NewsBlog

Thursday, February 7, 2013

தீரா பகை..



வாழ்க்கை முழுவதும் போரிலேயே கழிந்துவிட்டது, காண்ஸ்டாண்டிநோபிளை ஆண்ட இரண்டாம் 'பாஸில்' சக்ரவர்த்திக்கு! 40 ஆண்டுகள் தொடர் போருக்குப் பிறகு, அதன் மீது வெறுப்பு ஏற்பட்டது. 

1014-ஆம், ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டு வர பல்கேரிய அரசருக்கு சமாதான தூது அனுப்பினார் பாஸில்.

தன்னிடமுள்ள 15,000 பல்கேரிய போர்க் கைதிகளையும் விடுவித்து விடுவதாகவும் அறிவித்தார்.



ஆனால், பல்கேரிய மக்களை கடுமையாய் வெறுத்த இரண்டாம் பாஸில் 15,000 கைதிகளில் 150 பேரைத் தவிர மற்ற கைதிகளின் இரண்டு கண்களையும் குத்தி குருடாக்கினார். 150 பேரின் ஒரு கண் மட்டும் குருடாக்கப்பட்டது. ஒரு கண் பார்வையிழந்த அவர்களது தலைமையில் நூறு நூறு பேர் கொண்ட குழுவாக கைதிகள் பிரிக்கப்பட்டு அணிவகுத்து பல்கேரியாவுக்கு அனுப்பினார்.

சிறையிலிருந்து விடுதலையான கைதிகளை வரவேற்க காத்திருந்த பல்கேரிய மன்னன் சாமுவேல் பார்வையிழந்து தட்டுத்தடுமாறி நடந்து வந்த கைதிகளை கண்டார். அதிர்ச்சியடைந்தார். அடுத்த இரண்டு நாளிலேயே அவர் உயிரிழந்தார்.

பாஸில் சக்கரவர்த்தி படம்: நன்றி-விக்கிபீடியா.

0 comments:

Post a Comment