NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Thursday, August 8, 2013

கவிதை: "இது உறவின் பிரிவோ?"


  • வேரும் விழுதும் வட்டம் தாண்டாதிருக்க காதும் காதும் வைத்தது போல கிளைகள் மட்டும் இங்கே கூடி பேசிக் கொள்வதென்ன? தங்களின் விதைக்காலக் கதைகளையா
  • ஒருவேளை விட்ட சொந்தத்தை வளர்ந்தப் பின் இவைகள் வளர்க்கின்றனவோ?!
  • தட்டுப்பட்டும் தடுக்காமல் இருக்கின்றனவே; இதில் மரங்களுக்கும் மகிழ்ச்சித்தானோ!
  • இந்த கூடலின் அழகு கோபுர வாயில் போல கொஞ்சம் நுழைந்தால் தெரிகிறதே வீடும் உறவும்! நிழலும் நிம்மதியும்!
  • ஒட்டிய கிளைகளும் கொட்டிய இலைகளும் உணர்த்துவதுதான் என்ன? உறவின் பசுமையோ! பிரிவின் வெறுமையோ!
  • எல்லாம் புரிந்தும் இன்னும் மௌனமேன்
  • உள்ளேஇன்னும்ஒட்டிக்கிடக்கும்வேர்களுக்குத்தெரியவில்லை 
  • ஊரறியஎப்படிவெளியேஉரைப்பதென?
 - இத்ரீஸ் யஃகூப்
 


Wednesday, August 7, 2013

கவிதை: "ஏனென்றால்.. நான்..?"


குண்டு வெடித்தது
எங்கோ..!
மனம் ‘பக்’கென்றது
செய்தி கேட்டு..!

‘ட்ரக்..ட்ரக்.. தடித்த பூட்ஸீகள்
‘டக்..டக்..லட்டி சத்தங்கள்..
“ஒத்துக்கோ..! ஒத்துக்கோ..!!”
உருட்டிய விழிகளில்
நெருப்புக் கோளங்கள்!
தடித்த உருவங்களில்
காக்கிச் சட்டைகள்
ஒவ்வொரு வீட்டின்
கதவைத் தட்டும்!

மருளும் விழிகள்..!
முயலாய் காதுகள்..!
இரவு யுகங்கள்
இருளில் கரைந்து..
பொழுது புலரலில்
பெருமூச்சொன்று..
நீண்டு ஒலிக்கும்..!

பெற்றவள் மகனைப் பார்க்க..
தனயன் தம்பியை நோக்க..
தந்தையின் தலையோ
தரையைப் பார்க்கும்..!

“யார் பலி ஆடு..?
நீயா..? நானா..?
யார்
தீர்மானிப்பது?”

‘தடா’ சட்டங்களில்
இன்னும்
சிறைகள் நிரம்பும்!
கம்பிகள் பின்னே
உண்மை உறங்கும்!

கனத்த நெஞ்சுடன்
என்
‘முறையை’ எதிர்நோக்கி
‘அற்ப ஜீவி’
'முஸ்லிமாய்' நான்!
           - இக்வான் அமீர்








Tuesday, August 6, 2013

உலகம் சுற்றும் பாமரன்: "இனி வலியில்லாமல் தொழலாம்..!"


“மூட்டு வலிக்காரர்கள் இனி வலியில்லாமல் தொழலாம்!” – என்கிறார் ஐம்பது வயதாகும் அத்னான் பியாரிசன். துருக்கியைப் பூர்விகமாகக் கொண்ட ஜெர்மன்வாசியான இவர் மற்றவரைப் போலவே முதுமை மூட்டு வலியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர். இந்த வேதனையிலிருந்து பிறந்தது ஒரு விடிவு.
ஆம்… இனி மூட்டு வலிக்காரர்கள் வலியில்லாமல் தரையில் நின்று, குனிந்து, சிரம்பணிந்து தொழலாம். இதற்கான பிரத்யேக தொழுகை விரிப்பை வடிவமைத்துள்ளார் அத்னான்.
தோற்றத்தில் சாதாரண தொழுகை விரிப்பைப் போலவே இருக்கிறது. தொழும் போது முக்கியமாக தரையில் உடல் எடையைத் தாங்கும் பாதம், முட்டி மற்றும் முன்னெற்றி ஆகிய இடங்களில் பிரத்யேகமான பஞ்சடைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“ஒரு வகை பிரத்யேகமான பஞ்சால் வடிவமைக்கப்படும் இந்த தொழுகை விரிப்பு ஒருகாலும் சேதமடைவதில்லை!” – என்று தெரிவிக்கும் அத்னான் அதன் கலவையை மட்டும் கேட்டுவிடாதீர்கள்! அது தொழில் ரகசியம்!” – என்கிறார் சிரித்துக் கொண்டே.
2009-இல், காப்புரிமைக்காக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த பிரத்யேக தொழுகை விரிப்பு துருக்கியின் மூன்று நகரங்களிலிருந்து தற்போது தயாரிக்கப்படுகிறது.
“ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் தொழுகை விரிப்புகளை நாங்கள் விற்பனை செய்கிறோம்!” – என்கிறார் 10 வயதிலேயே ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்துவிட்ட அத்னான்.
மூட்டு வலிக்கான இந்த தொழுகை விரிப்பை சிறிய பை வடிவில் மடித்து வைத்துக் கொள்ள முடியும்.இணைய தளம் வழியே பொதுவாக விற்கப்படும் இந்த பிரத்யேக தொழுகை விரிப்புக்கான நேரடி விற்பனை நிலையங்கள் ஜெர்மனி, துருக்கி, குவைத் மற்றும் துபாயில் உள்ளன.
39.50 யூரோ (ரூபாய் 3207.49) இன்னும் சில நாடுகளில் 52 டாலர் (ரூபாய் 3161.78) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த மூட்டு வலிக்கான தொழுகை விரிப்பு ஆடம்பரம் மற்றும் விளையாட்டுப் பொருட்களின் பட்டியலில் சிங்கபூர் மற்றும் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.


விருந்தினர் பக்கம்: "பூரண இஸ்லாமியன் ; பூரணத்துவமான மனிதன்..!"



"இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.
காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.
சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!’

தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார்.

கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.
திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”
2003 ஆம், ஆண்டு தினமணி ரம்ஜான் மலரில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய 'பிரச்சனை குர்ஆனில் இல்லை நம்மிடம் தான்' என்ற பொருள்பட, 'வெறுப்பதற்கு ஏதுமில்லை!'' - என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை இது.....
இதனை சுஜாதா இஸ்லாமியருக்காக எழுதவில்லை. பூமியில் பிறந்த எந்த ஒரு மனிதனும் அவசியம் படிக்க வேண்டிய விஷயமாகத் தான் இதைக் கருதுகிறேன்.  கருத்துச் செறிவில் 100 பக்கங்களுக்கு விஸ்தாரமாகச் சொல்ல வேண்டியதை சுஜாதா சில பாராக்களில் சொல்லிவிட்டார்.  

உலகில் எந்த ஒரு மதத்திற்கும் சற்றும் குறைவில்லாத வழிமுறைகளையும், வழிபாட்டு முறைகளையும் தன்னகத்தே கொண்ட மார்க்கம் இஸ்லாம்.  இது ஒன்று தான் குறை என்று எதையும் சுட்டிக் காட்ட முடியாதது இஸ்லாம். அந்த மார்க்கம் சொல்லும்படி நடக்கும் மனிதன் பூரண இஸ்லாமியன் என்று சுருக்குவதைவிட பூரணத்துவமான மனிதன் என்று விவரிக்க வேண்டும்.
பதினைந்து வயதிலிருந்து இஸ்லாமிய நண்பர்களிடம் எனக்கிருக்கும் பழக்கம், எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் எண்ணங்கள் வார்த்தைகளுக்குத் தொலைவில் இருக்கிறது.  சுய ஒழுக்கம், சுயக் கட்டுப்பாடு ஆகிய இரண்டின் செயல் வடிவம் தான் ரம்ஜான் நோன்பு.  தஞ்சையில் கீழவாசல் என்ற ஒரு பகுதி இருக்கிறது. பெரும்பாலும் இஸ்லாமியர் வசிக்கும் பகுதி. இங்கே வசிக்கும் இஸ்லாமியரல்லாத சில பேர் கூட ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பதைப் பார்த்திருக்கிறேன். இருக்கும் இடம் ஏற்படுத்திக் கொடுத்தப் பழக்கம் என்று இதைச் சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது

இஸ்லாமியர்களுடன் பழகப் பழக அந்த மார்க்கத்தின் சிறப்புகள் எந்தத் தன்னுணர்வும் இன்றி நம் மூளைக்கு உறைத்துவிடும்.  தங்கம் மாதிரி போலி இருக்கலாம். ஆனால் தங்கத்தில் போலி கிடையாது. அதைப்போல இஸ்லாத்தில் கெட்டவர்கள் என்று தனியாக யாரும் கிடையாது. அசல் இஸ்லாமியர் நல்லவர். இஸ்லாம் என்றாலே இறைநிலை எய்துதல் என்று தான் பொருள் கொள்கிறேன். நாம் எந்த மதத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமே இல்லை. இந்த மதத்தில் என்ன இருக்கிறது என்பது தான் முக்கியம். ரம்ஜான் பண்டிகை வரவிருக்கிற இந்த நேரத்தில் இதை மத நல்லிணக்கக் கட்டுரை என்பதைவிட மன நல்லிணக்கக் கட்டுரை என்ற வகையில் புரிந்து கொண்டால் மகிழ்வேன்.

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.

சிவக்குமார் அசோகன்.








Thursday, August 1, 2013