NewsBlog

Thursday, December 13, 2012

'உலக மகா மகளிர் பல்கலைக்கழகம்!'




"அறிவைப் பெற்று அதை பரப்புபவரே உங்களில் சிறந்தவர்!"- என்றார்கள் நபி பெருமானார். அதிலும், பெண்கள் கல்வி அறிவைப் பெறும் போது அது கணவன். மகன், தந்தை, சகோதரர் என்று பல தரப்பு மக்களுக்கு எளிதாகவும், கூடுதலாகவும் சென்றடையும்
என்பதே நபிபெருமானாரின் பொன்மொழியின் உட்பொருளாகும்.

வ்வவையில், தற்போது நபிகளாரின் பொன்னுரைகள் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில்  செயல்வடிவம் பெறத் துவங்கியுள்ளது அறிவுலகத்தாரை தலைநிமரச் செய்யும்.

இளவரசி நூர் பின்த் அப்துற்றஹ்மான் பெயரால் (Princess Noura Bint Abdulrahman University) அமைக்கப்பட்ட பெண்களுக்கான பல்கலைக்கழகம் இத்தகைய போற்றுதலுக்குரிய கல்விநிலையமாகும். அதிலும் உலகின் மிகப் பெரிய மகா பல்கலைக்கழகம் என்பது வியப்புக்குரியது. 
 
ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பெண்கள் தங்கிக் கல்வி கற்கும் பிரமாண்டமான வசதி கொண்டது என்பது இதன் சிறப்பு. 50 லட்சம் புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது இதன் மற்றொரு தனிச் சிறப்பாகும். வெளியூர்களிலிருந்து வரும் பெண்கள் தங்கிப் படிக்க வசதியாக 12 ஆயிரம் அறைகள் கொண்டது.


உடற்பயிற்சி, விளையாட்டு என்று 26 கி.மீ சுற்றளவில் ஒரு குட்டி நகரமாக இது திகழ்கிறது. 

பல்கலைக்கழகத்தைச் சுற்றிவர வசதியாக மெட்ரோ ரயிலும் விடப்பட்டுள்ளது. 



40 ஆயிரம் ச.கி.மீட்டரில் சூரிய ஒளியால் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

700 படுக்கை அறையுடன் கூடிய மருத்துவமனை, நவீன பரிசோதனைக்கூடம், நானோ தொழில்நுட்ப வசதிகள் என்று அத்தனை தேவைகளையும் உள்ளடக்கியுள்ளது நூர் பின்த் அப்துற்றஹ்மான் பல்கலைக்கழகம். 

இதன் மொத்த மதிப்பு 20 பில்லியன் ரியால்கள் என்று கணக்கிடப்பட்டள்ளது.


0 comments:

Post a Comment