NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Sunday, July 7, 2013

ஆய்வுக் கட்டுரை: 'தக்ரீர் சதுக்கத்திலிருந்து தக்ஸீம் சதுக்கம்வரை..'


 
 இந்த இரண்டு சதுக்கங்களை ஒப்பிட முடியாதுதான்!

ஆம்..! எகிப்தின் கெய்ரோ தக்ரீர் சதுக்கத்தையும், துருக்கியின் தக்ஸீம் சதுக்கத்தையும் ஒப்பிடவே முடியாதுதான்! இரண்டும் வெவ்வேறு காரணங்களுக்காக மக்களைத் திரட்டிய சதுக்கங்கள். ஆனாலும், இரண்டையும் ஒன்று போலவே ஒப்பீடு செய்து செய்திகள் வெளியிடுவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன்; அதுவும் வழக்கம் போல ஒரு கோரஸ் குரலில்.

2011 - ஆம், ஆண்டு எகிப்தில் நடந்த மக்கள் எழுச்சி 'அரபு வசந்தம்' என்று பெயர் சூட்டிக் கொண்டது. அறிவு ஜீவிகள் இந்த பெயரைக் கேட்டு சகிக்க முடியாமல் "வசந்தமாம்...! வசந்தம்..!" - என்று நீண்ட நாட்களுக்கு முணு முணுத்துக் கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து துருக்கியரின் போராட்டம் ஆரம்பித்தது. மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். 

மீண்டும் ஒப்பீடு ஆரம்பித்தது.

அறிவு ஜீவிகளின் விமர்சனங்கள் வெளிப்படையாக.. தெளிவாக வெளிப்படாமல் சந்தர்ப்ப வாதங்களாயின. அதுவும் மேற்குலகின் அரசியல் விரிவாக்க திட்டங்களை ஒட்டிய பிரதிபலிப்புகளாகவே அவை விளங்கின.


'அரபு வசந்தம்' அரசியல் ரீதியாக மத்திய கிழக்கத்திய நாடுகளை வடிவமைக்கும் என்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சு போன்ற நாடுகளை பீதிக் கொள்ளச் செய்தது. அதனால் வெடிக்க இருக்கும் மக்கள் புரட்டிசிகளை கண்டு அவை திகிலடையவே செய்தன.

அரபுலக சர்வாதிகாரிகளோ பெரும் பகுதி அமைதி வழியில் போராடிய மக்களை 'நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போராகவே' கருதி இரும்பு கரம் கொண்டு அடக்கலாயினர். அரபு கொடுங்கோலர்களின் இந்த அடக்குமுறை 'NATO' படைகள் தலையிடும்வரை தொடர்ந்தது.

லிபியாவில் இப்படிதான் நடந்தது.  'NATO' படைகளின் வரையரைக்குட்பட்ட ஒத்துழைப்பும்.. சொற்ப அளவிலான ஆயுதம் வழங்கலும் சர்வாதிகாரியின் முழுமையான ஆயுதப்படையினரோடு எதிர்க்க வைத்தது. இதன் விளைவாக ஆயிரக் கணக்கான மக்கள் படுகாயமுற்றனர்... கொல்லப்பட்டனர். ஆயிரக் கணக்கானோர் காணாமல் போயினர். லிபியாவின் மீது நடத்தப்பட்ட போரோ புவியியல் ரீதியாக நிலபரப்பையே பாழாக்கி மாற்றி அமைத்தது. ஒவ்வொரு இனமும் இனப்படுகொலை செய்யப்பட்ட கொடுமையும் நடந்தது. 

மத்திய கிழக்கத்திய நாடுகள் மீதான மேற்கத்திய நாடுகளின் 'மனிதாபிமான' தலையீடு மேற்கத்திய நாடுகளின் தன்னலங்களைக் கொண்ட அரசியல் பாணியாகும். துருக்கியில் அண்மையில் நடந்த மக்கள் போராட்டங்களின் போது இதுதான் நடந்தது. இத்தகைய மேற்கத்திய தலையீடுக்கு வழிவகுத்த நாடுகளில் துருக்கி முதலிடத்தை வகிக்கிறது என்றால் அது மிகையல்ல.

சிரியாவில் குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அரபு வசந்தம் துருக்கியின் மேற்கு பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டது. துருக்கியின் வெளிவிவகார கொள்கையையே இது மறு சீரமைப்புக்கு உட்படுத்தியது. மேற்கத்திய முகாம்களுக்கு அருகில் துருக்கி வரும்விதமாக இது மாற்றியமைக்கப்பட்டது. 'அங்காரா' 'NATO'-வின் கொள்கை கோட்பாடுகளை முழுமையாக பின்பற்ற ஆரம்பித்தது.

'NATO'-வின் கொள்கை - கோட்பாடுகள் நயவஞ்சகத்தனமானவை. 

 
உதாரணமாக, 2011, செப். 17 - இல், 'வால்ட் ஸ்டீரீட் இயகத்தின்' போரட்டத்தை காவல்துறை கடுமையாக இரும்புகரம் கொண்டு அடக்கியது. போராட்டங்களில் ஈடுபட்ட நிரயுதபாணியான மக்களின் மீது மிருகத்தனமான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டு கைதுகளோடு நிற்காமல் அடித்து துவம்சம் செய்தது. போராட்டக்காரர்களை கண்காணித்துக் கொண்டிருந்த 'FBI' மற்றும் 'Department of Homeland Security' படையினரும் இணைந்து ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க அதிரடி படைவீரர்களை ஏவினர். இதை எதிர்த்து 'Naomi Wolf ' கடந்தாண்டு டிச. 29 இல், 'தி கார்டியன் நாளேட்டிலும்' எழுதவும் செய்தார்.

இந்த மேற்கத்திய மனித நேயப் போராளிகள்தான் அண்மையில் பெரும் ஊழலில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் 'National Security Agency' (NSA) பாதுகாப்பு என்ற போர்வையில் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களை ஏவுப்பார்த்ததே அது. இந்த கொடிய குற்றம் உப்பு - சப்பில்லாமல் போனது. இவையெல்லாம் அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளான மேற்கத்திய நாடுகளுக்கும் சகஜமானது. 'தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்!'- என்ற பழமொழிக்கு பேர் போன நாடுகள் இவை. 

அரபு நாடுகள் எல்லாம் போர்களால் சீரழிக்கப்பட்ட நாடுகள் என்ற நிலையிலும், அந்நாடுகளின் மொத்த தலைமுறையும் பாதிக்கப்பட்வர்கள் என்ற உண்மையையும் உணராத அதன் சர்வாதிகார தலைவர்கள் டேவிட் கேமரோனோடும், பிரான்ஸின் 'பிரான் ஓயிஸ் ஹோலண்ட்' மற்றும் பராக் ஒபாமாவுடனும் சேர்ந்து நின்று கையாட்டி மகிழ்ந்து திளைக்கிறார்கள். இஸ்ரேலின் பாதுகாப்பில் இவர்களின் நிகழ்காலம்.. எதிர்காலம் ஆகியவை அடங்கியுள்ளதை இந்த பதவி வெறியர்கள் புரிந்து கொள்வதாயில்லை. 



மேற்கத்திய அதிகார மேலாண்மையே அரபு நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையை தீர்மானிக்கிறது. முஸ்லிம் நாடுகளை இயக்கிக் கொண்டிருக்கிறது.  மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் விதியை தீர்மானிப்பதும் இந்த அளவு கோல்தான்! 

அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசியல் நலன்களையொட்டிய நிகழ்வுகள்தான் அனைத்தும்... தற்போதைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்து அதிபர் மூர்ஸியின் ஆட்சி கவிழ்ப்பு உட்பட! 

ஆனால், பதவி வெறிபிடித்த ஆட்சியாளர்களுக்கும், கொள்கைக்காக அர்ப்பணித்துக் கொண்ட இயக்கவாதிகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடு உண்டு. மலைக்கும் - மடுவுக்கும் இடையிலான வேறுபாடு அது. ஆட்சியாளர்களை அரியணைகளைக் காட்டி விலைக்கு வாங்க முடியும்! பயமுறுத்தி ஒடுக்கவும் முடியும். இயக்கவாதிகளை இப்படி செய்யவே முடியாது. அவர்கள் மீண்டும்.. மீண்டும் களத்தில் நின்றுகொண்டுதான் இருப்பார்கள்; தங்கள் இலக்குகளை எட்டும்வரை!

விருந்தினர் பக்கம்: 'ஓர் இந்துவாகச் சொல்கிறேன்!'


பல நாட்கள் வீட்டில் சாப்பாடு இருக்காது. காலை உணவு என்பது அரிதானது தான். மதியம் பள்ளியில் சத்துணவு. இரவு எப்படியும் சாப்பாடு கிடைத்துவிடும். ரம்ஜான் நோன்பு ஆரம்பித்துவிட்டால் எங்களுக்கு உற்சாகம் வந்துவிடும்.

மாலையானால் சுடச்சுட மூன்று, நான்கு இஸ்லாமியர்களின் வீடுகளில் நானும் அண்ணனும் நோன்புக் கஞ்சி வாங்கி வருவோம். சில சமயம் கஞ்சியோடு வடையும் சமோசாவும்கூட எங்களுக்குக் கிடைப்பது உண்டு. எப்போதாவது யாரேனும் பள்ளிவாசலில் கறிக்கஞ்சி போடுவார்கள். சின்னச்சின்ன கறித்துண்டுகள் மெல்லிசாகக் கஞ்சியில் கிடைக்கும். அந்தக் கஞ்சியை அப்படியே வாய்க்குள் கவிழ்த்து, கறித் துண்டுகளை மென்றுகொண்டே கஞ்சி குடிப்பது அற்புதமாக இருக்கும். அதிலும் நோன்புக் கஞ்சி வாளியைத் திறந்தவுடனே கமகம என்று ஒரு மணம் வரும். இன்னமும் என் மூளைக்குள் அந்த வாசனை மணக்கத் தான் செய்கிறது. அது பசியின் வாசனை. ருசியின் வாசனை.

ஒரு நாள் நான் ஆமினா அக்கா வீட்டுக்கு நோன்புக் கஞ்சி வாங்கப் போயிருந்தேன். கையில் பெரிய வாளி. எனக்கு அப்போது எட்டு, ஒன்பது வயதிருக்கும்.

"எல்லாரும் சொம்புல தானே வாங்குவாங்க... நீ ஏன் இவ்வளவு பெரிய வாளி கொண்டாந்திருக்கே?" என்று என்னிடம் கேட்டாராம் ஆமினா அக்கா. "இதைத் தான எங்க வீட்டுல குடிப்பாங்க. எங்க வீட்டுல சாப்பாடு கிடையாது" என்று சொன்னேனாம் நான். ரொம்பவே சின்னப் பையனாக இருந்ததால் பொய் சொல்லாமல் உண்மை சொல்லியிருக்கிறேன் போல. நான் சொன்ன பதிலைக் கேட்டு ஆமினா அக்கா கண்ணீர் வடித்துவிட்டார். ஒரு எட்டு வயதுச் சிறுவனின் வாயிலிருந்து பசி பற்றிய வார்த்தைகளைக் கேட்க எத்தனை பேருக்குப் பொறுக்கும்?


இந்த வார ஆனந்த விகடனில் வந்திருக்கும் 'நசீர் அண்ணன்' என்கிற சிறுகதையில் தான் மேற்படி பகுதி வருகிறது . சுகுணா திவாகர் எழுதியது. சுற்றிலும் இஸ்லாமியர்கள் வசிக்கும் ஒரு ஏரியாவில் வசிக்க நேர்ந்த ஒரு ஏழை இந்துக் குடும்பத்துக்கும், நசீர் அண்ணன் குடும்பத்தும் இருந்து வருகிற மூன்று தலைமுறையான பிணைப்பைச் சொல்லும் அருமையான கதை. 

கதையில் குறிப்பிட்டது போல் பசிப்பிணியை யார் பொறுத்தாலும் ஒரு இஸ்லாமியர் பொறுப்பதில்லைதான். பசியின் கொடுமையை அறிய வேண்டும் என்பதற்குத் தான் நோன்பே இருக்கிறார்கள், பலபேர் பல மாதிரி சொன்னாலும் உண்மை இது தான். எனக்கு இருக்கிற இஸ்லாமிய நண்பர்கள் பழக்கத்தில் நான் உணர்ந்த விஷயங்களில், அவர்களின் நினைத்துப் பார்க்க முடியாத உதவி செய்யும் குணமும் ஒன்று. 

ஆண்டவனுக்கு பயப்படுதல், கடன் வாங்காதிருத்தல், ஐந்து வேளைத் தொழுதல் இதெல்லாம் கூட இரண்டாம் பட்சம் தான். சம்பாதிப்பதில் ஒரு பகுதியை அவர்கள் தானத்திற்காக எடுத்து வைத்தாக வேண்டும் tax மாதிரி!

அந்தளவிற்கு வசதி இருக்கிறது அதனால் செய்கிறார்கள் என்பதை முற்றிலும் ஏற்க முடியாது, மாறாக முற்றிலும் மறுக்க முடியும். அதைவிட வசதி படைத்தவர்கள் கூட இந்த ஜீவ காருண்யத்துடன் இல்லாமல் இருப்பதைத் தான் நான் வெகுவாகக் கண்டிருக்கிறேன். 



எனக்குத் தெரிந்து இஸ்லாமியர்களில் நாத்திகர்கள் இல்லை. ஆண்டவன் இருக்கிறான் என்பதை அவர்கள் குறுக்குக் கேள்வி கேட்காமல் நம்புகிறார்கள்.

ஒரு எறும்பு எப்படி முயற்சித்தாலும் மனிதனை முழுசாகப் பார்க்க முடியாது. முழுமையாக மனிதனை உணர முடியாது. அது நம்மைக் கடிப்பது கூட வேறு எதையும் கடிப்பது போல ருசி பார்க்கத் தான். மனிதனைக் கடித்து வைப்போம் என்று அது நினைக்க வாய்ப்பில்லை. அதைப் போலத் தான் ஒரு மனிதன் எப்படி முயற்சித்தாலும் ஆண்டவன் என்பவன் முழுதாக உணரமுடியாதவன், கற்பனைக்கு அப்பாற்பட்டவன், முழுதாக நம்பப் படவேண்டியவன் என்று தான் அவர்கள் நம்புகிறார்கள். 



நாமெல்லாம் சித்தெறும்பு என்றால், ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எல்லாம் கட்டெறும்பு அவ்வளவு தான். பிரபஞ்சத்தில் மனிதன் இல்லை என கட்டெறும்பு சொன்னால் சித்தெறும்பு நம்பலாம். மனிதன் இரண்டையும் பார்த்துச் சிரிக்க முடியும்.

அடுத்தவர்களுக்கு உதவுவது என்ற உன்னதமான எண்ணத்திற்கு அடிப்படையாக அமைவது இறை நம்பிக்கைதான். ஒரு இஸ்லாமியனுக்கு இந்த இரண்டு எண்ணமும் பிறவியிலேயே இயற்கையாக அமைந்துவிடுகிறது. சாதாரணமாக ஒரே ஒரு நாள் கூட இருக்கமுடியாத, எச்சில் கூட விழுங்காமல் இருக்கும் அந்த விரதமானது அவர்களுக்கு சாத்தியப்படுவது வைராக்கியத்தினால் அல்ல... அசைக்க முடியாத நம்பிக்கையினால்.

ஓர் இந்துவாகச் சொல்கிறேன்.. ஒர் இஸ்லாமியன் அவன் சார்ந்த மதம் குறித்து ஆயுள் முழுதும் பெருமைப் பட்டுக்கொள்ள ரம்ஜான் நோன்பு ஒன்று போதும்.

      
-சிவக்குமார் அசோகன்













-சிவக்குமார் அசோகன்

Sunday, June 30, 2013

என் கேள்விக்கு என்ன பதில்: "இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியல்லவா?”

ஒருமுறை அமிர்தஸரில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் அல்லாமா ‘ஷிப்லி நுஃமானி’ (ரஹ்) அவர்கள் ‘மகளிர் உரிமைகள்’ பற்றி சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இஸ்லாம் பெண்களுக்கு நியாயமான… நிறைவான உரிமைகள் வழங்கி இருப்பதையும், அதில் ஆண் – பெண்ணுக்கு இடையே எந்த பாராபட்சமும் காட்டவில்லை என்பதையும் மௌலானா விவரித்துக் கொண்டு வந்தபோது, இடையே ஒருவர் ஒரு கேள்வியை எழுதி மேடைக்கு அனுப்பினார்.
 
“இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் பெண்களுக்கு ஆண்களைவிட ஒரு பங்கு குறைவாக வழங்கப்படுகிறதே! இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியல்லவா?” – இதுதான் கேள்வி.
மெளாலான அவர்கள் இப்படி பதிலளித்தார்கள்:
“உண்மையில், இதில் பெண்களுக்கு எந்தவிதமான உரிமை இழப்பும் இல்லை.
நேர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால் ஆணுக்குச் சமமான பங்கு பெண்ணுக்குக் கிடைக்கிறது என்பது மட்டுமல்ல.
இந்த வாரிசுரிமைச் சட்டம் அவளுக்கு லாபகரமாக இருக்கிறது.
எப்படியென்றால்..
சொத்தில் ஒரு பங்கு ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் கிடைக்கிறது. ஆகவே அவளுக்குக் கிடைத்த சொத்துப் பங்கு அப்படியே தனியாக இருக்கும்.
அதேபோல, திருமணத்தில் கிடைத்த மஹர்த் தொகையும் அவளுடையதே!
ஆனால், சொத்தில் இரண்டு பங்கு பெற்ற ஆண் அவன்,
  • தனக்காகவும்
  • தன் மனைவிக்காகவும்
  • குழந்தைகளுக்காகவும்
  • பெற்றோருக்காகவும்
செலவழிக்க வேண்டும்.

இப்பொழுது சொல்லுங்கள்; சொத்தில் கிடைத்த பங்கின் மூலம் அதிக லாபம் பெறுவோர் யார்?"
இந்த பதிவுக்காக முகநூலில் வந்த கமெண்ட்: அடக்கடவுளே! என்னா ஒரு நியாயம்? (Adak kadavule! Enna oru Niyayam.!)

பதில்: அன்புள்ள (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) அய்யாவுக்கு, இந்த பதிவில் வாரிசுரிமை - சொத்துரிமை சம்பந்தமான ஒரு முக்கிய கேள்விக்கான பதில் உள்ளது. பதில் அளித்தவர் தலை சிறந்த அறிஞர் பெருமக்களில் ஒருவர். இந்த தீர்வை அல்லது பதிலை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், சிறு பிள்ளைத் தனமாக 'கமெண்ட்' அடிப்பதற்கு பதிலாக அறிவார்த்த ரீதியாக இந்த கேள்விக்கான தீர்வை அளித்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன். ஒருவேளை பொறுத்தமான தீர்வாக அது இருந்தருந்தால் நான் ஏற்றுக் கொண்டிருப்பேன்கூட. ஆனால், மாற்று தீர்வு சொல்வதற்கு பதிலாக கிண்டலடித்து சென்ற லட்சக்கணக்கானோரை காலம் தன்னுள் புதைத்துக் கொண்டுள்ளது. படைத்தவன் தன் படைப்புகளுக்காக அளித்துள்ள அருள் மார்க்கம்தான் இஸ்லாம். உலகின் நான்கு பேரில் ஒருவர் பின்பற்றும் மார்க்கம்.உங்களைவிட மெத்த படித்த பேரறிஞர்கள் முதல் கடைநிலை பாமரன்வரை ஏற்று தனது வாழ்வில் செயல்படுத்தும் மார்க்கம். அதனால், விமர்சனம் என்ற போர்வையில் கிண்டலடிப்பதைவிட நல்ல தீர்வுகளை தாங்கள் சொல்வீர்கள் என்று நம்புகின்றேன்.

கேள்வி:  Mannikkavum Aiyya. Idhu islam sammanthappattadhu enbadharkaga kindal adikkavillai.Endha madham sammandhappattirundhalum idhaiye seithiruppen.Endha poruthamana theervaiyum idhai thandi neengal Yerka povadhillai.Ennudaiya siru pillai thanamana purithal ennavendral oru penn thanakkagavum,than kanavarukkagavum,than kuzhanthaigalukkagavum than petrorukkagavum eduvum seyya thevaiye illai enbadhu ungal mudivu.Penn thanadhu pangai vaangi vaithukkondu aanukku adangiye vazhavendum.enbadhuthan.En mudivu ennavendral Pengalukkana pangai mudivu seyya aangal yaar?Every human being is equal.There should be no gender disparity.Aanum pennum sernthathuthan ulagam,No up no down.You can't be touchy and post things like this in general."Islamiarukku mattum" endru pottirunthal Naan Nichayam Idhil thalai ittirukka matten.I am extremely sorry Had I wounded your religious sentiments.It is my mistake to have taken this as a general economical issue.Besides,You know Majority is running the country ,we know how they do.Nirka,Nambikkaiyin adippadaiyil seyyum edhaipatriyum sammandhapattavaraithavira yaarum pesa mudiyathu,Social,economical endral nambikkai ange koodathu,only scientific ,logical,reasonable solution thaan vendum.Neengal ennai islathukku ethiri endru nambugireergal adhuthan prachinai.Naan podhuvaaga sari endru nambuvathai ,sonnal ivar ketpaar ennum idathilthan solven.Naan Socrates illai,Plato illai,Karl marx,Ambedkar,periyar illai,Budha illai,adhanaal Niraya Bayam undu.

பதில்: அய்யா, நீங்கள் ஒன்று தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்திலாவது சொல்லுங்கள். ஆங்கில எழுத்து கலந்த தழிழை வாசிப்பது எனக்கு கடினமாக உள்ளது. 

அடுத்தது என்னுடைய பதிவில் விமர்சனம் கூடாது என்று நான் எங்கேயும் சொல்லவில்லை. விமர்சனங்களை வரவேற்கிறேன். அது எந்த மத கருத்தாக இருந்தாலும் நையாண்டி வேண்டாம் என்கிறேன். இதில் (நையாண்டியில்) நிச்சயம் உங்களுடன் என்னால் உடன்பட முடியாது. இன்று பொதுவாக ஒரு சிலர் தன்னை எந்த சமய அமைப்பிலும் இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள் தங்களைப் போலவே. எந்த கொள்கைகைளையும் சாராமல் இந்த உலகில் யாரும் வாழ முடியாது. 

ஒவ்வொரு கொள்கையும் .. வாதமும்.. இஸமும்.. ஒரு சமயம்தான்! ஒரு நம்பிக்கைதான்! அறிவியல் என்ற சொல்லெடுத்து கவசம் தரித்துக் கொண்டாலும் அவர்களும் சமயவாதிகள்தான்! கம்யூனிஸ்ட்டுகளுக்கு மார்க்ஸ் தெய்வம் மற்றும் தாஸ் காப்டிலிஸம் வேதம் என்பதைப் போல முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர் பின்பற்றும் இறைவன்களும், வேதங்களும் வெவ்வேறானவை. 

 
அடுத்தது இருபாலரும் சமம் என்று ஒரு கருத்தை வைத்து பெண்ணை போகப் பொருளாக.. பணிச் சுமை மற்றும் குடும்ப சுமை என்று இரண்டு சுமைகளையும் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாக்குகிறார்கள். மேலை நாட்டுப் பெண்கள் இன்று சந்திக்கும் துயரங்களைத்தான் தங்களைப் போன்றோர் தாங்கிப் பிடிக்கிறார்கள். சமம் என்ற போர்வையில் அவர்கள் துயரப்படுவது கட்டாயம் என்கிறீர்கள். எங்களைப் போன்ற பழமைவாதிகள், பாமரர்கள் சொல்லும் அவரவர்க்கான எல்லைகள் என்ற யாதார்த்த கருத்துக்கள், எல்லா கால நடைமுறைக்கும் ஏற்ற கருத்துக்கள் தங்களுக்கு பிற்போக்குத்தனமானவையாக தெரிவதில் வியப்பில்லை. 



சட்டங்களை சொல்ல நீங்கள் யார் என்கிறீர்கள். தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உற்பத்தியின் எல்லா சட்டங்களையும் படைத்தவன் என்ற நிலையில் நீங்கள்தான் வகுக்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். 

மனித இனத்தைப் படைத்த இறைவன்தான் சட்டங்களை சமைக்க முழு தகுதியானவன். இதைதான் இஸ்லாம் சொல்கிறது. அதை ஏற்று நடைமுறைப்படுத்துபவரே முஸ்லிம்கள். 

இஸ்லாமும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களும் பெரும்பான்மை என்னும் இனத்திலிருந்து சிறுபான்மை இனமாக முளைத்தெழுந்த அதிபெரும்பான்மையினர் என்பதை மறந்திட வேண்டாம். அச்சத்திற்கு அப்பாற்பட்ட இனம் இது. எத்தனையோ இன்னல்களை.. இடுக்கண்களை கடந்துவந்தவர்கள்.(சில மாநிலங்களைத் தள்ளி உங்கள் காலத்திலேயே முஸ்லிம்கள் அடைந்த இந்த துன்பங்களை தாங்களும் பார்த்திருப்பீர்கள்) பெரும்பான்மை இனம் ஆட்சிபுரிகிறது என்ற காரணத்துக்காக எங்கள் கொள்கைகளை விட்டுத்தர சொல்கிறீர்களா? என்றும் தெரியவில்லை. 

வரலாற்றில் பதிந்துள்ள ஒவ்வொரு பேரறிஞரும் தனிநபரே! அந்த தகுதி அடைவதற்கு உங்களுக்கும் தடையில்லை! நீங்கள் பேசுங்கள்.. அதிகதிகம் பேசுங்கள்! அந்த பேச்சுக்களை முதலில் உங்கள் குடும்பத்தில் நடைமுறைப்படுத்துங்கள். அடுத்தது உங்கள் உறவினர் வட்டத்தில் மற்றும் தோழமை வட்டத்தில் செயலாக்கப்படுத்துங்கள். வெற்றி உங்களுடையதே! அதேபோல ஒவ்வொரு கருத்தையும் ஆரோக்கியமாக விமர்சனம் செய்யுங்கள். கூடவே தீர்வுகளையும் முன்வையுங்கள். 

எனது கருத்துக்கள் அனைவருக்கும் பொதுவானதுதான். இந்த கருத்துக்களை நான் செயல்படுத்துவதோடு என்னைப் பின்பற்றுபவரும் செயல்படுத்துவதை பார்க்கிறேன். 

மனித இனத்துக்கான எல்லா பிரச்னைகளுக்கான தீர்வுகளும் என்னிடம் உள்ளன. அவை வெறும் எழுத்துக்களாக மட்டுமல்லாமல் ஏற்கனவே செயலருவம் பெற்றவை என்ற உற்சாகத்தோடும் இருக்கிறேன். இறைவன் நாடினால்.. வெகுவிரைவில் செயலுருவம் பெறும் என்றும் நம்புகின்றேன். 

ஏனென்றால் எனது கருத்துக்கள் படைத்தவன் அவன் படைப்புகள் நேர்வழி பெற அருளிய உயர் கருத்துக்கள்!

Saturday, June 29, 2013

விருந்தினர் பக்கம்: 'கிழிந்த பேண்ட்டுக்கு மேல் அணிந்த ஜட்டி!'

 
"உத்தர்கண்ட் மாநிலத்தின் கேதார்நாத் பகுதி இயற்கைப் பேரழிவில் சிக்கிக்கொண்ட குஜராத் புனித யாத்திரைப் பயணிகள் 15,000 பேரை நரேந்திர மோடி மீட்டார். அதற்காக 3 போயிங் விமானங்கள், 80 டொயோட்டா இன்னோவா கார்களை ஈடுபடுத்தினார். மருத்துவக் குழுக்களை விமானம் மூலம் கொண்டுபோய் இறக்கினார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாம்களை அமைத்தார்..." 

..... இப்படியாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டின் ஜூன் 23 இதழில் செய்தி வந்தது.

"ஆகா பார்த்தீர்களா? மோடியின் நிர்வாகத் திறமையை!"- என்று பாஜக தொண்டர்கள் தெருக்களிலும் இணையப்பதிவுகளிலும் புகழ்ந்தோதினார்கள். ஏதோ மோடியே ஹெலிகாப்டரிலிருந்து கயிறில் தொங்கி ஒவ்வொருவராகக் கைப்பிடித்துக் காப்பாற்றியது போல் சித்தரித்தார்கள். உத்தர்கண்ட் மாநில அரசை விடவும், அங்கே ஒரு ரவுண்டு விமானம் மூலம் பார்வையிட்டுவிட்டுத் திரும்பிய குஜராத் மாநில முதலமைச்சரின் நடவடிக்கை பல மடங்கு சிறப்பாக இருந்தது என்று அரசியலைப் பூசவும் அவர்கள் தவறவில்லை.

அவ்வளவு கடுமையான மழை வெள்ளம், நிலச்சரிவு, மழை ஓயும்போது மட்டுமே மீட்பு என்றிருந்த சூழலில், பேன்ட்டுக்கு மேல் ஜட்டியணிந்த எந்த சூப்பர்மேன் வந்திருந்தாலும் 3 நாட்களில் 15,000 பேரை மீட்டிருக்க முடியாதே? சிந்திக்கத் தெரிந்த பலரும் ஊடகங்களில் இந்தக் கேள்வியை எழுப்பினார்கள். அப்படியே மோடி 15,000 பேரை மீட்டார் என்பதை நம்பினாலும், குஜராத்காரர்களை மட்டும்தான் மீட்டார் என்பது, பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் என்று காட்டப்படுகிறவருக்கு அழகல்லவே என்ற கேள்வியும் எழுந்தது. பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கே கூட சகித்துக்கொள்ள முடியாமல் எப்படி இந்த 15,000 பேர் என்ற எண்ணிக்கை கிடைத்தது என்று விசாரிக்கத் தொடங்கினாராம்.
இப்போது உண்மை வெளிவந்துள்ளது. முதன் முதலில் இந்தச் செய்தியை எழுதிய ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆசிரியர்களில் ஒருவரான ஆனந்த் சூண்டாஸ், அந்த 15,000 என்ற எண்ணிக்கையையும் மற்ற மிகை விவரங்களையும் கொடுத்தது பாஜக-வேதான் என்று உடைத்திருக்கிறார். அக்கட்சியின் உத்தர்கண்ட் மாநில தலைவர்களில் ஒருவரான 'அனில் பலூனி' அந்த விவரங்களைக் கொடுத்தாராம். 'இந்த விவரம் சரியானதுதானா?'- என்று கேட்டபோது, மற்ற பாஜக தலைவர்கள், குஜராத்திலிருந்து வந்திருந்த பாஜக இளைஞர் பிரிவினர் முன்னிலையில், “அனைத்து விவரங்களும் உண்மைதான், மோடி அற்புதமான செயலைச் செய்திருக்கிறார்” என்றாராம் பலூனி.

‘தி ஹிண்டு’ நாளேட்டிற்கு (ஜூன் 28) அளித்த பேட்டியில் இதையெல்லாம் தெரிவித்திருக்கிறார் சூண்டாஸ்.

பலூனி சொன்னதன் அடிப்படையில் கிளப்பிவிடப்பட்டது காற்றடைத்த பலூன்தான் என்பது ஒரு வாரத்திற்குள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கெட்டிக்காரன் புழுகு எட்டு நாள் என்பார்கள். அந்த அளவுக்குக் கூட தாங்கவில்லை மோடி சாகசப் புழுகு.

அரசியலில் கூட்டாளிகள் யாரும் இல்லை என்பதால், இப்படிப்பட்ட புனைவுகளைக் கூட்டணி சேர்த்து மக்களை ஏமாற்றிவிடலாம், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளை அள்ளிவிடலாம் என்று கணக்குப் போட்டது நரேந்திர மோடியை தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராகத் தேர்ந்தெடுத்த பாஜக. பலூன் உடைந்துவிட்டதால் அடுத்த புனைவுக்குத் தயாராகிக்கொண்டிருப்பார்களோ?

தகவல்: எஸ். சத்திய மூர்த்தி 
(மூலம்: தீக்கதிர் - ஆசாத்)

Friday, June 28, 2013

என் கேள்விக்கு என்ன பதில்: ஈரானின் புதிய அதிபரும் - அமெரிக்காவின் கொள்கையும்..!


கேள்வி: சமீபத்தில் ஈரானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஹசன் ரூஹாணி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க மாட்டேன் என்று ரூஹாணி சொல்லியிருப்பதால் அந்தப் பகுதியில் நெருக்கடி குறைந்து அமைதி நிலவ வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்! 

பதில்: பெத்தண்ணா அமெரிக்காவுடன் எந்த உலக நாடும் மோதல் போக்கை மேற்கொள்வதில்லை. அண்ணன்தான் உலக நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்து ரத்த களறியாக்கிக் கொண்டிருக்கிறது. அண்ணனுடைய வெளிவிவகார கொள்கையுடன் ஈரானின் கொள்கை ஒத்துப் போனால் நட்பு நாடு! இல்லையென்றால்.. தூக்குக்கயிறு! 

கேள்வி: நீங்கள் சொல்வதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது! வாஸ்தவம்தான் அத்திபட்டியில தண்ணி இல்லனுன்னு சொல்லிட்டு சும்மா இருந்தா எப்படி தீர்வு வரும்? முஸ்லிம் நாடுகள் அதுவும் இரண்டு ஹரம்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சவூதி அரேபியாவே அமெரிக்க அடிமையாக இருக்கிறதே தீர்வு என்ன?  

பதில்: உலக மகா யுத்தங்களைத் தொடர்ந்து சோவியத் உலகமும், மேற்கத்திய உலகமும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட நாடுகளின் முஸ்லிம் இளைஞர்களையும், யுவதிகளையும் தங்கள் நாடுகளில் இறக்குமதி செய்துகொண்டு சித்தாந்த கல்வி அமைப்பை திணித்தனர். அவர்களை தங்கள் பொம்மை பிரதிநிதிகளாய் திரும்பவும் அந்தந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிபர்களாக்கினர். மூளைச் சலவைச் செய்யப்பட்ட கம்யூனிஸ - மேற்கத்திய பெயர் தாங்கி முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாத்தை புறம் தள்ளி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த வினை இது. எகிப்தின் ஹோஸ்னி முபாரக், லிபியாவின் கடாபி, இராக்கின் சதாம் உசேன் வரை இதுதான் தொடர்ந்தது.  இன்னும் தொடர்கிறது. 

இஸ்லாம் வேண்டும் என்று சொல்லப்பட்டவர்கள் தீவிரவாதியாக சித்தகரிக்கப்பட்டார்கள். 'அபுகாரிப்' மற்றும் 'குவாண்டனாமோ' சிறைக் கொடுமைகளைவிட மோசமான கொடுமைகள் சொந்த நாட்டு மக்கள் மீது சொந்த ஆட்சியாளர்களால் ஏவிவிடப்பட்டன.

ஹிஜாப் அணிந்த பெண்கள் 'விபச்சாரிகள்' என்று பிரகடனப்படுத்தப்பட்டார்கள்.

கலிமாவின் 'இலாஹ்', 'இறைவன் வணக்கத்துக்குரியவன்' என்பது மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் இன்னொரு பொருளான சட்டங்களைத் தர வல்லவன் என்பது புறக்கணிக்கப்பட்டது. இதை பறைச்சாற்றும் 'பாங்கோசை' முஸ்லிம் நாடுகளில் தடை செய்யப்பட்டது.

இதிலிருந்து மீளும் போராட்மே இன்றைய செய்திகள்.

ஆக,
  • இஸ்லாத்தைப் பின்பற்றுவதும், 
  • அதை அடுத்தவர்க்கு எடுத்துச் சொல்வதும், 
  • அதன் அடிப்படையில் கூட்டமைப்பை உருவாக்குவதும்.. 
  • அல்லது ஏற்கனவே இப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள கூட்டமைப்பை பலப்படுத்துவதும்,
  • அதன் அடிப்படையில் சமூக மாற்றத்தை உருவாக்குவதும் 
இன்று முஸ்லிம்கள் முன் உள்ள கடமையாகும்.

இது அந்தந்த நாட்டு மக்கள் அவரவர் நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஒப்ப தீர்மானிக்க வேண்டிய அதி முக்கிய விஷயம் என்பது கவனிக்கத்தக்கது. 

Wednesday, June 26, 2013

சுற்றுச்சூழல்: ‘சுற்றுச்சூழலை கெடுக்கும் தெர்மகோல்...!’


பாலிஸ்ட்ரெயின் என்ற வேதியல் பெயர் கொண்ட தெர்மகோல் ஒரு பாலிமர்தான்! பிளாஸ்டிக்கின் எல்லா தன்மைகளும் கொண்ட அபாயகர மானது இது.
தெர்மொகோல் எல்லா துறையினராலும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இது பிரதானமாக பாக்கிங் செய்ய அதிகதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
அதுவும் பழம் முதற்கொண்டு செல்போன் மற்றும் தொலைக்காட்சி பெட்டி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை சந்தைக்கு அனுப்ப இது பெரிதும் கையாளப்படுகிறது. உணவு பொருள்கள்களுக்காகவும் இது பயனாகிறது. தெர்மகோல் மிகவும் லேசானது என்பதே இதன் ஆபத்துக்கு அதி தீவிரமாக உள்ளது.
நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடும் இது நமது நீர் நிலைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. வீட்டு சாக்கடையிலிருந்து பாதாள கழிவுநீர் குழாய்கள் வரை அடைப்பு ஏற்படுத்துவதில் வல்லவை. மேலும் இவை நீர் உறிஞ்சும் தன்மை அற்றவை. ஆதலால் பரவி இருக்கின்ற இடங்களில் நீரை பூமிக்கு அனுப்பாமல் தடை செய்துவிடும்.
பிளாஸ்டிக் பொருட்கள் போல மக்காத தன்மை கொண்டதுதான் தெர்மகோல். இன்னும் சொல்லப்போனால்.. பிளாஸ்டிக் கூட சில நூற்றாண்டுகளில் மக்கிவிடும் தன்மை கொண்டது. ஆனால் இந்த தெர்மொகோல் என்னும் அரக்கனுக்கு மக்கும் தன்மையே கிடையாது என்பதே இதன் ஆபத்தை உணர போதுமானதாகும். 
வெளி நாடுகளில் தெர்மகோல் அழிக்கபடாமல் சேகரித்து வைத்து மறு சுழற்சிக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த கழிவுகளை சேகரிக்க தனியான துறை இயங்குகிறது.
குறிப்பாக சீனாவில் இருந்து வரும் பொம்மைகள் அனைத்தும் இவ்வாறு மறு சுழற்சியின் மூலம் உற்பத்தி  செய்யப்பட்டவைதான்!
தெர்மகோல் என்னும் அசுரனிடமிருந்து நாளை தலைமுறையைக் காக்க..
  • முடிந்த மட்டும் சேகரித்து வைத்து (எளிதில் தீப்பற்றக் கூடியவை. எச்சரிக்கை) மறு சுழற்சிக்கு ஏற்ப்பாடு செய்ய வேண்டும்.
  • கைவினை பொருட்களுக்கான மூலப் பொருளாகவும் இவற்றை பயன்படுத்தலாம்.
  • பிளாஸ்டிக் ஒழிப்பு போல் தெர்மொகோல் ஒழிப்பு பிரசாரத்தை முன் எடுத்து செல்லலாம்.
  • தெர்மகோல் மிகவும் ஆபத்தானது. ஆகையால், இவற்றை கால்நடைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
  • இவற்றை எரித்தால் நச்சு தன்மை (பிளாஸ்டிக் போல்) கொண்ட வாயுக்கள் வெளியேறும். ஓசோன் படலத்தை ஓட்டையாக்கிவிடும்.
  • முக்கியமாக குழந்தைகள் இதை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • கரி விஷ வாயுக்களை உறியும் தன்மை உடையதால் ஒரு புனல் போன்ற தகரத்தில் கரியை  நிரப்பி அதில் தெர்மகோலை எரிய விட்டலாம்.