NewsBlog

Sunday, December 23, 2012

''பூவெல்லாம் புயலாகாது!''



நீயின்றி நானில்லை தாயே!
நான் சொல்வதை
செவித்தாழ்த்தி
கொஞ்சம்
கேளேன்!

கொடும் வனவிலங்குள்
உன்னைச் சுற்றி
என எச்சரித்தால்...
புள்ளிமான் நீ..
என்னுடல்
என்னுரிமை
என்கிறாய்!



வைரங்கள்..!
வைரடூரியங்கள்!
களவு போகும் என்றால்..
கள்ளர் கூட்டத்தை
நம்பி என்னை
பழமைவாதி
என்கிறாய்!




படைப்பியல் பாதிப்புகள்
உனக்கு மட்டுமே
வெளிப்படும்
அடையாளமென்றால்..
நீயோ கருக்கலைப்பு
எனதுரிமை
என்கிறாய்!



ராமர் இல்லாத ராஜ்ஜியத்தில்..
ராவணனின்றி ராமாயணமா?
இறையச்சமற்ற சமூகத்தில்..
அச்சமற்ற பெண்ணினமா?

பூவெல்லாம்
புயலாகாது!
பஞ்சாய் இருப்பதால்..
நித்தம்
எரிவது இனி
நீதான்!




0 comments:

Post a Comment