NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Friday, November 30, 2012

அமிலாபிஷேகங்களில் கருகும் தேவிகள்!

 அந்த இருண்ட இரவு அவளுடைய வாழ்க்கையையே இருட்டாக்கி விடப்போகிறது என்பது உண்மையிலேயே தெரிய நியாயமில்லைதான்! அன்றைய நித்திரைதான் அவளது சுகமான கடைசி நித்திரை எனபதையும் அவள் அறியமாட்டாள்! நடு இரவில் கதவை உடைத்துக் கொண்டு நுழைகிறது ஒரு கூட்டம். அவள் எழுந்திருக்காதவாறு அழுத்தி கைக்கால்களைப் பிடித்துக் கொள்கிறது. முகம் முழுக்க அந்த 'தேவிக்கு' அமிலாபிஷேகம் நடத்தப்படுகிறது....

Thursday, November 29, 2012

எதிர்காலம் தொலைத்துவிட்ட இளையபாரதம்!

"இன்றைய குழந்தைகளே நாளைய குடிமக்கள்!"- என்றார் பண்டித ஜவஹர்லால் நேரு. இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் எதிர்காலம் தொலைத்துவிட்ட இருள்படிந்த முகத்தினர் என்பதும், புத்தகம் சுமக்க வேண்டிய கைகள் ஸ்பேனர், சுத்தியல் என்று அழுக்குப் படிந்தவர்களாய்  மாறிவருகிறார்கள் என்பதும் சத்தியம். உலகில் இருக்கும் 10 ஆயிரம் மில்லியன் குழந்தைத் தொழிலாளர்களில் இந்தியாவில் இருப்போர்...

Wednesday, November 28, 2012

மறக்கடிக்கப்பட்ட மகாகவி!

'அம்மா நாள்! ஆயா நாள்!!' - என்று ஆளாளுக்கு சிறப்பு நாட்களை நிர்ணயித்துக் கொண்டு உலகம் முழுக்க வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டிருக்க.. சத்தமில்லாமல் நவ.09 கடந்துவிட்டது. ஆம்! ஒரு மாபெரும் கவிஞரின் ... பழுத்த தேசபக்தரின் பிறந்த நாள் அது. இப்படி மறக்கடிக்கப்பட்டதற்கு காரணம்.. அவர் முஸ்லிம் என்பதைத் தவிர வேறு காரணமில்லை.அவர்தான் மகாகவி அல்லாமா முஹம்மது இக்பால்.  1938...

Tuesday, November 27, 2012

காஸா 2012

காலச்சக்கரம் மீண்டும் சுழன்றுள்ளது! டிசம்பர் 2008 இதோ.. நேருக்கு நேர் படக்காட்சிகளாய்! சில பாத்திரங்கள் மட்டுமே மாறியுள்ளன. 'எஹீத் ஒல்மார்ட்' இருந்த இடத்தில் 'பெஞ்சமின் நெதன்யஹீ'.  'ஹோஸ்னி முபாராக்' ஆட்சிகாலத்தில், கெய்ரோவில் இருந்தவாறு காஸாவாசிகளை தனது ஆள்காட்டி விரலைக் காட்டி, கடுமையாக மிரட்டிய  இஸ்ரேலின் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சரும் காதிமா கட்சியின்...

Monday, November 26, 2012

மறக்கடிக்கப்பட்ட ஒரு மகாகவி!

விரைவில் எதிர்பாருங்கள்.....

Sunday, November 25, 2012

முஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரணம் என்ன? - பகுதி - 2

"முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதற்கு  யார் காரணம்? பின்தங்கியிருக்கிறார்கள் என்று த.மு.மு.க உட்பட பலரும் கூறுகிறார்கள். படிக்க வேண்டாம் என்று இவர்களை யார் தடுத்தார்கள்?" (இராம கோபாலன் -16.07.1999, விஜய பாரதம்)  இந்தக் கேள்வி வலுவானது. கேட்பவர் இராம கோபாலன் என்பதாலேயே கேள்வியில் நியாயமில்லை என்றாகிவிடாது.   'இந்த நாட்டில் முஸ்லிம்களை கல்வி கற்க வேண்டாம்...

Saturday, November 24, 2012

முஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரணம் என்ன? - பகுதி - 1

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்தியர் அனைவருக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில் அரசியல் தலைவர்களின் கைங்கரியங்கள், ஆதாயங்கள் இவற்றால்.. அந்த உரிமைகள் சரியாக மக்களிடம் சென்றடைவதில்லை என்பதே உண்மை. களையக்கூடிய குறைபாட்டை முன்னிறுத்தி ஒட்டுமொத்த அமைப்பையும் குறை சொல்வது சரியல்ல. லஞ்சம், ஊழல், லட்சியமற்ற அரசியல்வாதிகள்,...

Friday, November 23, 2012

செங்குருதியால் நனைந்த கர்பலா!

 அது ஹஜ்ஜுக் காலம். ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கள் கூட்டம் கூட்டமாக அருள்மாரி சொரியும் மக்கா மநாகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.  "வந்துவிட்டேன்! இறைவா! வந்துவிட்டேன்!" - ஹாஜிகளின் முழக்கம் விண்முட்ட எழுந்தது.  அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் கஅபாவை நோக்கி நடக்கிறார். எண்ணங்களை ஒருமுகப்படுத்தித் தொழுகிறார். அதன் பின் இரு கரங்களையும் விரித்து...

Thursday, November 22, 2012

சம நீதியா? ஒரு சார்பா?

அந்த ஆன்மா எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்றுவிட்டது.  ஆம்.. அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார். நான்காண்டுகளுக்கு பிறகு ஏராளமான சர்ச்சைகளுடன் ஒரு மனித வரலாறு முடிக்கப்பட்டது. நீதியின் பெயரால்.. சட்டம் என்ற இருட்டறையில் சட்ட ரீதியான அரசு சார்பான கொலை என்றுகூட இதைக் கூறலாம். இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றியதையொட்டி காங்கிரஸ் மற்றும் சங்பரிவார் கூட்டம் ஆட்டம்...

Tuesday, November 20, 2012

இலக்கில்லாத இளைய சக்தி

ஒருமுறை ரவீந்திரநாத் தாகூர் இப்படி சொன்னார்: "மனிதனிடம், கடவுள் நம்பிக்கை இழக்கவில்லை. அப்படி இழந்திருந்திருந்தால்... அவன் மனிதனைப் படைத்திருக்கவே மாட்டான்!" மனிதப்படைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வரிகள் இவை.  தற்போது நமது நாட்டின் மக்கள் 100 கோடிக்கும் அதிகம். இதிலும் இளைஞர்களின் எண்ணிக்கைதான் அதிகம். உலகளவில் சீனாவுக்கு அடுத்ததாக இந்தியாவில்தான் இளைஞர்களின்...

Monday, November 19, 2012

அதிகாரத்துக்கு எதிரான அறப்போர்

பதினான்காம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட மன்னர்களில் முக்கியமானவன் அலாவுத்தீன்  கில்ஜி. சர்வாதிகாரி. முன்கோபி. பிறர் ஆலோசனைகளை அலட்சியம் செய்பவன். அப்படிப்பட்டவனுக்கு ஷரீஅத் (திருக்குர்ஆன் - நபிபெருமானார் வழிமுறை) ஒளியில் சில பிரச்சினைகளுக்குத் தீர்வ காண வேண்டும் என்ற எண்ணம் ஏனோ எழுந்தது. அன்றைய தலைசிறந்த இஸ்லாமியச் சட்ட வல்லுநராகத் திகழ்ந்தவர் நீதிபதி முகீஸீத்தீன்....

Saturday, November 17, 2012

வெள்ளை மாளிகையின் அந்த வெற்றிக்குப் பின்னால்.. (பகுதி - 2)

அமெரிக்கத் தேர்தல்களையொட்டி அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து ஒரு செய்தி வெளியானது. அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டாவது முறையாக வெற்றிப் பெற்றதை அடுத்து பாகிஸ்தானில் நடைபெற்ற ஏராளமான கண்டன ஊர்வலங்கள் குறித்த  செய்தி அது. ஊர்வலங்களில் அமெரிக்கக் கொடி எரியூட்டப்படுவதால்.. அந்த நாட்டில் அமெரிக்க கொடிகளுக்கு ஏக கிராக்கியாம். இந்தச் செய்தியை ஏஜென்ஸி பிரான்ஸ் வெளியிட்டிருந்தது.  பாகிஸ்தானிய...

Wednesday, November 14, 2012

வெள்ளை மாளிகையின் அந்த வெற்றிக்குப் பின்னால் (பகுதி -1)

அது ஒரு நீண்ட கசப்பான பந்தயம்! அதற்கான செலவோ சுமார் 2.5 பில்லியன் டாலர்கள்! 2012 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களுக்கான அரங்கேற்ற செலவிது! உண்மையிலேயே இரு வேட்பாளர்களுக்கிடையே நடந்த சரியான போட்டியா இது? அல்லது அமெரிக்க தேர்தல்கள் அமைப்பு சரியான ஜனநாயக அமைப்புதானா? இதற்கான விடை காண நாம் முதன் முதலில் செல்ல வேண்டிய இடம் ஒபாமா மற்றும் ரோம்னி கலந்து கொண்ட விவாத மேடைக்கு.. நகர...