NewsBlog

Saturday, January 18, 2014

நடப்புச் செய்தி: '4 வயது சகோதரனை துப்பாக்கியால் சுட்ட குழந்தை!'


விளையாட்டுப் பொம்மைகளாகி விட்டன நிஜத்தில் துப்பாக்கிகள். மலிந்து போன இந்தக் கலாச்சாரத்தால் கல்வி நிலையங்கள் ரத்தமயமாகிக் கொண்டிருப்பது போதாதென்று இப்போது வீடுகளிலும் இதேநிலை! ஆம்! அமெரிக்க சமூக அமைப்பில் மிகைத்துவரும் துப்பாக்கி கலாச்சாரத்தின் விளைவாக சொந்த அண்ணனையே குழந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் இது.

அமெரிக்காவின் டெட்ராய் நகரின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தை 16.01.2014, வியாழன் அன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த தனது 4 வயது சகோதரனை சுட்டுக் கொன்றது. அதிஷ்டவசமாக கூட இருந்த மற்றொரு 5 வயது குழந்தை உயிர் தப்பியது. 


இந்த 3 குழந்தைகளும், தங்களது வீட்டின் படுக்கையறையில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போதுதான் இந்த அசம்பாவிதம் நடந்தது. 

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டெட்ராய்ட் காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி ஆடம் மாதேரா தெரிவிக்கிறார்.


வடக்கு கரோலினாவின் 'பயட் வில்லே'யில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இரண்டு வயது பெண் குழந்தை தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று இறந்துபோனது. அதேபோல, கடந்த அக்டோபர் மாதம் 5 வயது குழந்தை ஒன்று துப்பாக்கியால் சுட்டுக் கொண்டது.

2001 முதல் 2010 ஆண்டுவரையிலான அமெரிக்காவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் துப்பாக்கி சூடு மரணங்கள் 703, படுகாயமடைந்தோர் 7,766.

0 comments:

Post a Comment