NewsBlog

Wednesday, February 27, 2013

விருந்தினர் பக்கம்: 'கருத்துச் சொல்ல உரிமை இல்லையா?'



பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்னும் அமைப்பின் தலைவராக இருப்பவர் நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு. இவர் தி  ஹிந்து நாளிதழில் நரேந்திர மோடியை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதிவிட்டார். 'மோடியின் தீய செயல்களுக்கு அரேபிய சென்ட் எவ்வளவு இருந்தாலும் போதாது!' - என்று கட்ஜு சொல்லிவிட்டாராம்!

அரேபிய சென்ட் மட்டுமல்ல, அகில உலகிலுள்ள எல்லா சென்ட்டுகளையும் கொட்டினாலும்கூட குஜராத் இனப்படுகொலையின் பாவங்களைக் கழுவ முடியாது என்பதுதானே உண்மை..! உடனே சங்பரிவார் அமைப்புகள் கட்ஜு மீது பாயத் தொடங்கிவிட்டன.  இது தொடர்பாகதுக்ளக்இதழில் வெளியான ஒரு கட்டுரையில்  பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது:

பிரஸ் கவுன்சில் தலைவர் பொறுப்பை வகிப்பவர்  இப்படி ஒருதலைப்பட்சமாக எழுதக் கூடாது. ஒரு பத்திரிகையாளர் பிரஸ் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவர் செய்யவேண்டிய முதல் வேலை பேனாவை மூடி வைக்க வேண்டியதே.” (துக்ளக் 27.2.2013)

நான் கேட்கிறேன்:

1. பிரஸ் கவுன்சில் தலைவர் பொறுப்புக்கு வருபவர்கள் பேனாவை மூடி வைத்துவிடவேண்டும் என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா?

2. தம்முடைய கருத்துகளைச் சொல்ல அவருக்குச் சுதந்திரம் இல்லையா?

3. எதையும் பார்க்காமல், பேசாமல், கேட்காமல் பொம்மை போல இருக்க வேண்டுமா? அல்லது அவர் என்ன ஜடமா?

4. கட்ஜு சொல்லிய கருத்துக்குப் பதில் சொல்வதை விட்டுவிட்டுபேனாவை மூடுஎன்பது என்ன ஜனநாயகம்?

ஊடகங்கள் போடும்பேயாட்டங்களுக்குமார்க்கண்டேய கட்ஜு அவ்வப்போதுவேப்பிலைஅடிப்பதால் ஊடகங்கள் அவர்மீது செம கடுப்பில் இருக்கின்றன.
அவர் உண்மையைச் சொல்கிறார்.  அதுவும் உரத்துச் சொல்கிறார். உண்மை சுடும். பலருக்கும் சுடுகிறது.  அலறுகிறார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவரை நோக்கியேபேனாவை மூடுஎன்கிறார்களே...!

என்ன ஓர் அயோக்கியத்தனம்..!







-சிராஜுல்ஹஸன்,
பொறுப்பாசிரியர்,
'சமரசம்' - (மாதமிருமுறை)

0 comments:

Post a Comment