NewsBlog

Sunday, January 26, 2014

சிறப்புக் கட்டுரை: 'யார் அந்த வெகுஜனம்; ஆம் ஆத்மி?'


பல ஆண்டுகளுக்கு முன் அப்போது நான்கு வயதான எனது மகள் கேட்டாள்: "அப்பா! இந்த குட்டியூண்டு ஷீக்கள் இங்கே ஏன் கிடக்கின்றன?"

அவள் சுட்டிக் காட்டிய இடத்தில் மலைப் போல காலணிகள் குவிக்கப்பட்டு கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருந்தன. ஏறக்குறைய 80,000 ஜோடி காலணிகள், அவற்றில் 8,000 ஜோடிகள் குழந்தைகளுக்குரியன.

நாங்கள் அப்போது, ஜெர்மனி நாஜிக்களால் நச்சுப் புகையூட்டி கொல்லப்பட்ட அப்பாவிகளின் நினைவுகளை சுமந்தவாறு போலந்தின் 'Auschwitz-Birkenau' அருங்காட்சியகத்தில் இருந்தோம்.


நான் அவளுடைய கேள்விக்கான பதிலைத் தவிர்க்க, கேட்காதது போல வேறு பக்கம் கவனம் செலுத்துவதாய் நடிக்க வேண்டியிருந்தது.

'அவர்கள் நம்மைப் போல வெகுஜனங்கள், பாமர மக்கள் - ஆம் ஆத்மி சிறைக் கொட்டடிகளில் அடைக்கப்பட்டவர்கள்; தம்மைப் போலவே வெகுஜனங்களால்  நச்சுப் புகை அறைக்களில் தள்ளப்பட்டவர்கள்; வெகுஜனங்களான அவர்கள்தான் ஹிட்லரை தேர்வு செய்து அதிகாரமளித்தவர்கள்.

இத்தகைய வெகுஜனங்கள்தான் உகண்டாவில் தங்கள் தாயகத்தின் கிட்டதட்ட பத்து லட்சம் பேரை தனிமைப்படுத்தியவர்கள்.

நரோடாபாட்டியாவில் குழுமி கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று சொந்த அண்டை - அயலாரை உயிருடன் எரித்தவர்கள்.



ஆம் ஆத்மி வென்றபோது, நாமெல்லாம் சந்தோஷமடைந்தோம். ஆம் ஆத்மி என்றால் பொருள் என்ன? சுற்றியும் சேரிகள் சூழப்பட்டு நடுவில் கட்டுப்பட்டிருக்கும் 27 அடுக்கு குடியிருப்புகளா?

ஆம் ஆத்மியை வரையறைப்படுத்த வேண்டிய சூழல் இப்போது. எந்த வாழ்க்கைநிலை அல்லது பொருளியல் அடுக்கு வெகுஜனம் என்பது? இதற்கு விடை கண்டாலும், அடுத்ததாக எந்த விழுமியங்களை வைத்து வெகுஜனம் என்று தீர்மானிப்பது? ஏனென்றால், ஒரு தரப்பு வெகுஜனம் மற்றொரு தரப்பு வெகுஜனத்தை என்ன செய்தது? என்று நாம் ஏற்கனவே வரலாற்றில் கண்டிருக்கிறோம்.

இந்தக் கேள்விகளுக்கு விடை காணாமல் வெறுமனே ஆம் ஆத்மி குல்லாக்களை அணிந்து கொண்டு, "நானும் ஆம் ஆத்மி" - என்று முழக்கமிடுவதால் ஒன்றும் பிரயோசனம் இல்லை.

இனம், வகுப்பு, பாலினம் என்ற அடையாளங்கள் இல்லாத தனிநபர்களாய் யாரும் இங்கு இல்லை. இந்த உண்மையை நாம் அங்கீகரிக்காவிட்டால் ஜனநாயகம் வெறும் சொத்தையானதாகிவிடும்.

மக்கள் என்பதே, ஒருவன் பலரை ஆதிக்கம் செலுத்துவதுதான் என்கிறார்கள் மைக்கேல் ஹார்ட்டும், ஆண்டனியோ நெக்ரியும்.

இத்தகைய இரும்பு கனவான்கள்தான் கூட்டமைப்பாக முடிவெடுக்கும் அதிகார வர்க்கத்தினராக, சர்வாதிகரிகளாக, கொடும் செயல்களின் செயலுருவங்களாக மாறிவிடுகிறார்கள்.

-  NISSIM MANNATHUKKAREN.
Thanks: THE HINDU (26.01.2014)

0 comments:

Post a Comment