NewsBlog

Sunday, October 4, 2020

இதோ வந்துவிட்டார்கள் உங்கள் வாசல்முன்!

இதோ
வந்துவிட்டார்கள்
அவர்கள்

நேற்று ஏஎம்யூ
இன்று ஜேஎன்யூ
நாளை
உங்கள் வீட்டு
வாசல் முன்

இதோ வந்துவிட்டார்கள்
அவர்கள்..
உங்கள் வாசல் முன்..!
அய்யகோ..
கேட்க நாதியற்ற
கையறு நிலையில்
நீங்கள்..!

நெஞ்சம் பதறும்
உங்கள் கண்முன்..
வாழ்நாள் முழுக்க
பணயம் வைதது
சம்பாதித்த சொத்து-சுகங்கள்
தீ வைத்து கொளுத்தப்படலாம்!
ஈரல் குலை.. கண்மணிகளின்
கற்புகள் பறிபோகலாம்..!
வாரிசு கனவுகளின் வயிறுகள்
கிழிக்கப்படலாம்..
"அம்மா-அப்பா" என்று
யாழினும் இனிதாய்
உறவுகளைத்
தொடுக்கும்
எதிர்க்கால கனவு சிசுக்கள்
சுவறுகளில் மோதி
தலை உடைத்து
வீசப்படலாம்..!
தனயன் முன்
தாயின் மானம், மரியாதை
பறிக்கப்படலாம்.
உங்கள் சின்னஞ்சிறார்கள்
வல்லுறவுக்காளாகலாம்!
நேற்றைய குஜராத்
மீண்டும் உயிர் பெற்றெழலாம்!

இதோ வந்துவிட்டார்கள் அவர்கள்
மனுதர்மம் ஏந்தி கொண்டு
ஓராயிரம் வஞ்சக திட்டங்களுடன்
உங்கள் சொந்த உதிரங்களை
ஓரணியில் படையாய்
திரட்டி கொண்டு
சர்வ ஆட்சி அதிகாரத்துடன்
இதோ வந்துவிட்டார்கள்
அவர்கள்..

நேற்று.. ஏ.எம்.யூ
இன்று ஜேஎன்யூ
நாளை உங்கள் வாசல் முன்..

இதோ வந்துவிட்டார்கள அவர்கள்
மனுதர்மம் ஏந்தி கொண்டு
பாபா அம்பேத்கரின்
சமதர்ம சட்டங்களை வீசி எறிந்து..
ஆர்ப்பரிப்பு... கொக்கரிப்போடு
இதோ வந்துவிட்டார்கள் அவர்கள்.

நேற்று ஏ.எம்.யூ
இன்று ஜே.என்.யூ
நாளை
உங்கள் வீட்டு
வாசல் முன்
இதோ வந்துவிட்டார்கள் அவர்கள்

அய்யகோ..
கேட்க நாதியற்ற
கையறு நிலையில்
நீங்கள்..!

(அண்மையில், டெல்லி ஜாமியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வகுப்புவாத அத்துமீறல் சம்பந்தமாக எனது மற்றொரு வலைப்பூவில் https://pamarannews.blogspot.com/2020/01/blog-post.html எழுதிய கவிதை இது. ஹதாரஸ் பாலியல் வல்லுறவு சம்பவத்துக்கு முற்றிலும் பொருந்தும் கவிதை. வகுப்புவாதிகள் குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும் எதிரிகள் அல்ல. மனித இனத்துக்கே எதிரியானவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும் - இக்வான் அமீர்)

0 comments:

Post a Comment