சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!
இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.
சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.
வடசென்னையில் சூரிய கிரணம்
21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.
காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?
சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.
டிராகன் பழச் செடியை கவாத்து செய்வது எப்படி?
How To Prune Dragon Fruit ....
Sunday, June 23, 2013
Saturday, June 22, 2013
Friday, June 21, 2013
Wednesday, June 19, 2013
Sunday, June 16, 2013
Saturday, June 15, 2013
விருந்தினர் பக்கம்:'கையெழுத்து'
என் கையெழுத்தைப் பார்க்கும் போது என் வாழ்வின் பல நிகழ்வுகள் அலையடிக்க ஆரம்பித்தன. என் கையெழுத்தை விட என் தங்கையின் கையெழுத்து நன்றாக இருக்கும். என் வீட்டு பாடங்களை அவள் எழுதிக் கொடுத்து வகுப்பில் தமிழாசிரியரிடம் மாட்டியிருக்கிறேன். என் அத்தை என் கையெழுத்தை மாற்ற எடுத்த முயற்சிகளில் நானே வென்றேன். என் கையெழுத்தின் லட்சணம் குறித்து நான் என்றும் கவலைப் பட்டதில்லை -MBA சேரும் வரை.
NASA வைப் பற்றி WASA வில் (wage and salary administration) எழுதினாலும், பீடியைப் பற்றி OD யில் (organization development) சொன்னாலும் அது மார்க் ஆனது. 'ஜோக்' இல்லை, உண்மை. 'அம்மா' என்பதை கேவலமாக எழுதுவதை விட 'அய்யோ' என்பதை அழகாக எழுதுவதன் முக்கியத்துவம் நான் அறிந்து கொண்டேன்.
துணை இயக்குனர் வாய்ப்பு தேடி சென்னையில் அலைந்த காலங்களில் சில இயக்குனர்கள் என் கையெழுத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். வடபழனியில் ஒரு இயக்குனரை பார்க்கச் சென்ற போது, அவரின் உதவியாளர், "ஹீரோவுக்கும், ஹீரொயினுக்கும் முதல் சந்திப்பு சண்டையில் ஆரம்பிக்குது! இதுக்கு சீன் எழுது பார்க்கலாம். " என்றார்.
Friday, June 7, 2013
வாழ்வியல்: 'சிறகுகள் விரியுங்கள்.. பறவைகள் போல!'
அந்தக் கனவு, அவருக்குள் தோன்றிய ஆசையா, அல்லது நிர்ப்பந்தங்கள் காரணமாய் அப்படி ஓர் இலக்கை வகுத்துக் கொண்டாரா என்று முதலில் பார்க்க வேண்டும்.
- கடன் வாங்குவது,
- ஓய்வு நேரங்களில் டியூஷன் எடுப்பது,
- புதிதாக வீடு கட்டும்போதே கீழே சில கடைகளைக் கட்டி வாடகைக்கு விடுவது
Tuesday, June 4, 2013
Sunday, June 2, 2013
உடல் நலம்: 'காக்க.. காக்க.. கல்லீரல் காக்க!'
நாம் அன்றாடம் பருகும் தண்ணீர், உட்கொள்ளும் பல்வேறு உணவுப் பொருட்கள், 100 சதவீதம் சுத்தமானது என, சொல்ல முடியாது. இவற்றில் கலந்துள்ள வேதிப்பொருட்கள், நாட்கணக்கில் உடம்பில் சேர்ந்தால், அவை நஞ்சாக மாறி, உடலுக்கு ஊறு விளைக்கும் அபாயம் உள்ளது. இந்த அபாயத்தை தவிர்க்கும் பணியை, கல்லீரல் மேற்கொண்டு வருகிறது.
- மது பழக்கம், வெறும் வயிற்றில் மது அருந்துவது,
- உடம்பில் அளவிற்கு அதிகமாக சேரும் கொழுப்புச் சத்து,
- உடல் பருமன்,
- உயர் ரத்த அழுத்தம்,
- நீரிழிவு நோய், "ஹெப்படைட்டிஸ் பி’ வைரஸ் தாக்கம்
- தினமும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வது,
- சத்தான உணவுகளை தேவையான அளவு உட்கொள்வது,
- மதுப் பழக்கத்தை தவிர்ப்பது,
- "ஹெப்படைட்டிஸ் பி’ தடுப்பூசி போட்டுக் கொள்வது
Saturday, June 1, 2013
ஆளுமை: 'நேர்மைக்கு விலையில்லை!'
வியப்புக்குரிய இந்த சம்பவம் நடந்திருப்பது காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில்தான்!
தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு நஷ்டஈடாக அளிக்கப்பட்ட ரூ. 1.9 கோடி பணத்துக்கான காசோலையை, அதை வழங்கியவர்களிடமே திருப்பி அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ஆட்டோ டிரைவர் ராஜூ.
குஜராத் மாநிலம் 'சனாந்த்' பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ பர்வாத். ஆட்டோ டிரைவர். மேற்கு வங்க மாநிலத்தில் டாடா நானோ தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு கிளம்பிய போது, அங்கிருந்து இடமாற்றம் செய்த அந்த நிறுவனம் தற்போது சனாந்த் பகுதியில் தனது தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதற்காக அப்பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணியை, குஜராத் தொழில் வளர்ச்சி கழகம் செய்து வருகிறது.
ஒரு பிகா நிலத்திற்கு குறிப்பிட்ட தொகை வீதம் டாடா நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கி வருகிறது. பிகா என்பது வட இந்தியாவில் நிலத்தின் அளவை குறிக்கும் ஒரு சொல்லாகும்.
இப்பகுதியில் ராஜூவின் முன்னோர்களுக்கு சொந்தமான 10 பிகா நிலம் இருந்தது. இதில் 3 பிகா நிலத்தை ராஜூவின் தாத்தா வேறொருவக்கு விற்று விட்டார். ராஜூவின் தாத்தாவிடமிருந்து நிலத்தை வாங்கியவர், அதை பெயர் மாற்றம் செய்யவில்லை. தற்போது அந்த இடத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். .
அந்த 3 பிகா நிலத்திற்கான நஷ்ட ஈடான ரூ. 1.9 கோடி ராஜூவின் பெயருக்கு காசோலை வந்துள்ளது. இதையடுத்து தனக்கு வந்த காசோலையை டாடா நிறுவன அதிகாரிகளிடமே திருப்பி அளித்துள்ளார் ராஜூ.
"எனது பெற்றோர் எனக்கு கற்பித்த சில விஷயங்களில் நேர்மையும் ஒன்று. நேர்மையற்ற வழியில், எனக்கு சொந்தமில்லாத வழியில் வந்த பணத்தைக் கொண்டு எனது வாழ்க்கையை நடத்த எனக்கு விருப்பமில்லை. எனக்கு மேலும் 4 பிகா நிலங்கள் உள்ளன. அது எனக்கும் எனது குடும்பத்தாரின் எதிர்கால வாழ்விற்கும் போதும்" என்று ராஜூ கூறியுள்ளார்.
ராஜூவின் இந்த செயலால் குஜராத் தொழில் வளர்ச்சிக்கழக அதிகாரிகள் திகைப்படைந்துள்ளனர். தங்களது வாழ்வில் இவ்வளவு பெரிய தொகை திரும்ப வந்துள்ளது இதுவே முதல் முறை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். வெறும் ரூ. 6 ஆயிரம் சம்பளத்தில் ஆட்டோ டிரைவர் வாழ்க்கையை நடத்தும் ராஜூ, இவ்வளவு பெரிய தொகைக்கு ஆசைப்படாதது தங்களை மிகவும் ஆச்சர்யப்பட வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேர்மைக்கு விலை இல்லை என்பது அவர்களுக்கு பாவம் தெரியாது!



























