NewsBlog

Tuesday, October 6, 2020

தற்சார்பு என்பது இதுதான்!

 

 திருமூர்த்தி
'''''''''''''''''''''''''''''''''''''
தக்காளி, கத்திரி, சின்ன வெங்காயம், மிளகா, கொஞ்சம் முள்ளங்கி சோதனை முறையில் வெள்ளைபூண்டு, துவரை இப்படி எல்லாமே மஞ்சள்காட்டுக்குள்ளேயே ஊடுபயிரா வீட்டுக்கு தேவையான அளவு நடவி விடுவோம். அடுத்த சில மாதங்களிலேயே அறுவடைக்கு வந்திடும். 
 
கத்திரிக்கா செடிக்கு மட்டும் புழு  வரும். அதற்கு அடுப்பு சாம்பல் இரைத்துவிடும் வைத்தியமே போதும். 
 
தற்சார்புனா இப்படிதான் பார்கிறோம். 
 
மூன்று வருடத்திற்கு முன்பே இருக்கிற மஞ்சளை கிலோ 250 ரூபாய் விலைக்கு நாங்களே கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்துவிடுகிறோம்னு மொத்த மஞ்சளையும் கேட்டாங்க. 
 
ஆனா நா ஒத்துக்கல. 
 
கஷ்டபட்டு விளைய வச்சதே நம்ம மக்கள் சாப்பிடதானே தவிர வெளிநாட்டில் இருக்கும் வெள்ளைக்காரனுக்கு இல்லைனு தீர்கமான சொல்லீட்டேன். 
 
மாசம் நூறு கிலோ, இருநூறு கிலோ அரைச்சு விற்பதற்கு பதிலா மொத்தமா ஒரு விலையை வாங்கீட்டு கொடுத்திடலாமேனு மூளை சலவை செஞ்சும் பார்த்தாங்க. 
 
ம்ம்ஹூம்..! 
 
ஒரே பிடிவாதம் கொடுப்பதில்லைனு. 
 
பின்னே இந்த பிடிவாதம் மட்டும் இல்லைனா ஏறி நசுக்கிவிட்டு போயிட்டே இருப்பாங்களே..! 
 
பெருமைக்காக சொல்றேனு நினைக்காதீங்க. 
 
முதல் வருடத்தில் முன்னூறு கிலோ மஞ்சள்தூள் விற்று  இப்போ மாதம் முன்னூறு கிலோ விற்க்கிறதுனு. 
 
அதற்கு முக்கிய காரணம் எத்தனை தேவை அதிகரித்தாலும், கலப்படம் மற்றும் நச்சை தெளிப்பதில்லைங்கிற சமரசமாகாதா என்னோட இந்த பிடிவாதம்தாங்க..! 
 
ஐயாயிரம் பேரை நண்பர்களா முகநூலில் சேர்த்து வச்சுக்கிட்டு பாதி பேரை ஏமாற்றி கல்லா கட்டுறவங்க இங்க நிறையா இருக்கங்னு நேற்று என்னை ஒரு நண்பர் 2014 பகிர்ந்த ஒரு பதிவிற்கு பின்னூட்டமிட்டிருந்தார். 
 
அப்படி எல்லாம் யாரையும் ஏமாற்ற முடியாது ராசா..! 
 
அப்படி ஏமாற்ற வேண்டி அவசியம் எங்களுக்கு இல்ல. 
 
அது எங்க வேலையும் இல்ல. 
 
நீங்க இப்படியே எங்களை உமிழ்ந்திட்டே இருங்க. 
 
அப்போதுதான் அடுத்தடுத்த கட்டத்திற்கு எங்களால் நகர முடியும்..!
 
''''''''''''''''''''''''''''''''''''''''''
நன்றி: திருமூர்த்தி, இயற்கை விவசாயி, சத்தியமங்கலம்
https://www.facebook.com/thiru.murthy.568

0 comments:

Post a Comment