. வீட்டுல மூத்த ஆம்பளைங்கனு பேசுன பசங்கள்ள பாதி பேர் "அதான் கல்யாணத்துக்கு செய்றோம்ல அப்பறம் வந்து சொத்துல பங்கு கேக்கக் கூடாதுனு பேசுனாங்க".

“அப்ப உன் பொண்டாட்டிக்கும் இதே பார்முலாவை அப்ளை பண்ணிடலாம்லனு யாராச்சும் கேட்ருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.

ஆனா, யாரும் கேட்கல.

பெண் குழந்தைகள் எல்லாம் இவங்களப் பொறுத்த வரைக்கும் பாரம், வீண்செலவு, தண்டச் செலவுனு சொன்னா சரியாருக்கும்.

இதுவே ஆம்பளப் பயலுகளுக்குனா அது முதலீடு, ஃபிக்ஸ்ட் டெபாசிட் மாதிரி. இப்ப செலவு பண்ணாலும் பின்னாடி அவன வெச்சு ஒரு வியாபாரம் பாத்து, விட்ட காசப் பிடிச்சர்லாம்னு ‘காம்பிளிங்’ (Gambling) கணக்கா பேசுவாங்க. பேசறதோட மட்டுமில்ல; அதுதான் இப்ப வரைக்கும் நடைமுறையிலும் இருக்கு.

என் மகனுகென்ன கொறச்சல்? 50 பவுன் நகை கூட இல்லாம ஏன் கல்யாணம் பண்ணனும்னு? - பேசற தாய்மார்கள்,

“ஒன்னும் இல்லாத இடத்துல கல்யாண பண்ணா குறை இருக்குனு நெனச்சுருவாங்க. ஒத்தப் புள்ளைய வெச்சுருக்கேன் அவனுக்கு இல்லாததா? அவனுக்கு செய்யாததா?” அப்டினு மடில போட்டு தாலாட்டுவாங்க.

சரிதான்! இதெல்லாம் தாய்மார்கள் டிபார்ட்மெண்ட்.

"நான் படிக்காதத என் மகன் படிக்கணும்!”

“எனக்கு கிடைக்காதது என் மகனுக்கு கிடைக்கணும்!”

“சொத்து சேக்கணும்"

இந்த தாறு-மாறு கனவுகள் எல்லாம் தகப்பன்களோட டிபார்ட்மெண்ட்.

ரெண்டாவது படிநிலைகள் நான் சொல்றது. இதுவே வீட்ல ஒரு பொண்ணு ஒரு பையன்னா, அந்தப் புள்ள பெருசோ, சிறுசோ இவன் சொல்றதக் கேட்டுத்தான் நடக்கணும். அவனுக்கு தெரியாததா உனக்கு தெரிஞ்சுடும்? அவன் நாலு இடத்துல சஞ்சரிப்பவன்னு வசனம் பேசுவாங்க.

ஒரு காலத்துல பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊத்தி கொல்றதையெல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க. இப்போ, அந்தளவுக்கு சீரியஸா இல்லனா கூட, இவங்க பொம்பளப் புள்ளைகள ட்ரீட் பண்ற விதத்துக்கே முதல்ல கேஸ் போட்டு உள்ள தள்ளணும்.

படிக்காதவன் தான் இப்படியெல்லாம் பண்ணுவான்னு நீங்க தீவிரமா நம்புனீங்கன்னா, கடைசி வரைக்கும் அப்டியே தான் நம்பணும். ஏன்னா படிச்சவங்க கொஞ்சம் டீசன்ட்டா சுத்துவாங்க இதோ இப்படி: “கஷ்டப்பட்டு ஒரு டிகிரி படிக்க வெச்சுட்டேன்; கட்டிக் குடுத்தா போதும்னு”

கள்ளிப்பால் கொடுத்து கொன்ன காலகட்டத்துல இருந்து வெளிய வந்துட்டோம்னு சந்தோஷப்பட்டுக்கலாம் தான். ஆனா இப்பவரைக்கும் பையன்னா பரவால்ல; பொண்ணுனா செலவளிக்கனும்னு யோசிக்கிற 80% பேர் இருக்கத்தான் செய்றாங்க.

குழந்தைகள் உங்க கௌரவத்துக்கான அடையாளம் இல்ல. அது உங்களால் இந்த உலகத்துக்கு வந்த ஒரு உயிர் அவ்வளவுதான்! பெத்துட்டீங்கங்கறதுக்காக உங்க கௌரவத்தையெல்லாம் அவங்க தலைல கட்டாதீங்க! உங்க ஆசையெல்லாம் அவங்க மேல திணிக்காதீங்க! எல்லாத்தையும் தாண்டி ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் ஒண்ணுதான்! தராசுல வெச்சு இது ஒசத்தியான புள்ள; இது மட்டமான புள்ளன்னு எடை போடாதீங்க!
''''''''''''''''''''''''''''''

நன்றி:  புளியங்குடி சையத் அலி (https://www.facebook.com/puliangudiseyad.ali)


0 comments:

Post a Comment