NewsBlog

Friday, December 13, 2013

செய்திகள் வாசிப்பது பாமரன்: 'ஹவாலாவில் இந்தியா 5ஆம் இடம்'


'ஹவாலா' எனப்படும் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பணம் கடத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

2002 முதல் 2011 ஆம் ஆண்டுவரை ஊழல், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்கள் மூலம் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட பணத்தின் மதிப்பு 34,304 கோடி டாலர்களாகும் அதாவது நமது பணத்தில் சுமார் ரூ.21,25,304 கோடி.

2011 ஆம் ஆண்டில் மட்டும் 8,493 டாலர்கள் அதாவது சுமார் ரூ.5,26,183 கோடி சட்ட விரோதமாக கடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகிலேயே அதிக அளவு சட்ட விரோத பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஐந்தாவது நாடாக இந்தியா திகழ்கிறது.

முதல் நான்கு இடங்களை முறையே சீனா, ரஷ்யா, மெக்ஸிகோ, மலேசியா ஆகிய நாடுகள் வகிக்கின்றன.

இந்தத் தகவலை வாஷிங்டனைச் சேர்ந்த 'குளோபல் ஃபைனான்சியல் இன்டகிரிட்டி' என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment