NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Thursday, January 9, 2014

வளைகுடா செய்திகள்: 'மீன் விற்கும் என்ஜீனியர்!'


சைபுல்லாஹ்
வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்த மீனின் வாலைப் பிடித்து, மரக்கட்டையில் அதைக் கிடத்தி, பள பளக்கும் கத்தியால் அதன் செதில்களை சீவி ஒரு கைத்தேர்ந்தவர் போல மீனை சுத்தப்படுத்தும் அந்த இளைஞரின் செயல்வேகம் பார்ப்போரை வியப்படையவே செய்யும். அவர் பாரம்பர்யமாக மீன் விற்பவரா என்ன? இல்லை! என்ற ஒற்றை வரியில் பதிலைச் சொல்ல முடிந்த அதேநேரத்தில், அவரை மீன் விற்கும் இன்ஜினியர் என்று வேண்டுமானால் சொல்லலாம்! உண்மைதான்! வியப்பில் புருவங்களை உயர்த்தும் அந்த நிகழ்வுக்கு காரணமான இளைஞர் ஒரு பொறியியல் பட்டதாரி!

பாகிஸ்தானை சேர்ந்த தொழில்நுட்ப பொறியாளரான சைபுல்லாஹ் (27), பாகிஸ்தானைச் சேர்ந்தவர். தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் உள்ள மீன் சந்தையில் மீன்களைச் சுத்தம் செய்யும் பணியில் இருக்கிறார். 

சைபுல்லாஹ், பாகிஸ்தானின் 'ஜின்னா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி', தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,) பொறியியல் பட்டம் பெற்றவர். 

"கடந்த 2000ம் ஆண்டு, லண்டனில் முதுகலை பட்டப்படிப்பான வணிக மேலாண்மை பயில சென்றிருந்தேன். ஆனால், எதிர்பாராதப விதமாக என் தந்தையார் மரணம் அடைந்ததால், என் சகோதரர்களை காப்பாற்றவும், வீட்டை கவனித்து கொள்ளவும் நான் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. என் படிப்பை பாதியில் துறந்து வீடு திரும்பினேன். 

கடந்த 2009ம் ஆண்டு வேலை தேடி ஷார்ஜாவுக்கு வந்தேன். ஆனால், முன் அனுபவம் இல்லாத காரணத்தால் பல வணிக குழுமங்கள் எனக்கு வேலை அளிக்க மறுப்பு தெரிவித்தன. வாய்ப்புகளே அளிக்காமல் முன் அனுபவம் பற்றி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது.

படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத நிலையில், குடும்பத்தை வழிநடத்த இதைத் தவிர வேறு வழி ஏதும் எனக்குப் புலப்படவில்லை. இந்தத் தொழிலை ஒருபோதும் நான் தரக்குறைவாக கருதியதில்லை. இறைவன் நாடினால், ஒரு நாள், நானும் வாழ்வில் நிச்சயம் முன்னேறுவேன், இதையே, என் நண்பர்களும் என்னோடு பணிபுரிபவர்களும் சொல்கிறார்கள்!" - என்கிறார் தன்னம்பிக்கையுடன் சைபுல்லாஹ்.

தனது வாடிக்கையாளர்களிடம் அழகான ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி மீன் விற்பதில் சைபுல்லாஹ் திறமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

(தகவல்: ஹாரூன் ரஷீத்) 
 

Wednesday, January 8, 2014

நடப்புச் செய்தி:"எவரெஸ்ட் சாதனையாளர், காய்கறி விற்கிறார்!"


கடந்தாண்டு மே மாதம், உலகின் மிக உயர இமயத்தின் எவரெஸ்ட் சிகரங்களைத் தொட்ட அந்த 24 வயது  சாதனையாளர் 'ராம் லால்' இன்று பதேஹேபாத் மாவட்டத்து, டொஹனா நகரில், தெரு தெருவாய் தள்ளு வண்டியில் காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கிறார். வேறு என்ன செய்ய? படுத்தப் படுக்கையாய் கிடக்கும் தந்தையாரையும், குடும்பத்தாரையும் காக்க வேண்டுமே? வாழ்க்கை வண்டியைத் தள்ளுவது எப்படி?

நமது தேசிய கொடி மூவர்ணங்களில் பட்டொளி வீசி இமயத்தின் சிகரங்களில் பறந்த போது ஹரியானாவின் முதல்வர் பூபேந்தர் சிங் ஹோடாவால் 5 லட்சம் பரிசளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டார். ஆனால், அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகள் பொய்யான வாக்குறுதி களாகிவிட்டன; வழக்கம் போல!

அண்மையில்தான், மற்றொரு எவரெஸ்ட் சாதனையாளர் 'மம்தா சோதஹா' இணை கமிஷ்னராக பணி நியமனம் பெற்று, 21 லட்சங்கள் பரிசளிக்கப்பட்ட நிலையில், ராம் லால் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார். 

"சில அரசு சாராத அமைப்புகள், தனிநபர்கள் இவர்களின் உதவிகள் மற்றும் கடன் என்று என் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கிறது. படுத்தப் படுக்கையாக கிடக்கும் என் தந்தையாரின் மருத்துவ செலவுகளுக்கும் காய்கறிகளை விற்பனை செய்தாக வேண்டிய கட்டாய நிலையும் ஏற்பட்டிருக்கிறது!" - என்கிறார் ராம் லால் வேதனையோடு.

"நான் அதிகப்படியாக எதையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு முன்னால் எவரெஸ்ட் சிகரங்களில் ஏறி சாதனைப்படைத்தவர்கள் நடத்தப்பட்டதைப் போலவே நானும் நடத்தப்பட வேண்டும் என்றே விரும்புகின்றேன்" - என்கிறார் ராம் லால்.

இந்நிலையில், ஹரியானாவின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறையின் டைரக்டர் ஜெனரல் சுதிர் ராஜ்பால், "ராம் லால் சாதனைகள் சரிபார்க்கப்படுகின்றன. விரைவிலேயே அவருக்கு சேர வேண்டியவைகள் முறையாக வழங்கப்படும்!" - என்கிறார்.

"பணி நியமனங்கள் என்பவை விளையாட்டுத்துறையில் பதக்கங்களை வெல்பவர்களுக்குத்தான் அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதைக் குறித்து ராம் லாலிடம் பேசும்படி பதேஹேபாத்தின் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி பணிக்கப்பட்டிருக்கிறார்!"-  என்கிறார் தொடர்ந்து ராஜ்பால்.

எது எப்படியாயினும், ராம் லாலின் சாதனை மதிக்கப்பட வேண்டும். அவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க வேண்டும். ஏனெனில் அவர் படைத்த சாதனை நாட்டின் பெருமையை உலகறிய பறைச்சாற்றும் சாதனையாகும்.

(ஆதாரம்: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா,31.12.2013, அஹ்மதாபாத் பதிப்பு)

பெஸ்ட் கிளிக்: 'மிளிரும் பாரதத்தின் உண்மை முகங்கள்!'

மிளிரும் பாரதத்தின் உண்மை முகங்கள்; உரிமை வாரிசுகள்: குஜராத், ராஜ்கோட் அருகே.

Tuesday, January 7, 2014

நடப்புச் செய்தி:'தாங்களே எரித்துக் கொண்டு ... தாங்களே மாண்டுப் போனவர்களின் கதை இது!'


Riot victim Shaukeen Shareef with his four children.
முஜாபர் நகர் வகுப்பு கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கியுள்ள முகாம்களில் ஒன்று 'பாஸிகலான்'; ஷாபூர் காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவது. இங்கிருந்து ஆறே கி.மீட்டர் தொலைவில்தான் அவர்களின் சொந்த இரட்டைக் கிராமங்களான 'குத்பா, குத்பி உள்ளன. 250 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களைத் தவிர்த்து, ஜாட், ஜீவாத், பிரஜாபதீஸ் மற்றும் சுனார்ஸ் (பொற்கொல்லர்கள்) ஆகியோரும் இந்த இரட்டைக் கிராமங்களில் வசிக்கிறார்கள். வழக்கம் போலவே சாதாரண அரசியல்வாதிதான் இவர்களது சட்டசபை உறுப்பினரும். 2012 தேர்தல்களில் இவர்களின் நம்பிக்கை நட்சித்திரமாக இருப்பதாக வாக்குறுதி அளித்து வெற்றிவாகைச் சூடியவர்தான் புதானாவின் எம்எல்ஏ நவாஜிஷ் கான். 

செப்டம்பர் 8, 2013 வகுப்பு கலவரங்களின் போது, "எங்களை நிச்சயம் காப்பார் என்று முடிவெடுத்து செல்பேசியில் தொடர்பு கொண்ட எங்களுக்கு ஏமாற்றமே மித மிஞ்சியது. அது தொடர்பு எல்லைக்கு அப்பால்.. அதாவது அணைத்து வைக்கப்ட்டிருந்ததை அறிந்து பதறிப் போனோம் நாங்கள்!" - என்கிறார் இன்னும் பயம் கலந்த குரலில் கிராமத்தின் தலைவரான முர்சலீம். 

"நான் வழக்கமாக சோலிகானின் 'கஸ்பாவில்' தங்குவேன். கலவரம் நடந்த அன்று கலவரக்காரர்கள் என்னை பிடித்து வைத்து கடுமையாகத் தாக்கினார்கள். எப்படியோ தப்பி ஓடிய நான் ஜாட் பகுதியில் அமைந்திருந்த காவல் நிலையத்தை அடைந்து காப்பாற்றும்படி சொல்லியும் என்னை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. கலவரக்காரர்களுக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. கடைசியில் ராணுவப் படையினர் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்!" - என்கிறார் முஹம்மது யாமீன் இன்னும் மிரட்சி கலையாமல்.

File photo of Mursaleem, village chief at Basikalan camp who saved many lives the night violence took place.
"பயங்கரமான துப்பாக்கி வேட்டுகளும், கொலை வெறித்தாக்குதல்களும் நடந்து கொண்டிருந்த அந்த இரவு முழுவதும் நாங்கள் தப்பிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டவாறே இருந்தோம். நாங்கள் தப்பிச் செல்லாதவாறு எல்லா பாதைகளையும் கலவரக்காரர்கள் அடைத்து விட்டார்கள். இந்நிலையில் எங்கள் கிராமத் தலைவர் முர்சலீம் ராணுவப் படையினரை தொடர்ப்பு கொண்டு அவர்களது பாதுகாப்பு பெற்றிருக்காவிட்டால் எங்களில் ஒருவரையும் நீங்கள் இப்போது உயிருடன் பார்த்திருக்க முடியாது!" - என்கிறார் தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவரான ஹஸன்.

நிலைமையின் விபரீதத்தையும், ஜாட் குடியிருப்புகளிலிருந்து வரும் வேட்டுச் சத்தங்களையும் காட்டி ஷாபூர் காவல்துறையிடம் பாதுகாப்புக் கேட்டப் போது அவர்கள் எக்காளமாக கைக்கொட்டிச் சிரித்தார்கள். "போங்கள்.. போங்கள்.. அவை வெறும் பட்டாசு வெடிச்  சத்தம்தான் போங்கள்!" - என்று விரட்டி அடித்தார்கள்.  கடைசியில் தப்பிப் பிழைக்க வேறு பாதுகாப்பான வழித்தடங்களைத் தேடி உயிர் பிழைத்தோம்!" - என்கிறார் ஹஸன் தொடர்ந்து. 

வாலியானின் பிஜேபி பிரமுகரான டாக்டர் சஞ்சீவ், குத்பி கிராமத்தைச் சேர்ந்த பிரதான் தேவேந்தர் மற்றும் உபேந்தர் இவர்களின் முகங்களை இவர்கள் இன்னும் மறக்கவில்லை. இவர்கள்தான் 'சந்த்யா சக்தி சங்' என்னும் பெயரில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அமைப்பை உருவாக்கியவர்கள். வாரத்தில் இரண்டு முறை கூட்டங்களை நடத்தியவர்கள். அதில் கலந்து கொண்ட இளைஞர்களிடையே வகுப்பு வெறியை வளர்த்தவர்கள். 

"எங்கள் கிராமத்தில் மட்டும் எட்டு பேர் கொல்லப்பட்டார்கள். இந்த எட்டு பேரில் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் நான்கு பேர். நான் அனைத்தையும் இழந்து பரிதவிக்கிறேன். எந்த வகை இழப்பீடும் எனது இழப்புகளை ஈடு செய்ய முடியாது!" -  என்கிறார் கலங்கிய கண்களுடன் குத்பா கிராமத்தைச் சேர்ந்த இம்ரான்.

கிராமத் தலைவரான முர்சலீமின் இடைவிடாத முயற்சியால் தற்போது கலவரத்தால் அனைத்தையும் இழந்த 90 பேருக்கு புதிய வீடுகள் கிடைக்க இருக்கின்றன.

வகுப்பு கலவரங்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு உ.பி. அரசின் அலட்சியங்களைத் தாண்டி பெயரளவுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் புண்ணியம் கட்டிக் கொண்டது. நீதிமன்றம் தலையிடவில்லை என்றால் இதுவும் கிடைத்திருக்கும் வாய்ப்பில்லை.

நிவாரணம் வழங்கும் முறைகளும் ஏக குழப்பத்தில் உள்ளன. ஒரே வீட்டில் தனித்தனியாக வசிங்கும் குடும்பத்தார் ஒரு குடும்பம் என்று தீர்மானிக்கப்படுகிறது. அல்லது தனித்தனி வாசல்களைக் காட்டியாக வேண்டும். 

"கூட்டுக்குடும்ப அமைப்பையே எள்ளி நகையாடுகிறது இந்த நிவாரண முறை!" - என்கிறார் முர்சலீம்.

இன்னும் அனைத்து அடையாளங்களையும் இழந்து தவிப்பவர்கள் இந்த முகாமில் ஏராளமான பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அவர்களது கிராமத் தலைவர் முர்சலீம்தான் ஒரே ஆறுதல்.

File photo of Kandhla based Adv. Asad Hayaat who has taken up victims' cases.
கந்தாலாவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஹசத் ஹயாத்தான் இவர்களது தற்போது, வழக்குகளை கையில் எடுத்துள்ளார். இவரும் அரசின் நிவாரண உதவிகளை விமர்சிக்கிறார்: 

"அரசின் நிவாரணக் கொள்கை மிகவும் மோசமாக உள்ளன. 1800 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளார்கள். அதில் ஏக கெடுபிடிகள் வேறு. 25 லட்சம் இழப்பீடு என்று அரசாங்க பதிவேடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த 5 லட்சம்தான் இழப்பீடாக தரப்படுகிறது. நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொண்டவர்கள் இனி ஒரு போதும் கிராமங்களுக்குத் திரும்ப முடியாதவாறு பிரமாணப் பத்திரங்களை எழுதி வாங்கிக் கொள்கிறார்கள் அதாவது அவர்கள் தங்கள் கிராமங்களில் உள்ள சொத்துப் பத்துக்களை விற்க முடியாது. இது எந்த வகையிலும் நியாயமானதல்ல!" - என்கிறார் வழக்குரைஞர் ஹசத் ஹயாத்.

வெந்தணலில் இழந்த அனைத்தும் வெறுமையாய் போனது; நீதி தேவதையும் கண் கட்டிக் கொண்டது. சாட்சிகள் இருந்தும் நீதி மன்றங்களில் இவர்களது வழக்குகள் குறைந்தது பத்தாண்டுகளுக்கு பின் தள்ளுப்படி செய்ய இருக்கின்றன; சாட்சிகள் இல்லை என்று. 

தாங்களே எரித்துக் கொண்டு தாங்களே குத்திக் கொண்டு , தாங்களே மாண்டுப் போனவர்கள் இவர்கள் என்று வரலாற்றில் பரிதாபமாக பதியப்பட இருக்கும் அற்ப ஜீவன்கள் இவர்கள்!

(Source: TwoCircles.net)






வளைகுடா செய்திகள்: 'முறையற்ற கிணறுகளை உடனடியாக மூடிவிட ஆணை'


This unattended well on Ali Ibn Al-Naqeeb Street in Al-Hazm District, Riyadh, is just one of tens of thousands of abandoned wells in the Kingdom that pose a threat to residents. (AN photo)
இரண்டு வாரங்களுக்கு முன்னர் 'லமா அல் ரவ்கீஹ்' என்னும் பெயர் கொண்ட 6 வயது குழந்தை ஆழத்துளைக் கிணறு ஒன்ற்றில் வீழ்ந்து மரணமடைந்தது. மோசமான வானிலையும், மண் சரிவும் குழந்தையை மீட்க முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து ஆபத்தான மற்றும் சட்ட விரோதமாக தோண்டியுள்ள ஆழ்த்துளைக் கிணறுகளை மூடிவிட சவுதி அரசாங்கம் முடிவெடுத்து நாட்டில் உள்ள அனைத்து ஆழ்த்துளைக் கிணறுகளையும் கணக்கெடுக்கும்படி ஆணையிட்டது. அப்போது, 1 லட்சத்து 30 ஆயிரம் சட்டவிரோதமான கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏற்கனவே கடுமையாக எச்சரித்தும், அபராதங்களை விதித்தும் அந்தக் கிணறுகள் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான கிணறுகளை மூடும்படியும் அல்லது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளும்படியும் அதன் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நீர்வள மேம்பாட்டுத்துறை 'டைரக்டர் ஜெனரல்' அல் தாயெர் தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் சட்டவிரோதமாக கிணறுகள் தோண்டாமலிருக்க கண்காணிப்புக் குழுவினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் சொன்னார். 

சட்டவிரோதமாக கிணறுகள் தோண்டுவோருக்கு 5,000 சவுதி ரியால்களிலிருந்து 25,000 சவுதி ரியால்கள்வரை அபராதம் விதிக்கப்படுகிறது. 

சவுதி அரசின்  அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களின்படி நாட்டில் 1,44,000 அனுமதிப் பெற்ற கிணறுகள் உள்ளன. இவற்றில், 1,37,0000 கிணறுகள் தனியாருக்குச் சொந்தமானவை. பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் இந்தக் கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

2011 ஆம், ஆண்டு நடத்தப்பட்ட கணக்கின்படி, நாட்டில் 7,114 அரசு கிணறுகளிலிருந்து நீர்வளம் பயன்படுத்தப்பட்டது. இவற்றில் 3,334 கிணறுகளின் நீர் எந்திரக் குழாய்கள் மூலமாகவும், 2,578 கிணறுகள் சாதாரண நிலையிலும் பயன்படுத்தப்பட்டன. 

இதுவே,

  • 2007 இல், 6,162 கிணறுகளும், 
  • 2008 இல், 6,422 ம், 
  • 2009 இல், 6,649,
  • 2010 இல், 6,872 கிணறுகளும் இருந்தன.

அதேபோல,

  • 2007 இல் அரசு அனுமதிப்பெற்ற தனியார் கிணறுகளின் எண்ணிக்கை 1,27,00,
  • 2008 இல், 1,29,000 கிணறுகளும், 
  • 2009 இல் 1,31,000 ம்,
  • 2011 இல், 1,37,000 கிணறுகளும் முறையாக அரசு அனுமதிப் பெற்றிருந்தன. 

இப்படி முறையாக அரசு அனுமதிப் பெற்ற தனியாருக்குச் சொந்தமான கிணறுகளில் 61,000 கிணறுகள் ரியாதில் உள்ளன. அடுத்தது காஸிம், ஹய்ல், தபூக், ஜவூப் மற்றும் வடக்கு எல்லைப்புறங்களில் 46,000 கிணறுகள் உள்ளன. பஹா, ஆஸிர், நஜ்ரான் மற்றும் ஜாஜன் 10,312 கிணறுகளும், கிழக்குப் பகுதிகளில் 10,000 கிணறுகளும், மக்கா, மதீனாவில் முறையே 8,000 கிணறுகளும் முறையாக சவுதி அரசின் அனுமதிப் பெற்று தனியாரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆதாரம்: அரப் நியூஸ்)

நடப்புச் செய்தி:'ஜே.எஸ். ரிபாயி விடுதலை'

மௌலானா ஜே.எஸ்.ரிபாஃயி ரஷாதி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி விடுதலை செய்யப்பட்டார். இது சம்பந்தமான உத்திரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனவரி 2012ல் சென்னை பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நாகூரில் 1995ல் நடைபெற்ற ஒரு அசம்பாவித சம்பவம் தொடர்பாக சம்பந்தப்படுத்தி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ் ரிபாயி உட்பட மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்கள்.

வளைகுடா செய்திகள்: 'ஜம் ஜம் குடிநீர் சேவையில் மற்றுமோர் மைல்கல்'

A portable Zamzam delivery service was launched at the Grand Mosque in Makkah on Monday by Abdul Rahman Al-Sudais, chief imam of the Grand Mosque.

கஅபாவை தரிசிக்க வருவோரின் குடிநீர் தேவைகளுக்காக நடமாடும் குடிநீரகங்கள் இனி தயார். ஆம்..! மிகவும் சுத்தமான, ஒருமுறை பயன்படுத்தும் குடிநீர் கோப்பைகளுடன் கூடிய இந்த நடமாடும் 'ஜம் ஜம்' நீர்க் குடிநீரகங்கள் திங்களன்று மக்காவின் தலைமை இமாம் அப்துற் றஹ்மான் அல்-சுதைஸியால் அறிமுகப்படுத்தப்பட்டன. பையைப் போல முதுகில் சுமந்து செல்லும் வசதி கொண்ட இந்த நடமாடும் குடிநீரகங்கள் யாத்திரிகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

(ஆதாரம்: அரப் நியூஸ்)

Monday, January 6, 2014

பெஸ்ட் கிளிக்: 'அழகுக்கான 'போஸ்' அல்ல..

அழகுக்கான 'போஸ்' அல்ல! கிளம்புங்க.. சீக்கிரம் ஆடு மேய்க்கணும்..!
இடம்: குஜராத், அஹ்மதாபாத்தின் புறநகர் பகுதி.

பெஸ்ட் கிளிக்: 'வண்ண மயங்கள் வாழ்வில் இல்லை!'

வண்ணமயங்கள் வாழ்வில் இல்லை
வாழ்வியல் தேடல்களுக்காக அனுதினமும் பாத யாத்திரை
இடம்: குஜராத், அஹமதாபாத்தின் புறநகர் பகுதி.

Saturday, January 4, 2014

ஆய்வுக் கட்டுரை: 'தேவை: வெகு நிதானமான விமர்சனங்கள்!'

70,000 பாஜகவினர் 'ஆம் ஆத்மி கட்சி'யில் இணைந்தனர் ! முன்னாள் எம்.எல்.. 'டாக்டர் கல்சாரியா' உள்ளிட்ட பிரபலங்களும் கட்சிக்கு முழுக்கு! குஜராத் மாநில விவசாயிகளின் 'ஆபத் பாந்தவனாக' கருத்தப்படும், பாஜக முன்னாள் எம்.எல்.. டாக்டர் காணு கல்சாரியா, ஆம் ஆத்மி கட்சியில், தன்னை இணைத்துக் கொண்டார். 'ஆம்' கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் 'தினேஷ் வகேலா' முன்னிலையில் நடந்த இணைப்பு விழாவில் நவ்பாய் டோராஜியா உள்ளிட்ட ஏராளமான பாஜக பிரபலங்கள் 'ஆம் ஆத்மி கட்சி'யில் தங்களை இணைத்துக் கொண்டனர்

 

முன்னதாக, தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மோடியை வீழ்த்த நினைத்ததாகவும், காங்கிரஸ் அதைப் பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டதாகவும் கூறுகிறார், டாக்டர் கல்சாரியா. மோடிக்கு ஒரே மாற்று 'ஆம் ஆத்மி கட்சி' தான் என்பதை தாம் உணர்ந்தே 'ஆப்' கட்சியில் இணைந்துள்ளதாக விவரிக்கிறார், கல்சாரியா.

மாநில விவசாயிகளின் ஆபத் பாந்தவனாக கருதப்படும் டாக்டர் காணுவை, 2014 பாராளுமன்றத்தேர்தலில் மோடிக்கு எதிராக களம் இறக்க 'கேஜ்ரிவால்' முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த செய்திகளின் அடிப்படையிலான நிகழ்வுகளால் இந்திய அரசியல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுமா?

மதம் ஒரு அபின் என்றார் கார்ல் மார்ஸ். அந்த அபினின் உச்சக்கட்டச் சுவையை-போதையை அடைந்தவர்கள்தான் பிஜேபி மற்றும் அதன் தாய் அமைப்புக் கட்சி உறுப்பினார்கள். இவர்கள் எந்த இயக்கங்களில் இணைந்தாலும், உள்ளூர அந்த போதையின் தாக்கத்திலிருந்து விடுபடுவது மிகவும் சிரமம்.

இங்கு மோடி தூற்றப்படுவது அவரது பாஸிஸ சிந்தனைப்போக்குக்காகவும், அந்தச் சிந்தனையால் ஏற்பட்ட பேரழிவு உயிர் பலிக்கான நீதித் தேடியும். இதில் அவர் சிந்தனை மாற்றம் செய்து தன்னை நீதியின் முன் நிறுத்தி தண்டனைக்காளாக்கிக் கொண்டால் அவருக்கும் மற்றவர்களுக்கும் என்ன பிணக்கு இருக்க முடியும்?

அதேபோல, மோடி சார்ந்துள்ள பி.ஜே.பி அதன் தாய் இயக்கம் மற்றும் துணை இயக்கங்களும் ஒரு சித்தாந்தம் சார்ந்தவை. அது நன்மை பயப்பதோ தீமைப் பயப்பதோ எதுவானாலும் அதை அடைவதுதான் அவர்களின் இலட்சியம்.

காங்கிரஸீம் தனக்கென ஒரு சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது மறுக்க இயலாது. அதுவும் அதை நோக்கி நகரும்.

ஆனால், கேஜரிவாலுடைய இயக்கமோ ஒரு தெருவாசிகள் தங்கள் தெருவில் மின்விளக்கு வேண்டி நடத்தும் இயக்கம் போன்றது. மின்விளக்கு அமைந்துவிட்டால் அதன் செயல்பாடுகள் முடங்கிவிடுவது இயல்பு. அத்துடன் அது மேட்டுக்குடி மக்களால் சூழப்பட்டுள்ள அடிப்படைகளற்ற இயக்கம்.

400 வருடங்கள் பழமை வாய்ந்த டெல்லியிருந்த மெஹ்ரௌலி பள்ளி வாசல் மற்றும் அதைச் சுற்றியிருந்த இஸ்லாமியர்களின் வீடுகளையும் 2012 ல் டெல்லி நகர வளர்ச்சித் துறை ஆணையம் சட்டத்திற்கு புறம்பாக உரிமை கோரி இடித்துத் தள்ளியது. அதைப் பற்றிய தனது நிலைப்பாட்டை தேர்தலுக்கு முன்னரோ அல்லது வெற்றி பெற்ற பின்னரோ இதுவரை அரவிந்த் கெஜ்ரிவால் பேசவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.  ஆனால், கேஜரிவால் டெல்லியின் முதல்வரிலிருந்து  பிரதம வேட்பாளராக வடிவமெடுக்க வைக்கப்படுகிறார்.

கூடங்குளம் பிரட்சினையின் போது இடிந்த கரை என்ற ஓர் ஊரைச் சார்ந்த மக்களின் நலனுக்காக டெல்லியிருந்து வந்த கேஜரிவால், முசாபர்நகர் கலவரத்தைப் பற்றி இன்று வரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. தேசிய அரசியலில் ஈடுபட நினைக்கும் இவர், இஸ்லாமியர்களின் பாபர் மசூதி இடிப்பு, டெல்லி மெஹ்ரௌலி மசூதி மற்றும் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிப்பு, குஜராத் கலவரக் குற்றவாளிகள் பற்றிய பார்வை போன்றவற்றில் இவரது நிலைபாடு இதுவரையிலும் தெரியவில்லை.

முஸ்லிம்களின் வாக்குகள் மிகவும் வலிமையாக  மாறி வரும் நேரமிது. அதனால், வழக்கம் போல உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுப்பது அறிவுடமை ஆகாது.

இந்திய சமூக அமைப்பை ஊழலைத் தாண்டி மிக முக்கியமான எண்ணற்ற பெரும் பிணிகள் பீடித்துள்ளன. அவற்றைச் சீராக்காவிட்டால் நமது அமைப்பு சீர்குலைந்துவிடும் ஆபத்தும் உண்டு. வெறும் கிளை சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல அது. ஒரு விருட்சத்தின் ஆணி வேர்கள் சம்பந்தப்பட்ட விரிவானது.

வெறும் ஊழல் ஒழிக்க புறப்பட்டவர்களுக்கு, கேஜரிவால் செய்யும் நற்செயல்களுக்கு மட்டுமே நமது பங்களிப்பைத் தர முடியும்.

ஆக மிகவும் நிதானமாக விமர்சனங்கள் அவசியமான காலகட்டம் இது.

Thursday, January 2, 2014

News In English: '120 day long Bhoomi Adhikar Yatra for land rights in MP'


Sidhi, MP: While most of the people bid adieu to the bygone year and welcomed the New Year with lavish parties, hundreds of Dalits and Adivasis decided to make a new beginning on the first day of the year by launching Bhoomi Adhikar Yatra, a campaign for land rights in Madhya Pradesh under the banner of National Confederation of Dalit Organizations (NACDOR) with the slogan of ‘Marching for Land for Livelihood and Dignity’.

On January 1, 2014, hundreds of Dalit, Adivasi women and men gathered under their respective banner of Rashtriya Dalit Mahasabha and Adivasi Adhikar Andolan at Ambedkar Chowk at the district headquarter of District Sidhi in Madhya Pradesh to jointly launched their Bhoomi Adhikar Yatra (Land Right March). 
They demanded 5 acres land for each landless Dalit, Adivasi and poor and land titles to those who possess lands but never given titles.

The 120 day long Bhoomi Adhikar Yatra, which began on bicycles, will cover more than a thousand villages in 20 districts of Madhya Pradesh before its convergence in Bhoomi Adhikar Sammelan on 9th June in Bhopal, the capital of the Madhya Pradesh.

Ashok Bharti, chairman of NACDOR said while speaking to TCN on the occasion, “Only 3% land belongs to SC/STs while their population is 36%. The motive behind this yatra is to get the attention of the government and the policy makers sitting in the Centre and make them aware of this very need of the hour.”

In India, close to 70% of its population is dependent on land and agriculture for their livelihood, dignity and food security. India, close to 70% of its population is dependent on land and agriculture for their livelihood, dignity and food security. Out of 137.76 milions of operational land holding in the country, Madhya Pradesh has 8.87 million ha lands, of which only 0.45 million ha is owned by Schedule Caste/Schedule Tribe.

Thanks: TwoCircles.net

நடப்புச் செய்தி: 'வக்ப் வாரிய சட்டங்கள் நூல் வெளியீடு'

வக்ப் வாரிய 'புதிய' சட்டங்களை புத்தகமாக வெளியிட்டது ஆந்திராவின் மஜ்லிஸ் (MIM) கட்சி. வக்ப் சொத்துக்களை வரைமுறைப்படுத்தி விட்டால் நாம் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை என அது நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

1995ம் ஆண்டில் இயற்றப்பட்ட வக்ப் வாரிய சட்டங்களையும், அதில் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்களையும் 'பொது முஸ்லிம் சமூகம்' தெரிந்துக் கொள்ளும் வகையில், விரிவான 'புத்தகம்' ஆந்திராவில் வெளியிடப்பட்டுள்ளது.

மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் (MIM) கட்சியின் தலைவர் அக்பருத்தீன் ஓவைசி
மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் (MIM) கட்சியின் எம்.எல்.ஏ.வும், ஆந்திர வக்ப் வாரியத் தலைவருமான 'சைய்யத் அப்சல் பியாபாணி குஸ்ரு பாஷா' ஆந்திர ஹஜ் ஹவுசில், இதனை வெளியிட்டார்.

மாநிலம் முழுவதிலுமுள்ள 'வக்ப்' சொத்துக்களையும், அதன் தற்போதைய நிலை குறித்தும், ஒவ்வொருவரும் தெரிந்துக் கொள்ளும் வகையில் அப்புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

சந்தை நிலவரங்களுக்கேற்ப 11 மாதங்களுக்கொருமுறை வாடகையை உயர்த்தி ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும், என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின்படி 'வக்ப்' சொத்துகளை ஆக்கிரமிப்பதை ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படும்.

தனிப்பட்ட மனிதர் அல்லது நிறுவனம், (அது அரசு நிறுவனமாக இருந்தாலும் சரி) பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ வக்ப் சொத்தை ஆக்கிரமித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

வாடகை ஒப்பந்தம் அல்லது லீஸ் ஒப்பந்தம் காலாவதியான நபர்கள் அனைவரும் 'ஆக்கிரமிப்பாளர்கள் என்று கருதப்படுவார்கள்' என்று அந்தச் சட்டத் திருத்தம் தெளிவாகக் கூறுகிறது.

இந்தியா முழுவதிலும் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஏக்கர் வக்ஃப் நிலங்கள் உள்ளன.

இவற்றின் சந்தை விலை 2006-ஆம் ஆண்டு நிலவரப்படி 1,20,000 கோடி ரூபாய் மதிப்பாகும்.

ஆனால், ஆண்டு வருமானமாக, வெறும் 163 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கிறது!

புதிய சட்டத்திருத்தம் அமுலுக்கு வந்தால், ஆண்டு தோறும் 'ஒரு லட்சம் கோடி ரூபாய்' வரை வருவாய் அதிகரிக்கும், என்று சமீபத்தில் மத்திய வக்ப் வாரிய அமைச்சர் 'ரஹ்மான் கான்' கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தகவல்: Md Ramiz