NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Friday, February 7, 2014

காலப்பெட்டகம்: 'மோடியின் அந்த நரத் தாண்டவம்!'


நரேந்திர மோடி நாளை 08.02.2014 சனிக்கிழமை சென்னைக்கு வரவிருக்கிறார். வண்டலூரில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதற்கு அடுத்த நாள், 09.02.2014 ஞாயிற்றுக் கிழமை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

மோடி தமிழகத்துக்கு வருவதிலோ, அவர் பேசுவதிலோ யாருக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. எல்லா இந்தியருக்கும், நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் செல்லும் உரிமையைப் போலவே அவருக்கும் எங்கும் வர, போக உரிமைகள் உண்டு. ஆனால், அவருடைய குற்றங்களும், பாவங்களும் விக்கிரமாதித்தனின் வேதாளமாய் அவரைத் துரத்துவதை யாராலும் மறுக்க முடியாது. சட்டம் என்ற இருட்டறையிலிருந்து தப்பி வந்த கொடும் குற்றவாளி அவர். இந்திய நீதிமன்றங்களில் நீதி கிடைக்காத நிலையில் இன்னும் சர்வதேச நீதி மன்றங்களுக்கு அவரது வழக்குகளை கொண்டு சென்று வழக்காட வேண்டிய அத்தனை மோசமான கொலையாளி அவர்.

மோடியின் தமிழக வருகை, பிப். 28, 2002 நினைவூட்டுகிறது.

முஸ்லிம்கள் மண்ணுலகில் வாழவே தகுதியற்றவர்கள் என்று இந்துத்துவ தீவிரவாதிகளால் பிரகடனம் செய்யப்பட்ட அந்த நாளை எப்படிதான் மறக்க முடியும்?

சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ விபத்திற்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் 'பந்த்' என்ற போர்வையில் குஜராத் முழுவதும் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி மற்றும் அதன் கிளை அமைப்புகளான விஸ்வ ஹிந்த் பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் பரிவாரங்கள் இரத்த வெறி பிடித்து, முஸ்லிம்களுக்கு எதிராக நரத் தாண்டவம் ஆடிய அந்தக் காட்சிகளை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு உறைந்து போகிறது.


அஹ்மதாபாத் பெரு நகரம் அந்த ரத்த வெறிக்கு இன்றளவும் சாட்சியாக நிற்கிறது. முழு ஆயுதம் தறித்த இந்துத்துவ பயங்கரவாதிகள் வெறிப்பிடித்தவர்களாய் தெருக்களில் இறங்கி கடைகளை தீ வைத்துக் கொளுத்தியதையும், முஸ்லிம்களை  உயிருடன் கொளுத்தியதையும் எப்படி மறக்க முடியும்?

நாடா? காடா?

அந்த மயான சூறையாடலில் 'இது மனிதர்கள் வாழும் நாடா?' அல்லது விலங்குகள் வாழும் காடா?' - என்ற வினாக்கள் அல்லவா எழுந்தன! காட்டுக்கும்கூட சில சட்டங்கள் உண்டு. தேவையில்லாமல் அங்கு உயிர்கள் பறிபோவதில்லை. எந்த வனவிலங்கும், மற்றொரு விலங்கின் இருப்பிடத்தை சூறையாடுவதில்லை. எந்த விலங்கினமும் அடுத்த இன ஜோடியைக் கற்பழித்துக் கொல்வதில்லை.

வெறிப்பிடித்த இந்துத்துவ தீவிரவாதிகள் கண்ணில் எதிர்பட்ட முஸ்லிம்களை வெட்டிச் சாய்த்தார்கள். பெண்களைக் கற்பழித்தார்கள். இந்த மண்ணில் வாழவே தகுதியற்ற புழு, பூச்சிகள் முஸ்லிம்கள் என்று உலகுக்கு பிரகடனம் செய்தார்கள்.


குஜராத் முழுவதும் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் அஹ்மதாபாத் ஒன்று. முஸ்லிம்களும், இந்துக்களும் கலந்து வாழும் அதன் புற நகர் பகுதி நரோடா. பிப்.28ம் நாள் காலையிலிருந்து இருட்டும் வரை செய்ய வேண்டிய செயல்திட்டம் மிகவும் கச்சிதமாக நிறைவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அது. அதன்படி ஆர்.எஸ்.எஸ் தலைமையில் பி.ஜே.பி பஜ்ரங்தள் மற்றும் விஸ்வ ஹிந்த் பரிஷத் தீவிரவாத குழுக்களால் அமைக்கப்பட்ட கொலைக்காரப் படையிடம் மாநிலத்தின் அனைத்து அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டன.

வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள் இவற்றைத் தவிர கொலைகாரப் படையில் இடம் பெற்றிருந்த சாமான்யமானவனும் எளிதில் ஆயதமாகக் கையாளும் விதமாக செங்கல் முதல் காஸ் சிலிண்டர், டீஸல் டாங்குள் வரை முஸ்லிம்களைக் கொல்ல பயன்படுத்தப்பட்டன. அப்பாவி முஸ்லிம்கள் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அப்படி எரியூட்டுவதற்கு முன்பாக கற்களால் நசுக்கப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். 

இந்த நர தாண்டவாம் நடந்து கொண்டிருந்தபோது, இடைவிடாமல் செல்ஃபோன்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையை, கற்பழிக்கப்பட்ட முஸ்லிம் தாய்மார்களின், சகோதரிகளின் எண்ணிக்கையைப் பறிமாறிக் கொண்டு குதூகலித்தார்கள்... சுண்டெலிகளைக் கொன்றது போல!


சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை நரோடா பாட்டியா மற்றும் அதன் அண்டைப் பகுதியான நரோடா காவோனைச் சார்ந்த பெரும் பகுதி முஸ்லிம்கள் காய்கறிகளைப் போல சீவப்பட்டார்கள். குப்பைகளைப் போல எரிக்கப்பட்டார்கள். முஸ்லிம் தாய்மார்களின் கருக்களை வயிற்றிலிருந்து பிளந்து எறிந்தார்கள். அந்தக் கருக்கள் கூட மீண்டும் உயிர் பெற்றிடக் கூடாது என்று சுவற்றில் அடித்து சூறைத் தேங்காய்களைப் போல தலையைச் சிதறடித்தார்கள். ராவணன், நரகாசூரன், கம்சன் போன்ற புராண, இதிகாச நாயகர்கள் எல்லாம் அங்கு தோற்றுப் போனார்கள்.

நரோடா நகரின் தொலைத்தூர புறநகர்ப் பகுதி அல்ல! அங்கிருந்து வெறும் 5 கி.மீ. தொலைவில் மாநில காவல்துறையின் கண்ட்ரோல் ரூம் அமைந்துள்ளது. 4 கி.மீட்டருக்கும் குறைந்த தொலைவில் அதாவது ஷாஹியாபாக்கிலிருந்து வெறும் சொற்ப தொலைவில் அஹ்மதாபாத் பெரு நகரின் தலைமைக் காவல்நிலையம் உள்ளது.

வேறு யாரைக் காரணமாக்குவது?

முஸ்லிம்களுக்கு எதிரான கொலை  வெறியைத் தடுக்க வேண்டிய சட்டஒழுங்கின் நாயகர்களான காவல்துறையினர் வாளாவிருந்தனர். நிர்வாகத்துறையினர் கண்ணிழந்த திருதராட்ச மன்னர்களானார்கள். அன்றைய நாளில் எதுவொன்றுமே முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. இந்தக் கொலை வெறிக்கு மோடியைக் காரணமாக்காமல் வேறு யாரைதான் பொறுப்பாக்குவது?


மண், பொன், பொருளுக்காக நாட்டின் மக்களவையை செயலிழக்கச் செய்து கொண்டிருக்கும் இந்த இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு மனித உயிர்களைப் பற்றி என்ன அக்கறை இருக்க முடியும்? மலைகளும், மரங்களும், நதிகளும் தானே புனிதமானவை! மனித உயிர்கள் அல்லவே!

கலவரங்களால் பாதிக்கப்பட்டு சொந்தபந்தங்கள், வீடு-வாசல்கள் என்று முழு அடையாளங்களைத் தொலைத்துவிட்ட முஸ்லிம்கள் தங்கள் இழப்புகளுக்கு எதிராக முதன் முதலாக குரல் எழுப்ப ஒரு ஐந்தாண்டு காலம் பிடித்தது. அதுவரை எதுவுமே நடைபெறாதது போல குஜராத் மாநில அரசு நடந்து கொண்டது. நடந்த கொலை வெறிச்சம்பவங்களை ஒரு பொருட்டாகவே அது மதிக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் இடைவிடாத போராட்டத்தின் விளைவாக எட்டாண்டுகளுக்குப் பிறகு தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் சில மனித உரிமைப் போராளிகளால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 'ரிட்' மனு உயிர் பெற்றது. அதன் விளைவாக குஜராத்திற்கு எதிரான கலவர வழக்குகள் மறு விசாரணைக்காக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. பத்தாண்டுகளுக்கு பிறகு ஒரு பகுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அடிமை வாழ்க்கை

கலவரங்களில் நேரடியாக பங்கு கொண்ட கொலையாளிகள் எளிதில் பிணையில் விடப்பட்டார்கள். கலவரங்களைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் நரேந்திர மோடி பெரும் வெற்றியைப் பெற்றார். கலவரங்களில் அனைத்தையும் இழந்தவர்கள் அஹ்மதாபாத்தின் புற நகர் பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். சொற்ப எண்ணிக்கையினரே தமது பழைய குடியிருப்புகளுக்குத் திரும்பினார்கள். இவர்கள்  பொருளாதார ரீதியாக பின்தங்கி, தங்கள் சக சமய அண்டை வீட்டாரின் சமூகப் புறக்கணிப்புகளோடு அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார்கள்.


அஹ்மதாபாத் பெரு நகரின் மையப்பகுதியிலிருந்து வெறும் 15 கி.மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிதான் நரோடா காவோன் மற்றும் நரோடா பாட்டியா. 70 ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த சேரிப் பகுதிகள்; அஹ்மதாபாத் நகராட்சிக்கு உட்பட்டவை. இரண்டு பகுதிகளுக்கும் இடையே உள்ள தொலைவு ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகம் இராது.

இடப்பரப்பில் நரோடா காவோன் சிறியது. நாரோடா பாட்டியாவோ சற்றுப் பெரியது. குறுகியத் தெருக்கள், முட்டுச் சந்துக்கள், முறையாக கட்டப்படாத அரைகுறை காங்கிரீட் தளங்கள். அவற்றில் சில இரண்டு தள கட்டிடங்கள் என்று வாழ்க்கையின் அடிமட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதி. கலவரங்களுக்கு முன் அன்றாடங் காய்ய்சிகளான 2000 முஸ்லிம்களின் வாழ்விடங்களாக திகழ்ந்த பகுதிகள் அவை. இங்கு வசித்து வந்த முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் கர்நாடக மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள்.

இந்தக் குடியிருப்புகள் அமைந்திருந்த சாலைக்கு மறுபுறம் மாநில அரசு போக்குவரத்துத் துறையின் கிட்டங்கி. அதன் பக்கத்தில் இந்துக்கள் பெரும் பகுதியாக வாழும் 'கோபிநாத் மற்றும் கங்கோத்ரி' குடியிருப்புகள். இவற்றின் அருகில் சஹாரா நகர். இதில் வசித்து வரும் சஹாராக்கள் பூர்வீகமாகவே கொலை, கொள்ளை, வழிப்பறி என்று குற்றப் பின்னணி கொண்டவர்கள். சாராயம் காய்ச்சுவதும், சூதாட்டமும் இவர்களது பிரதான தொழில்.

நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவோன் கலவரங்களைத் தொடர்ந்து பதியப்பட்ட வழக்குள் இரண்டு. அதுவும் தனித்தனியாகப் பதியப்பட்ட வழக்குகள்  அவை. வெறும் 8 முஸ்லிம்கள் நரோடா காவோன்வில் கொல்லப்பட்டது சம்பந்தமான வழக்குகளாக அவை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.

ஆனால், நேரடி சாட்சிகளோ நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலவரங்களில் கொல்லப்பட்டதாக சாட்சியமளித்தனர். துல்லியமான எண்ணிக்கை கொலைகாரர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.



இரு முக்கிய கொலைக்காரர்கள்

கொலை களத்தில் இறங்கிய நூற்றுக் கணக்கான இந்துத் தீவிரவாத சங்பரிவார கும்பலுக்கு தொடர்ச்சியாக தலைமை தாங்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் இருவர். அவர்களில் ஒருவர்தான் முன்னாள் அமைச்சரும், பி.ஜே.பி. எம்.எல்.ஏ.வான் மாயா பென் கோதானி. அடுத்தது, இந்து தீவிரவாத அமைப்பான பஜ்ரங்தளத்தின் தலைவரான பாபு பஜ்ரங்கி. கலவரத்தில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்திலும் இவர்களின் பெயர்தான் இடம் பெற்றிருந்தது. கொலைக்குற்றவாளி கோதானியைக் கைது செய்ய நேரடி சாட்சிகள் இல்லை என்று காரணம் காட்டி ஆரம்பத்தில் கைது செய்ய காவல்துறை மறுத்தது. மூன்று மாத தலைமறைவிற்கு பிறகு உச்ச கட்ட நாடகமாக கொலையாளி பஜ்ரங்கி கைது செய்யப்படுகிறார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு குஜராத் உயர் நீதி மன்றத்தால் பிணையில் விடப்படுகிறார். இந்து தீவிரவாத குழுக்களான பி.ஜே.பி, பஜ்ரங்தளம் மற்றும் சஹராக்கள் சொற்ப எண்ணிக்கையில் கைது செய்யப்படுகிறார்கள். 

யார் இந்த பஜ்ரங்கி?

5 அடி மூன்று அங்குலம் கொண்ட பாபு பஜ்ரங்கி பட்டேல் குடும்பத்தைச் சேர்ந்த நரோடாவின் பெரும் புள்ளி. 22 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்து தீவிரவாத அமைப்புகளான விஷ்வ ஹிந்த் பரிஷத்துடனும் அதன் இளைஞர் அமைப்புடனும் தொடர்புடைய உள்ளூர் தாதா!

பஜ்ரங்கி நரோடாவிலும், சஹாரா நகரிலும் கடவுள் அந்தஸ்தைப் பெற்றவர். அப்பகுதிகளின் எல்லாக் குற்றச் செயல்களும் இவரின் ஆசியுடன்தான் நடக்கும். சஹாராக்கள் இவருடைய அடியாட்கள். "கொல்..!கொல்..! கொலையைத் தவிர வேறு இல்லை!" - என்பதே பஜ்ரங்கி அறிந்த ஒரே அரிச்சுவடி. பஜ்ரங்கி கற்றதும் இதுதான்! சஹாராக்களுக்குக் கற்பிப்பதும் இதுதான்!

அஜந்தா எல்லோரா ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள இரண்டாவது தளம்தான் பஜ்ரங்கியின் நீதிமன்றம். நெடுஞ்சாலைக்குப் பக்கத்திலேயே அமைந்துள்ள வணிக வளாகம் இது. பில்டர்ஸ் என்ற போர்வையில் இவரது மாத வருமானம் பல லட்சங்களைத் தாண்டுகிறது.

பஜ்ரங்கியின் பிரதான தொழில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களை வதைப்பது. "நான் முஸ்லிம்களையும், கிருத்துவர்களையும் வெறுக்கிறேன்!" - என்ற உண்மையை தனது வாயாலேயே ஒப்புக் கொள்பவர். இவரது நீதிமன்றத்தில் நடக்கும் முக்கிய வழக்குகள் முஸ்லிம் இளைஞர்களுடன் ஓடிப்போன இந்த இளம் பெண்களை மீட்டெடுப்பது. இந்தக் கட்டப் பஞ்சாயத்தைக் குறித்து காவல்துறையிடம் புகார்  செய்தாலும் காவல்துறை கண்டுக் கொள்ளாது. "இதுவரை 957 இந்து இளம் பெண்களைக் காப்பாற்றி இருக்கிறேன். சராசரியாக கணக்கிட்டாலும், ஒரு பெண் ஒரு முஸ்லிமை மணந்து ஐந்து குழந்தைகள் பெற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும் நான் குறைந்தது 5000 முஸ்லிம்களை அவர்கள் பிறப்பதற்கு முன்னாலேயே கொன்றுவிட்டேன்!" - என மார்தட்டிக் கொள்பவர்.


அத்துடன் இந்து விரோதத் திரைப்படம் என்று 'பர்ஜானியா'வுக்கு விளக்கம் அளித்தவர் திருவாளர் பஜ்ரங்கிதான்! தனி ஆளாக நின்று அஹ்மதாபாத்தின் எல்லா திரைப்பட உரிமையாளர்களையும் மிரட்டி கட்டாயப்படுத்தி, அந்தத் திரைப்படத்தை திரையிட முடியாமல் தடுத்த பலவான். இவரது எல்லா 'கிரிமினல்' நடவடிக்கைகளையும் அரசு நிர்வாகம் கண்டுக் கொள்ளாமல், மௌனமாக நின்று ஆசிர்வதித்தது. "என் மரணத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை! மரணத்தறுவாயிலும் எனது கடைசி ஆசையாக முஸ்லிம் குடியிருப்புகள் மீது குண்டு வீசி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் முஸ்லிம்களை கொன்றொழிப்பதையே விரும்புகின்றேன்!" - என்று வெளிப்படையாகவே சொல்பவர்.

மத்திய அரசுக்கே ஆலோசனை

தனது தனிப்பட்ட விருப்பங்களைத் தாண்டி, மத்திய அரசாங்கமே சட்ட ரீதியாக முஸ்லிம்கள் சம்பந்தமான பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும் என்பவர். அதற்கான பல ஆலோசனைகளை இலவசமாக வழங்கியிருப்பவர். அதில் மாதிரிக்கு சில...

மத்திய அரசு முஸ்லிம்களைக் கொல்ல ஆணைப் பிறப்பிக்க வேண்டும். இந்த அரசாணையை உயர்க்குடியினரும், செல்வந்தர்களும் பின்பற்றாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், சேரி வாழ் இந்துக்கள் கண்டிப்பாக இதைப் பின்பற்ற வேண்டும். சட்டத்தின் ஒரு பகுதியின்படி  இவர்கள் முஸ்லிம்களின் வீடு, வாசல்களை சொத்துச் சுகங்களை இன்னும் தமக்கு விருப்பமான எதனையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு ஒரு நிபந்தனை. இதை மூன்று நாட்களுக்குள் செய்ய வேண்டும். இதன் மூலம் முஸ்லிம்களை இந்தியாவிலிருந்தே துடைத்தெறிந்து விடலாம் என்று ஹிட்லரையும் மிஞ்சும் முதல் ஆலோசனை இது.

அடுத்த ஆலோசனை, முஸ்லிம்கள் ஒரே ஒரு திருமணம் செய்து கொள்ள மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஒரே ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள அவர்களுக்கு உரிமை அளிக்க வேண்டும். கூடவே அவர்களுக்கு வாக்குரிமையை மறுக்க வேண்டும்!" - என்று அப்பட்டமான துவேஷங்களை விதைப்பவர்.

பிப்ரவரி 27, கோத்ரா- சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ விபத்து சம்பவம் நடந்ததை ஒட்டி அங்கு சென்ற பஜ்ரங்கி அச்சம்பவத்திற்கு அடுத்த நாளே நரோடா பாட்டியாவில் பழிக்குப் பழி வாங்குவதாக சூளுரைத்தார்: "நான் இதைவிட நான்கு மடங்கு முஸ்லிம்களை நரோடாவில் கொன்றொழிப்பேன்! என்று சூளுரைத்தேன்!" - என்று பின்னாளில் தெஹல்காவுக்கு அளித்த பேட்டியின் போது வாக்கு மூலம் அளித்தார்.

அஹ்மதாபாத்திற்கு திரும்பிய பஜ்ரங்கி முஸ்லிம்களை  கொன்றொழிப்பதற்கான திட்டங்களை அன்றிரவே உடனுக்குடன் தீட்டினார். அப்படி முஸ்லிம்களை கொலை செய்ய உடன்படாத இந்துக்கள் அடுத்த நாள் முஸ்லிம்களோடு சேர்த்து கொல்லப்படுவார்கள் என்று பஜ்ரங்கியால் எச்சரித்து பயமுறுத்தப்பட்டார்கள். தீ மூட்டுவதற்கு வசதியாக ஏராளமான எரிப்பொருட்கள் திரட்டப்பட்டன. இதற்காக ஒரு பெட்ரோல் பங்கின் உரிமையாளர் இலவசமாக பெட்ரோலை வழங்கியதாகவும் அதை முஸ்லிம்களை உயிருடன் எரிக்க பயன்படுத்தியதாகவும் பஜ்ரங்கி தெஹல்காவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.



அடுத்த நாள். முஸ்லிம்களுக்கு எதிரான கோர நரத்தாண்டவம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. அரங்கேற்றம் செய்யப்பட்ட ... மனித இனம் பதறச் செய்யும் செயல்களை தனது வாயாலேயே தெஹல்காவிடம் வாக்குமூலம் அளித்தவர் பஜ்ரங்கி. முஸ்லிம்கள் இறந்துவிட்டால் அவர்களை எரிப்பதில்லை. புதைக்கப்படுவார்கள்; அதனால்தான் விபச்..... பிறந்த அவர்களை உயிருடன் எரித்தோம்! என்று வெளிப்படையாகவே தெஹல்காவிடம் ஒப்புக் கொண்டவர் பஜரங்கி. இந்த அரக்கத்தனத்தின் விளைவாகத்தான் தந்தையர் முன் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். கணவர் முன் மனைவிமார்களின்  வயிற்றிலிருந்து சிசுக்கள் கிழித்து எறியப்பட்டன. முஸ்லிம்கள் ஓட.. ஓட விரட்டப்பட்டு கொளுத்தப்பட்டார்கள்.

'பசித்தவன் பழத்தோப்புக்குள் நுழைந்தால் பழங்களை சுவைக்காமலா விடுவான்! இதைத்தான் என் விஷ்வ ஹிந்த் பரிஷத் சகோதரர்கள் செய்தார்கள். ம்.. போய்.. ஆசை தீர பழங்களை கடித்துக் குதறு என்று என் மனைவியே எனக்கு சொன்னாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!" - என்று முஸ்லிம் பெண்களை கற்பழித்ததை சர்வ சாதாரணமாக ஒப்புக் கொண்டார்கள் கொலைகளுக்குத் தலைமைத் தாங்கிய சுரேஷ் ரிசார்ட் போன்ற கொடும் பாதகர்கள்.

முஸ்லிம்   பெண்களை முழுமையாக துகிலுரித்த இந்த நவீன துச்சாதன்கள் அப்பெண்களை பல நாள் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து வைத்திருந்தார்கள். முழு நிர்வாணமாகவே நிவாரண முகாம்களுக்கு அப்பெண்கள் ஆடு, மாடுகளைப் போல கொண்டு சேர்க்கப்பட்டார்கள்.

சுரேஷ் ரிசார்ட் தெஹல்காவுக்கு அளித்த பேட்டியில்,  நர தாண்டவம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், பி.ஜே.பி. எம்.எல்.ஏ. மாயா பென் கோடானி நரோடா முழுவதும் பம்பரமாய் சுற்றித் திரிந்து அந்த வெறித்தனமான கொலைகளுக்கு தூபமிட்டுக் கொண்டிருந்ததை வெளிப்படையாகவே சொன்னார்.


கலவரங்களுக்கு தலைமைத் தாங்கிய இவர்கள் உடனுக்குடன் தங்கள் கொலைப் பட்டியலை இந்து தீவிரவாத இயக்கமான விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஜெய்தீப் பட்டேலுக்கு செல்போனில் தகவல் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களுக்கு மரண தண்டனை அளித்து முடித்த அன்று மாலை பஜ்ரங்கி அந்தக்  கொலைப்பட்டியலை குஜராத் உள்துறை அமைச்சருக்கு சமர்பித்து இனி சட்ட ரீதியாக தங்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவருடையது என்றும் சொல்லியுள்ளார்.

இரவு மஹா ராணா பிரதாபை போல நிம்மதியாக தூங்கியதாகவும், கடவுளே வந்திருந்தாலகூட அன்று நரோடா பாட்டியாவில் நுழைந்து தம்மை தடுத்திருக்க முடியாது என்றும் பகிரங்கமாக தனது வாக்குமூலத்தை தெஹல்காவிடம் பஜ்ரங்கி பதிவு செய்தார்.

இந்த வாக்கு மூலத்தையே வழக்காக்கி கொலைகாரர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்திருக்க முடியும். ஆனால், துரதிஷ்டவசமாக அவ்வாறு நடக்கவில்லை.



முஸ்லிம்களுக்கு எதிரான கொலை  வெறியை காவல்துறையினர் கைக்கட்டி பார்த்துக் கொண்டிருந்ததாகவும், முஸ்லிம்களை குறிபார்த்து சுட்டதாகவும், பள்ளத்தில் உயிர்க் காத்துக் கொள்ள பதுங்கிய சிலரை  காட்டிக் கொடுத்து உயிருடன் எரிக்க உதவியதாகவும் சுரேஷ் ரிசார்ட் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து முடிந்த குஜராத் கலவரங்களுக்கு இதுவரையும் நீதி கிடைக்கவில்லை. இது சட்டத்துறையும், நீதித்துறையும் வகுப்புமயமாகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியே அன்றி வேறில்லை!

கொலைக்காரர்களுக்குத் துணை நின்றது.. செல்போன் உரையாடல்கள் போன்ற முக்கிய தடயங்களை அழித்தது.. போன்றவை சிறுபான்மை இனம், இந்திய அரசியலமைப்பு மீது கொண்டுள்ள நம்பிக்கையை சிதறடித்தன.

குஜராத் கலவரங்களுக்குக் காரணமான நரேந்திர மோடிக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்படும்வரை,

இத்தகைய இனத்துவேஷங்களை விதைத்துக் கொண்டிருக்கும் அத்வானி, உமாபாரதி போன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை அளிக்கப்படும்வரை,

பாசிஸ நச்சு விதைகளை இந்திய நாட்டில் அனுதினமும் விதைத்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மற்றும் சங்பரிவார் தீவிரவாதிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தரும் காலம்வரை,

இந்திய நாட்டின் இரத்த நாளங்களாக விளங்கும் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்படும் இனம் ஒவ்வொன்றும் கரம் கோர்த்துக் கொண்டு இடைவிடாமல் நீதி நிலைநாட்டலுக்காகப் போரட வேண்டிய தருணமிது.


Thursday, February 6, 2014

இதழியல்: 'ரகசிய கேமரா பதிவு தவறல்ல'



நன்றி: தி இந்து (07.02.2014)

இதழியல்: காமிராவின் கைவண்ணம் - 6: 'நிற்க வைத்து 'தண்டனை' தராதீர்கள்!'

இடமிருந்து: அஹ்மது தன்வீர் மற்றும் அஹ்மது யஹ்யா.


காமிராவைக் 'கிளிக்' செய்யும்போது, கை நடுக்கம் கூடாது. அடுத்தது, எதனைப் படம் எடுக்க விரும்புகிறீர்களோ அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து 'ஃபோக்கஸ்' செய்ய வேண்டும்.

சரி, ஒரு முழுக் குடும்பத்தையும் படம் எடுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வீர்கள்? உதாரணமாக உங்கள் மூன்று பிள்ளைகளை, அவர்களது நண்பர்களுடன், உறவு முறைகளுடன் அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடன் படம் எடுக்க விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். எப்படி எடுப்பீர்கள்?

அவர்களை சுவர் ஓரமாக வரிசையாக நிறுத்தி படம் எடுப்பீர்களா?

அப்படி செய்துவிடாதீர்கள். இப்படி படம் எடுப்பதை 'சுட்டுத் தள்ளுவது' என்று அழைக்கலாம். சுடப்படப் போகிறவர்கள் போலவா நமது பிள்ளைகளை படம் எடுப்பீர்கள்? நிச்சயம் விரும்பமாட்டீர்கள்தானே?.

பிறகு?

குளத்தில் நீச்சலடிப்பது போலவோ, ஊஞ்சலாடுவது, ஓடியாடுவது, மரம் ஏறுவது, பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் இருப்பது என்று அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் படம் எடுத்துப் பாருங்களேன். அந்தப் படத்தில்தான் 'ஜீவன்' இருக்கும் 

இதை விடுத்து அவர்களை ஒருகாலும் சுவருடன் நிற்க வைத்து படம் 'Shoot' செய்ய வேண்டாம். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே படம் எடுங்கள்.  அவர்கள் மகிழ்ச்சியாக, மலர்ந்த முகத்துடன் துள்ளித் திரிகையில் படம் எடுப்பது இயற்கையாக இருக்கும். அவர்களைச் சுவர் ஓரமாக நிறுத்திவிட்டு, "காமிராவைப் பாருங்கள்!" - என்று சொல்லிவிட்டு நீங்கள் படம் எடுத்தால் அவர்கள் விறைப்பாக காமிராவை முறைத்துக் கொண்டு நிற்பார்கள். அது நன்றாக இருக்காது. எனவே அதைப் போன்ற படம் எடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். 

- ஆரி மில்லர்

Wednesday, February 5, 2014

பெஸ்ட் கிளிக்: 'நிழல்களும், நிஜங்களும்'

நிழல்களும், நிஜங்களும்
படம்: இக்வான் அமீர்
இடம்: சென்னை, எண்ணூர் கடற்கழி

பெஸ்ட் கிளிக்: 'நிழல்கள்'

நிழல்கள்

பெஸ்ட் கிளிக்: 'புதைந்து போனாலும், புதையா அழகு'

புதைந்து போனாலும், புதையா அழகு
படம்: இக்வான் அமீர்

பெஸ்ட் கிளிக்:'இனிய நாள்!'

இனிய நாள்

Guest Column: 'Where do you live?'



Police: Where do you live?

Small boy: With my parents.

Police: Where do your parents live?

Small boy: With me.

Police: And where do you all live?

Small boy: Together

Police: Where is Your Home?

Small boy: Beside my neighbours' house.

Police: Where is your neighbours' house?

Small boy: If I tell you, you will not believe me.

Police: Tell us?

Small boy: Next to my house. .....


Thanks: Amebor.com

சிறப்புக் கட்டுரை:‘மண்ணின் நிறங்களோடு தோள் கொடுங்கள்!'




"திருப்பூரில் அனியாயமாக 10 வயது சிறுவர்கள் 7 வயது சிறுமியை வண்புணலுறவு கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எங்கே செல்கிறோம் நாம்

எங்கள் கல்லூரி வாழ்க்கையில் சில மாணவர்களின் நடத்தையைக் கண்டு 'எங்கே செல்கிறோம் நாம்?' - என அன்றைய பெரியவர்கள் கேட்டது நினைவுக்கு வருகிறது.

உடல் மாற்றங்களை சரி வர புரிந்து கொள்ளாததாலும் மூன்றாந்தர இணையங்களின் தாக்குதல்களாலும், சரி வர புரிதல் இல்லாததன் விளைவோ இது? பாலியல் கல்வியை கட்டாயமாக்குவது அவசியமோ?" 

- எனது முகநூல் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வி இது.

மேற்கத்திய புலிகளைப் பார்த்து கோணல்-மாணல், கோடுகளைப் போட்டுக் கொண்ட பூனைகள் நாம் என்பதை பாவம் அவர் பார்க்க மறுக்கிறாரோ என்னவோ! நமது கலாச்சாரம் கைநழுவி போவதற்கான அடையாளத்தின்ஆரம்பம்தான் இது. நல்லவேளை! நமது தலைமுறைகள் அனுபவிக்கப் போகும் கொடுமைகளை காண நாம் இருக்கமாட்டோம்! 

மனித வாழ்வியலுக்கு அத்யாவசியமான அனைத்துத்துறை சார் விஷயங்களுக்கும் நமது நாடே ஏற்றுமதிக்கான சந்தை; ஆன்மிகம் உட்பட! அப்படியிருக்கும் நிலையில் இத்தகைய அவலங்கள் ஏன் ஏற்படுகின்றன? பொருள்சார் பேராசையால், வாழ்வியலைப் பல்வேறு கூறுகளாக்கிக் கொண்டதன் விளைவே இது.

ஒரு சீனனும், ருஷ்யனும், ஜப்பானியனும், கொரியனும் வளர்ந்து நிற்பதற்கு காரணம் அவனது மண் சார்ந்த கலாச்சார ஒழுக்க விழுமியங்கள்தான்! அதைத்தான் தற்போது சிதைக்கப் பார்க்கிறது மேற்கத்திய வல்லூறு. அவர்களின் வாழ்க்கை அவலங்களிலிருந்து நாம் பாடம் பெறுவதே அறிவுடமை. மேற்கத்திய கலாச்சார அமைப்புக்கு அடிமைப்படாமலிருப்பது நமது கொள்கையாக்கிக் கொண்டால் இது சாத்தியமே!

வருங்காலத் தலைமுறையினருக்கு நாம் விட்டுப் போக இருக்கிறது அற்புதமான வாழ்வியல் பரிசு என்று கூட இதைச் சொல்லலாம். ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு இது! 

சமீபத்தில் நான் குஜராத் மாநிலத்தின் புறநகர் பகுதி ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது, பூச்செடிகள் வாங்க பக்கத்திலிருக்கும் நர்ச்சரிக்கு செல்ல வேண்டி வந்தது, அம்மாநிலத்தில், குஜராத்திதான் பெரும்பான்மையினர் பேசுகிறார்கள் என்பது தகவல் பறிமாற்றத்துக்கான சிரமமாக இருந்தாலும் இந்தியை வைத்து ஓரளவு ஒப்பேற்ற முடிந்தது.


ஆனால், மொழி பறிமாற்றங்களைத் தாண்டி அந்த நர்சரியின் சொந்தக்காரரிடம் என்னை அதன் பணியாள் அறிமுகம் செய்தபோது, நெஞ்சைத் தொட்டு தன் முகமன்களை பறிமாறிக் கொண்டது, நடுங்கும் குளிரில் நெருப்பு மூட்டி அருகில் இருக்கையைப் போட்டு இருத்திக் கொண்டது எல்லாமே மனித இயல்புகளைத் தாண்டி, இந்திய கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவே என்னைப் பிணைத்து சகஜமாக்கியது.

அதேபோல, புத்தாண்டு கூத்துக்கள் எதையும் என்னால் அங்கு, பார்க்க முடியவில்லை; நள்ளிரவில் வெடித்த ஓரிரு வெடிகளைத் தவிர! பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்லும் மேல்தட்டு மக்கள் மது அருந்தும் பொருட்கள் சம்பந்தமாக கடும் சோதனைக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் நீண்ட கார் வரிசைகளில்.

அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் இந்திய கலாச்சாரத்தின் தாக்கம் குறைந்து, மேற்கத்திய கலாச்சாரம் பெருகிவருவதும் வேதனையோடு பார்க்க முடிந்தது.

எந்த செயலானாலும் அதன் விளைவுகளைப் பார்த்துதான் அதை நாம் செய்வோம். ஆனால், பரவிவரும் கட்டுப்பாடற்ற வாழ்வியல் மோகம் அந்த எல்லைகளைப் பீய்த்து எறிந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.

சமூக அமைதியும், அதன் விளைவான சமூகத்தின் வளர்ச்சியும் மிகவும் இன்றியமையாதது. வகுப்புவாதத்தை மூட்டைக்கட்டிவிட்டு, சமயம் மற்றும் சமயம் சாராதவர்கள் எல்லாம் அவரவர் எல்லைகளில் ஒன்றிணைந்து வருங்கால சமூகத்தை நற்சமூகமாக வார்த்தெடுக்க முன்வரவேண்டும்.

இதற்காக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதும் தவிர்க்க இயலாதது. 'காட்சி ஊடகங்களில் எதைக் காணலாம்? எதைக் காணக்கூடாது?' - என்று கற்றுத் தருதல், வளைத்தளங்களில் பாதுகாப்பாய் வலம் வர கற்றுத் தருதல் என்று அத்தனையும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தோழர்களாய் இருந்து கற்றுத் தருவதும் அவசியம். வரட்டுத்தனமாய் தடுப்பதைவிட வழிநடத்துவது முக்கியமானது.

Tuesday, February 4, 2014

இதழியல்:காமிராவில் கைவண்ணம் -5: 'ஃபிரேமுக்குள் சுவர்களா அடக்குவது?'



தெளிவில்லாத மங்கலான புகைப்படங்களுக்கு காமிராவின் மீது பழி போடக் கூடாது; படத்தைக் 'கிளிக்' செய்யும்போது, நம் கை நடுங்குவதுதன் விளைவாகவே படங்கள் 'ஷேக்' ஆகிவிடுகின்றன. கை நடுக்கம் முக்கியமான தவறுதான். 

ஆனால், அதேவேளையில், புதிதாகப் படம் எடுப்பவர்கள் மற்றொரு முக்கிய பிழை விட்டு விடுகிறார்கள். இது பொதுவாக 'புது முகங்கள்' எல்லோருமே செய்கின்ற பிழைதான். அது என்ன என்கிறீர்களா? தாங்கள் எடுக்கும் படங்களில் என்னென்னவெல்லாம் வரக்கூடாது என்று நினைக்கிறார்களோ அவற்றை எல்லாம் தற்செயலாகக் குறிப்பிட்ட ஃபிரேமுக்குள் வரச் செய்துவிடுவதுதான்.

அதை எப்படித் தவிர்ப்பது?

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 

ஒருமுறை ஒருவர் தனது மூன்று பிள்ளைகளையும் புகைப்படம் எடுத்து வந்து காட்டினார். நான் அந்தப் படத்தைப் பார்த்து அவரது திறமையைப் பாராட்ட வேண்டும் என்று அவர் எதிர்பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.

அந்தப் புகைப்படம் பாராட்டும்படி இல்லை. எனவே, "இப்போதெல்லாம் சுவர்களைக்கூட விட்டுவிடாமல் படம் எடுத்து விடுகிறோம் போலிருக்கிறதே!" - என நான் சொன்னதும் அவருக்கு என்னவோ மாதிரி ஆகிவிட்டது. 

ஆனால், நான் எதற்காக அப்படிச் சொன்னேன் என்று அவர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஆகவே, அவரிடம் அவர் எடுத்து வந்திருந்த படத்தைக் காட்டி, "இங்கே பாருங்கள் நீங்கள் எடுத்த படத்தில் முக்கால்வாசி இடத்தை ஒரு சுவர் அல்லவா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஆவலுடன் எடுக்க விரும்பிய உங்கள் மூன்று பிள்ளைகளும் படத்தின் கீழ்ப்புறத்தில் எங்கோ இடது கோடியில் ரொம்பவும் சின்னதாகத்தானே தெரிகிறார்கள். போதாதற்கு, அந்தக் குழந்தைகளின் கணுக்கால்களுக்குக் கீழ் உள்ள பகுதி வேறு வெட்டுப்பட்டுப் போய் விட்டதைப் பாருங்கள்!" - என நான் சுட்டிக் காட்டிய பிறகுதான் அவருக்கு அது தவறு என்று புரிந்தது. 

ஏதோ சுவர்தான் மிகவும் முக்கியம் போலவும் அவரது குழந்தைகள் அத்தனை முக்கியம் அல்ல என்பது போலவும் அவர் அந்தப் புகைப்படத்தை எடுத்திருந்தார். அந்தப் படத்தை எப்படி எடுத்திருக்க வேண்டும் என்பதை விளக்கியதும்தான் அவர் புரிந்து கொண்டார்.



அதேபோல, மற்றொரு படத்தை ஒரு பெண் கொண்டு வந்து காட்டினார். நீண்ட பசும்புல்தரை. அதன் மூலையில் தெளிவில்லாமல் வெள்ளையில் தேமல் படர்ந்த மாதிரி ஏதோ ஒன்று. "என்னம்மா! ஏன் இவ்வளவு சிரமப்பட்டு பசும்புல் வெளியைப் படம் எடுத்திருக்கிறீர்கள்?" - என்று கேட்டேன். 

அந்தப் பெண் திடுக்கிட்டார். 

"பசும்புல் வெளியா? நான் என் அருமை நாய்க்குட்டியை அல்லவா படம் எடுத்தேன்!" - என அவர் அப்பாவித்தனமாய் கூறியதும் எனக்குச் சிரிப்பு வந்தது. 

"நீங்கள் உங்கள் நாய்க்குட்டியைப் படமெடுக்க விரும்பியது சரி. ஆனால், நீங்கள் பிரேமுக்குள் நாய்க்குட்டியே பிரதானமாக இருப்பதைப் போல அந்தப் படத்தை ஃபோகஸ் செய்து எடுத்திருந்தால் 'லான்' (Lawn - புல்வெளி) முக்கிய இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிராதே!" - எனக்கூறி அப்படத்தை எப்படி எடுத்திருக்க வேண்டும் என்பதைவிளக்கினேன்.

இந்த இரண்டு படங்களிலும் இருந்த குறை மிகச் சரியாகச் சொல்வதாக இருந்தால்... அந்தப் படங்களை எடுத்தவர்களின் தவறு, அவர்கள் படம் எடுப்பதன் முக்கியமான அடிப்படைஒன்றைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் அதாவது படத்தின் ஃபிரேமுக்குள் அடக்கப்பட வேண்டிய அம்சங்கள் என்ன என்பதை அவர்கள் சரிவரத் தெரிந்திருக்கவில்லை.  

நீங்கள் எதனைப் படம் எடுக்க விரும்பிகின்றீர்களோ அதனை அதாவது உங்கள் வளர்ப்புப் பிராணியை, குழந்தைகளை, காரை முதலில் காமிரா 'வியூஃபைண்டரில்' பார்த்து அது அல்லது அவை ஃபிரேமுக்குள் தெளிவாகவும், முக்கியமாகவும் தனித்துத் தெரியும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மரம், செடி, கொடிகள், பூமி, ஆகாயம், சுவருக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். 

படம் எடுப்பவர்கள் கவனிக்க வேண்டிய இரண்டாவது முக்கிய அம்சம் இது.

- ஆரி மில்லர்
ஆரி மில்லர்





Monday, February 3, 2014

சிறப்புக் கட்டுரை: தண்டனைப் பெறாமலேயே மரணமுற்ற ஒரு கொடும் கொலையாளி'



இஸ்ரேலின் முன்னாள் பிரதமர், நவீன உலகின் பெருங் கொலையன் என்று அழைக்கப்படும் ஏரியல் ஷரோன் 11.01.2014 சனிக்கிழமை அன்று மரணமடைந்தார். டெல்அவிக்கு அருகில் உள்ள ஷீபா மருத்துவ மையத்தில் எட்டு ஆண்டுகள் கோமா நிலையில் இருந்த அவர் மரணமுற்றார்.

மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு நிகழ்வு என்றாலும், 85 வயதான முன்னாள் ராணுவ ஜெனரலான ஷரானின் மரண வேளையில் அவர் மனித இனத்துகு இழைத்த பெரும் கொடுமைகள் நினைவுகூருவதிலிருந்து தவிர்க்க இயலாது.

ஷரான் பிரிட்டீஷாரின் ஆதிக்கத்தில் இருந்த அன்றைய பலஸ்தீனத்தில் 1928ல், பிறந்தார். அவரது 14ம் வயதில், யூதர்களின் பயங்கரவாத தலைமறைவு இயக்கமான 'ஹாக்னாவில்' சேர்ந்தார். நாசவேலைகளுக்குப் பெயர் போன கொரில்லா இயக்கம் இது.

1940ல், இந்த பயங்கரவாத இயக்கம் பிரிட்டீஷாரின் நிலைகள் மீது திடீர் தாக்குதல் தொடுக்கலாயிற்று. அதிலும் குறிப்பாக ரயில் தண்டவாளங்களைத் தகர்ப்பது, ராடர் நிலைகள் மீது குண்டுகள் எறிவது, பிரிட்டீஷாரின் காவல்நிலையங்களைத் தகர்ப்பது என்று தீவிரமான நாச வேலைகளில் ஈடுபட்டது. அதேபோல, சட்டவிரோதமான யூத குடியிருப்புகளை பலஸ்தீனத்தில் அமைத்தது.

ஆறாண்டுகளுக்குப் பிறகு 1948ல், ஷரான் காலாட்படையின் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாகவே, உலக சியோனிஸ செயற்கள தலைவராகவும், பலஸ்தீனத்துக்கான யூத ஏஜென்ஸியின் தலைவராகவும் இருந்தவர் டேவிட் பென் குரியன். இவர் மண்ணின் மைந்தர்களான பலஸ்தீனர்களை தாய் மண்ணிலிருந்து அப்புறப்படுத்தி இனசுத்தகரிப்பு பணிகளில் ஏற்கனவே ஈடுபட்டிருந்தார். ஒரு கட்டத்தில், சுயமாக முன்வந்து ஒருதலைப்பட்சமாக பலஸ்தீனம் யூதர்களுக்குச் சொந்தமான இஸ்ரேல் என்று தடாலடியாக அறிக்கையும் விட்டார். பிரிட்டீஷ் அரசு பலஸ்தீனத்தை யூதர்களிடம் ஒப்படைக்கும் முன்பே இந்த பலவந்தம் அரசியல் சூழ்ச்சிகள் நடந்து முடிந்துவிட்டன.

ஆகஸ்ட், 1953ம் ஆண்டு, ஷரான் யூதர்களுக்கான பயங்கரவாத படை அமைப்பான 'இஸ்ரேலிய பாதுகாப்பு படை'  (IDF) உருவாக்கினார். டேவிட் குரியனின் உத்திரவின்படி இது நடந்தது. இந்த பயங்கரவாத படையின் முக்கிய வேலை அரபு குடியிருப்புகளின் மீது திடீர் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் கொன்றொழிப்பது.

1953ல், ஷரானின் ஆணைப்படி எல்லைப்புற கிராமமான 'கிப்யாவில்' 45 பலஸ்தீனியர் வீடுகள் மற்றும் ஒரு கல்விசாலை  மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 69 பேர் கொல்லப்பட்டனர் (இதில் பெரும் பகுதியினர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது) இதைத் தொடர்ந்து எழுந்த சர்வேதேச நிர்பந்தத்தால் தனது படையினர் நடந்து கொண்ட வெறிச்செயலுக்கு பென் குரியன் பகிரங்மாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

1956ல் சூயல்கால்வாய் யுத்தத்தில், ஷரானின் இஸ்ரேலிய பயங்கரவாத குழுவினர் பிரிட்டீஷ் மற்றும் பிரெஞ்சு ராணுவத்துக்கு ஆதரவாக எகிப்தின் சினாய் தீபகற்பத்தின் மீது தாக்குதல் தொடுத்தது. 'மித்லாவில்' நடைபெற்ற இந்தப் போரில் 260 எகிப்திய படையினரும், 38 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டார்கள். இந்த தாக்குதலில் அநியாயமாக எகிப்திய கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமையும் நடந்தது. இந்த பயங்கர வெறிச்செயலை இஸ்ரேலிய தலைமைத்தளபதி கண்டித்தும், ஷரான் அசையாத பதுமையாக நின்றார்.



மித்லா நிகழ்வு நீண்ட காலம் ஷரானின் ராணுவ வளர்ச்சிக்கு ஒரு தடையாகவே இருந்தது. 1964ல் இட்ழக் ராபின் ராணுவத்தின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றதும், ஷரான் கிடு கிடுவென்று பதவி உயர்வுகள் பெறலானார். மேஜர் ஜெனரல் வரை இந்த பதவி உயர்வு தொடர்ந்தது.

1967ல், ஆறு நாட்கள் தனது அரபு அண்டைநாடுகள் மீது இஸ்ரேல் தானாக முன்வந்து போர் தொடுத்தது. ஷரான் யூதர்களின் அதிபயங்கரமான படைப்பிரிவை சினாய் மீது தாக்குதல் தொடுக்க ஷரான் ஆணையிட்டார்.

1969ல் ஷரான் IDFன் தென்பகுதி தளபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 1972 வரை அவர் ராணுவத்திலிருந்து சுயமாக ராஜிநாமா செய்யும்வரை எத்தகைய பதவி உயர்வு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1973 எகிபத்து மற்றும் சிரியாவின் மீதான் யுத்தத்தின்போது அவர் மீண்டும் ராணுவப் பணிக்கு அழைக்கப்பட்டார். அந்த போர் ஷரானின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகி அரசியலுக்குத் தள்ளீயது.

லிகியூட் கட்சியில் சேர்ந்த ஷரான் பிரிட்டீஷ் அரசால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டிருந்த மெனாசிம் பெகினுக்கு ஆதரவளித்தார். 1973ல் இஸ்ரேலிய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமராக இருந்த இட்ழக் ராபின் அரசில் ஷரான் ராணுவ ஆலோசகராகவும், 1977ல் வேளாண்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். அரசாங்கத்தில் ஷரானுக்கு இருந்த அபரீதமான செல்வாக்கைப் பயன்படுத்தி 1967ல் ஆக்கிரமித்த பலஸ்தீன நிலப்பகுதிகளில் பலவந்தமாக நிரந்தர யூத குடியிருப்புகளை அமைக்க திட்டமிட்டார். "நாம் அமைக்க இருக்கும் இந்த நிரந்தர குடியிருப்புகள் மூலமாக நாம் அமைதியையும், பாதுகாப்பையும் பெற முடியும் என்று எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. அதனால், இதற்காக நாம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகளில் இருக்கும் அபாயங்கள் நமது நிரந்தர அமைதியின் முன் ஒரு பொருட்டே அல்ல!"- என்றார். அந்த நிரந்தர குடியிருப்புகளுக்காக ஷரான் தயாரித்த திட்டம் மறக்கவே முடியாதது. அந்த சந்தர்பத்தில் 'தஜோமெட்' கட்சியின் கூட்டத்தில் ஷரான் பேசும் போது  சொன்னது இது: "எல்லோரும், இங்கிருந்து இடம் பெயர்ந்து, ஓடோடிச் சென்று ஜுதியன் மலைச்சிகரங்களில் எவ்வளவுக்கு எவ்வளவு நிலப்பரப்புகளை அபகரித்துக்  கொள்கிறோமோ, பறித்துக் கொள்கிறோமா அவை நமக்கான நிரந்தர விரிவுப்படுத்தப்பட்ட குடியிருப்புகளாகிவிடும். பறித்துக் கொள்ளும் எல்லாமும் இனி நமதாகவே இருக்கும். கைநழுவவிடும் எல்லாமும் இனி அவர்களுக்கானதாகவே இருக்கும்! (Sharon said while addressing a meeting of the Tzomet party: "Everybody has to move, run and grab as many (Judean) hilltops as they can to enlarge the (Jewish) settlements because everything we take now will stay ours. ... Everything we don't grab will go to them.") 
Sharon said while addressing a meeting of the Tzomet party: "Everybody has to move, run and grab as many (Judean) hilltops as they can to enlarge the (Jewish) settlements because everything we take now will stay ours. ... Everything we don't grab will go to them."  - See more at: http://www.iviews.com/Articles/articles.asp?ref=IV1401-5658#sthash.NPgqJXpO.dpuf
Sharon said while addressing a meeting of the Tzomet party: "Everybody has to move, run and grab as many (Judean) hilltops as they can to enlarge the (Jewish) settlements because everything we take now will stay ours. ... Everything we don't grab will go to them."  - See more at: http://www.iviews.com/Articles/articles.asp?ref=IV1401-5658#sthash.NPgqJXpO.dpuf
Sharon said while addressing a meeting of the Tzomet party: "Everybody has to move, run and grab as many (Judean) hilltops as they can to enlarge the (Jewish) settlements because everything we take now will stay ours. ... Everything we don't grab will go to them."  - See more at: http://www.iviews.com/Articles/articles.asp?ref=IV1401-5658#sthash.NPgqJXpO.dpuf

Sharon said while addressing a meeting of the Tzomet party: "Everybody has to move, run and grab as many (Judean) hilltops as they can to enlarge the (Jewish) settlements because everything we take now will stay ours. ... Everything we don't grab will go to them."  - See more at: http://www.iviews.com/Articles/articles.asp?ref=IV1401-5658#sthash.NPgqJXpO.dpuf!
Sharon said while addressing a meeting of the Tzomet party: "Everybody has to move, run and grab as many (Judean) hilltops as they can to enlarge the (Jewish) settlements because everything we take now will stay ours. ... Everything we don't grab will go to them."  - See more at: http://www.iviews.com/Articles/articles.asp?ref=IV1401-5658#sthash.NPgqJXpO.dpuf
எகிபத்தின் அன்வர் சதாத்துக்கும், பிரதமர் பெகினுக்கும் 1978ல் நடந்த 'காம்ப் டேவிட்' உடன்படிக்கையை ஷரான் கடுமையாக எதிர்த்தார். அதேநேரத்தில், இஸ்ரேலிய அரசாங்கம் எடுத்த முடிவுகளை அமல்படுத்த உறுதுணையாக நின்றார்.

1982ல் ராணுவ அமைச்சராக பதவியேற்றதும், இஸ்ரேலின் வடக்குபுற அண்டை நாடான லெபனான் மீது படையெடுக்க ஆணையிட்டார். அதுவரை அங்கு நிலைகொண்டிருந்த பலஸ்தீன விடுதலைப் படையினரை (PLO) வெளியேற்றவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு 14,000 பலஸ்தீன மற்றும் சிரிய போராளிகள் பெட்ரூட்டிலிருந்து வெளியேற உடன்பட்டனர். அதேநேரத்தில், மேற்கு பெய்ரூட்டின் ஷப்ரா, ஷாதிலா பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பஸ்தீனியர்கள் முகாம்களிலேயே தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதற்கிடையில், மத்தியஸ்தில் வழக்கம்போல ஈடுபடும் செல்லப்பிள்ளை இஸ்ரேலின் பிதாமகனான அமெரிக்காவுக்கு கொடுத்த வாக்குறுதியை ஷரோன் மீறினார். இஸ்ரேலிய படைகளை மேற்கு பெய்ரூட்டுக்கு அனுப்பினார். அதற்கு அவர் சொன்ன விளக்கம்: 'அகதி முகாம்களில் இன்னும் 2,000 PLO வீரர்கள் பதுங்கி உள்ளனர்!' -என்பதுதான்.


அப்போதுதான் அந்த துக்ககரமான செப். 16-18, பாடுபாதக நிகழ்வு நடந்தது. இதற்கு ஒருநாள் முன்னதாக, லெபனானின் பஷீர் கெம்யாயெல் ஒரு கிருத்துவரால் படுகொலை செய்யப்பட்டார். இதற்கும் PLOக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் ஷரான் அந்த கொலையை PLOவின் மீது பழிசுமத்தினார். இதைத் தொடர்ந்து அவரது படைகள் பெரும் ஆயுத பலத்துடன்  நிராயுதபாணியான அகதி முகாம்களைச் சூழ்ந்து நிற்க, PLO வின் ஜன்ம பகைவர்களான 'பஹ்லான்ஜிஸ்ட்' தீவிரவாத படையை முகாம்களில் நுழைந்து கொலை வெறிச் செயல்களை அரங்கேற்ற துணை நின்றார். 3,300 அப்பாவி பலஸ்தீனயர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் படு கோரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு அது. பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்ட சோக சம்பவங்கள் அவை. இந்த வரலாற்றுப் பூர்வமான சோக நிகழ்வுக்கு ஷரான் எந்தவிதமான பொறுப்பும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலிய விசாரணை ஆணையம், 'கஹான் கமிஷன்' "அகதிகள் முகாமில் நடந்த படுகொலைகளை ஆபத்துக்களை தடுக்கத் தவறியதற்கும், புறக்கணித்ததற்கும் ஷரான்தான் தனிப்பட்ட முறையில் அதற்கான பொறுப்பேற்க வேண்டும்!" என்று தீர்ப்பளித்த கையோடு அவர் பணி விலகவும் பரிந்துரை செய்தது. இந்த கோர சம்பவம் தொடர்பாக உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பையும் ஷரான் பொருட்படுத்தாமல் பதவி விலகவும் மறுத்துவிட்டார். 1983-1984 வரை எந்தவித பொறுப்புகளும் இல்லாமல் இஸ்ரேலிய அரசில் அமைச்சராக நீடித்தார். 1984 லிருந்து 1992 வரையிலான ஷரானின் அரசியல் வாழ்க்கை பாதித்தாலும் இஸ்ரேலிய அரசின் முக்கியத்துவம் இல்லாத பணிகளில் தலைக்காட்டியவாறே இருந்தார்.


1999 தேர்தல்களில் 'லிகியூட்' கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, கட்சியின் வளர்ச்சிக்கு உதவும்வகையில் பெஞ்சமின் தெதன்யாகு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செப்.28, 2000 பலஸ்தீனியர்களிடையே 'இரண்டாம் இன்திபாதாஹ்' வெடித்துக் கிளம்பிய நேரத்தில், ஷரான் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும்விதமாக நடந்து கொண்டார்.

திடீரென்று பலஸ்தீனத்தின் ஹராம் அல் ஷெரீப் புனித தலத்துக்கு பயணம் மேற்கொண்ட ஷரான் "அந்த புனித தலம் அமைந்திருக்கும் இடம் இன்னும் இஸ்ரேலியரின் கட்டுப்பாட்டிலேயேதான் உள்ளது!" - என்று அறிக்கை விட்டார். அடுத்த 6 மாதங்களில் அதாவது பிப். 2001 நடந்த தேர்தல்களில் மொத்த அரசியல் அதிகாரத்தையும் அவர் கைப்பற்றினார். 

பலஸ்தீனியரிடமிருந்து கைப்பற்றிக் கொண்ட மேற்கு கரையின் பகுதிகளில் யூத குடியிருப்புகளை உருவாக்கியதோடு, உலகின் எதிர்ப்பையும் மீறி இனவாத தடுப்புச் சுவரையும் ஷரான் பிரதமராக இருந்த காலத்தில்தான் நடந்தது. அவரது பல்வேறு ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள், யூத இன தீவிரவாதிகள் நிறைந்த 'லிகியூட்' கட்சிக்குள்ளேயே அந்நியராக்கி, தனிமைப்படுத்தின. 2005 கட்சியிலிருந்து விலகி ''காதிமா கட்சியை'' துவங்கச் செய்தன.

2005ல் ஷரான் நெஞ்சு வலி தாக்குதலுக்கு ஆளானார். அடுத்ததாக 2006ல் ஏற்பட்ட தீவிரமான நெஞ்சுவலியால் கோமாவுக்கு தள்ளப்பட்டு நினைவு திரும்பாமலேயே மரணமுற்றார்.


இதற்கு முந்தைய மற்றும் நடப்பு காலத்திலும், சியோனிஸ ஆட்சியாளர்கள் இஸ்ரேலின் 'கள்ளத்தனமான' உதயத்திலிருந்து இதுவரையிலும் பல்வேறு இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் ஏரியல் ஷரான், வாழ்க்கை முழுவதும் கடுங்குற்றச் செயல்களின் தலைமைப் பொறுப்பாளராகவும், கொடுங்கொலையாளியாகவுமே வரலாறு பதிவு செய்துள்ளது. மேற்கு கரையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களை அவர்களின் தாய் மண்ணிலிருந்த பலவந்தமாக அப்புறப்படுத்தி சட்டவிரோதமான யூத குடியிருப்புகளை உருவாக்கியவர் ஏரியல் ஷரான். யுத்த வீரனாக, ஒரு கதாநாயகனாக இஸ்ரேலியர்களால் போற்றப்பட்டாலும், இஸ்ரேலுக்கு வெளியே உலக மக்களால் ஒரு மோசமான போர் குற்றவாளியாகவும், மனித இனத்துக்கு இழைத்த கொடுமையான குற்றங்களுக்கு  உலக போர் தீர்ப்பாயகத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைப் பெறாமலேயே மரணமுற்றார்.

Source: iviews.com