NewsBlog

Monday, December 30, 2013

கவிதை: 'தொடரும்.... உயிர்ப்பின் உறவுகள்!'



இயற்கை வளம் பெற
உழைத்துழைத்து ஓய்ந்தது 
இந்த பெரு விருட்சம்!

எங்கிருந்து வந்ததோ
அங்கேயே அந்த ஆத்மா
சென்றடைந்தது!

உலகை மலடாக்கும்
ஏகாத்பத்தியத்தின் பேராசை யுத்தத்தை
மௌனமே மொழியாக்கி
இயற்கை வேளாண்மையால்
தடுத்தாற் கொண்டீர்  நீர்!

தாய் மண் பாராம்பர்ய வித்தாய்
விதைப்பட்டுக் கொண்டே இருப்பீர் நீர்!
மீண்டும்.. மீண்டும் 
பூமியை பிளந்து
முளைத்தெழும் வித்துக்களாய்...
உயிர் பெறுவீர் நீர்!

பூக்களின் அழகிலும்,
துளிர்களின் அரும்பிலும்,
உலகின் செழிப்பிலும்
இனியும், 
ஓர் உயிர்ப்பின் உறவுகள்
தொடரும்..
உலகம் உள்ளவரை!

- 'சின்னக்குயில்'

0 comments:

Post a Comment