NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Thursday, February 28, 2013

காலப் பெட்டகம்: 'நூற்றாண்டே சாட்சியாக' - பகுதி -4

தனி நபராக இஸ்லாமிய பாதையில் பயணித்த மெளலானாவின் அடிச்சுவட்டில் லட்சோப லட்சம் தொண்டர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் அணி திரண்டார்கள். இஸ்லாமிய வாழ்வியல் திட்டத்தை நவீன சாதனங்கள் மூலமாக மனித குலத்துக்கு எட்டச் செய்ய கடந்த நூற்றாண்டில் பாடுபட்ட மாமனிதர் மௌலானா மௌதூதி ஆவார். 1978-இல் சவுதி அரசின் 'சவுத் அல் ஃபைஸல்' விருதுக்காக மௌலானா தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்....

Wednesday, February 27, 2013

விருந்தினர் பக்கம்: 'கருத்துச் சொல்ல உரிமை இல்லையா?'

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்னும் அமைப்பின் தலைவராக இருப்பவர் நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு. இவர் தி  ஹிந்து நாளிதழில் நரேந்திர மோடியை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதிவிட்டார். 'மோடியின் தீய செயல்களுக்கு அரேபிய சென்ட் எவ்வளவு இருந்தாலும் போதாது!' - என்று கட்ஜு சொல்லிவிட்டாராம்! Normal 0 false false false EN-IN X-NONE X-NONE ...

Tuesday, February 26, 2013

காலப்பெட்டகம்:நூற்றாண்டே சாட்சியாக.. - பகுதி - 3

1938 இல், அல்லாமா இக்பாலின் அழைப்புக்கிணங்க மௌலானா மௌதூதி ஹைதராபாத்திலிருந்து லாஹீருக்குச் சென்றார். அவர் லாஹீர் சேரும்போது, இந்தியா சுதந்திரமடையப் போகிறது என்ற செய்தி ஊர்ஜிதமானது.  சுதந்திர இந்தியாவில் அமையப் போகும் புதிய அரசு, இந்திய முஸ்லிம்களின் சமூக - அரசியல் வாழ்க்கைக்கு அந்த அரசு தரும் உத்திரவாதம் இவற்றை குறித்த கவலைகள் மௌலானாவின் மனதை அரித்தெடுக்கலாயின.  1941...

Monday, February 25, 2013

காலப்பெட்டகம்: 'நூற்றாண்டே சாட்சியாக' - பகுதி - 2

1919 இல், தனது 16 வயதில் அவர் முதன் முறையாக 'ஜபல்பூரிலிருந்து' வெளியான 'தாஜ்' வார இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். மனித உள்ளங்களில் அன்பை பீறிட்டெழச் செய்வது இறைவேதமான திருக்குர்ஆன்தான் என்றும், அதன் பக்கம் திரும்புவது ஒன்றே ஈடேற்றத்துக்கான வழி என்றும் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். 1920 இல், தாஜ் இதழ் நின்று போனது....

Sunday, February 24, 2013

காலப்பெட்டகம்: நூற்றாண்டே சாட்சியாக... (பகுதி - 1)

அவர் மௌலான அபுல் கலாம் ஆசாத்துடன் நெருங்கி பழகியிருக்கிறார்.  அவரது சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறார். கட்டுரைகளைப் படித்திருக்கிறார். மாபெரும் கவி அல்லாமா இக்பால் மனதில் பிரவாகமெடுத்த கவிதைகளை எல்லாம் அள்ளி அள்ளிப் பருகினார். அவருக்கு மௌலானா அன்வர் ஷா கஷ்மீரியின் இமாமத்தில் (தலைமையில்) தொழும் நற்பாக்கியம் கிடைத்தது. ஹஸன் அஹ்மது மதனீ, முஃப்தி கிஃபாயதுல்லாஹ் போன்ற...

Sunday, February 17, 2013

'தூக்கு மேடையின் நிழலில்..'

அப்சல் குருவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிப்.9, 2013 அன்று சில மணி நேரத்துக்கு முன் அந்த செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டபோது, அவர் சிறைத்துறை அதிகாரிகளிடமிருந்து எழுதுகோலையும், தாளையும் பெற்று தனது குடும்பத்தாருக்கு எழுதிய கடிதம் இது: அடியில் உள்ளது திகார் சிறைக் கண்காணிப்பாளர், அப்சல் குருவின் கடிதத்தோடு இணைப்பையும் இணைத்து அவரது குடும்பத்தாருக்கு அனுப்பி...

Tuesday, February 12, 2013