NewsBlog

Monday, October 12, 2020

ஒளியே கதை எழுது 2 - காஷ்ட்லியான சமாச்சாரமா ஒளிப்படக்கலை?

இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''
சில ஆண்டுகளுக்கு முன், ஒரு வெளிப்புற படப்பிடிப்புக்காக இரண்டு நாள் வெளியூர் செல்ல வேண்டி வந்தது. அய்யா நம்மாழ்வாரின் சிந்தனையாளர்கள் ‘இயற்கையோடு இயைந்து வாழ்தல்’ 

https://www.youtube.com/watch?v=qxiYWukMdU0 

https://www.youtube.com/watch?v=jE2YY03b058 

https://www.youtube.com/watch?v=dVoIf3M0PIg 

https://www.youtube.com/watch?v=uTOLqNJjDtM

-என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சிகளை ஆவணப்படமாக்க நண்பர் ஒருவர் என்னை சத்தியமங்கலம் அழைத்திருந்தார். அவரது அழைப்பைத் தட்ட முடியவில்லை.

நிகழ்ச்சியில், இரண்டு ஒளிப்பட நண்பர்களைக் கண்டேன். விலை உயர்ந்த வாகனங்களில், விலையுயர்ந்த ஒளிப்படக் கருவிகள், லென்ஸ்கள் மற்றும் ஒளிப்பட சாதனங்களுடன் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.

நானும் என்னுடைய மாணவர் மெஹர் அலியும் எடுத்துச் சென்றது இவைதான்:

1. வீடியோ படப்பிடிப்புக்கான சாதாரணமான இரண்டு காம் ரிகார்டர்கள்,
2. கனான் குயிக் ஷாட் கையடக்க காமிரா,
3. கனான் ரிபேல் டி-3 என்றழைக்கப்படும் DSLR வகையில் அடிப்படை வசதிகள் மட்டும் கொண்ட EOS 1100D காமிரா மற்றும்
4. எனது சாம்சங் காலக்ஸி எஸ் 2 செல்லிடைப் பேசி (அட்டகாசமாக படம் பிடிக்கும். வீடியோ எடுக்கும். https://www.youtube.com/watch?v=ZG5YCVsU3Xw அதனால்தான் இதையும் எனது ஒளிப்பட சாதனங்களில் சேர்த்துக் கொண்டேன்.)


வெளிப்புற படப்பிடிப்பின் அந்த இரண்டு நாளும், நிகழ்ச்சி நேரம் போக மற்ற நேரங்களில் இயற்கையின் அத்தனை அழகும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த அந்தப் பகுதிகள் முழுக்க நடந்து சென்று வயல்காடுகள், தோப்புத் துறவுகள், மனித வாழ்வியல் என்று அத்தனையையும் படம் பிடித்தேன்.

இதில் ஏற்கனவே நான் சொல்லியிருந்த நண்பரும் அடக்கம். சீருடை, தொப்பி சகிதமாக அவரது நீண்ட காமிராவையும் சேர்த்து படம் பிடித்தேன்.

கடைசி நாள் அன்று அந்த நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் நிற்க வைத்து படம் பிடிக்கும்படி நண்பர் கேட்டுக் கொண்டார்.

நண்பகல் நேரம்.

சூரியன் உச்சியில் இருக்கும்போது, முகம் நிழலாய் கருத்து காணப்படும். இதற்கான பிரத்யேக ஒளிரும் சாதனங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். என்னிடமோ அத்தகைய பிரத்யேக சாதனங்கள் ஏதுமில்லை.


அந்த இக்கட்டான நிலையில், மின்னணு ஒளிப்பட கருவியின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த நிகழ்வை சிறப்பாக படம் பிடித்தேன்.

ஆக ஒளிப்படங்களை தீர்மானிப்பவை விலையுயர்ந்த ஒளிப்பட சாதனங்களோ, பெரிய பெரிய லென்ஸ்களோ அல்லது நவீன ஃபில்டர்களோ மட்டும் அல்ல.

ஒரு சாதாரணமான ஒளிப்படக் கருவியையும் பயன்படுத்தி மிகச் சிறந்த ஒளிப்படத்தை எடுக்க முடியும் என்பதே அனுபவம்.

“நல்ல ஒளிப்படக்கலை என்பது வெறும் காசு கொடுத்து வாங்கும் ‘காஷ்ட்லியான’ சமாச்சாரம் அல்ல!” – என்கிறார் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞரான ஆரி மில்லர். தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் இப்படி குறிப்பிட்டு காட்டுகிறார்.

 

“ஒருமுறை லண்டனுக்குச் சென்றிருந்தேன். அப்போது, சில ஒளிப்படச் சாதனங்களை வாங்க ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடை லண்டனில் விலை உயர்ந்த ஆடம்பர பொருள்கள் விற்கும் பலபொருள் அங்காடித் தொகுப்பில் இருந்தது. வேறு எங்கும் கிடைக்காத காமிராவுக்கான சில பொருள்களைத் தேடி நான் அங்கு சென்றிருந்தேன். கடையில் சற்று நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

எனக்கு அருகில் ஒருவர் நின்றிருந்தார். பெரிய செல்வந்தர் அவர் என்பதை அவரது தோற்றமே சொல்லியது. அவர் வாங்கியிருந்தது மிகவும் விலையுயர்ந்த காமிரா. கூடவே, காமிராவுக்கான லென்ஸ், ஃபில்டர்கள் மற்றும் துணைச்சாதனங்கள் என்று எல்லாவற்றையும் வாங்கினார்.

பில் தொகையைக் கண்டு நான் அசந்து போனேன். பணம் கட்டி முடித்ததும், கடைக்காரர் பொருட்களை பாக்கிங் செய்ய ஆரம்பித்தார்.  


அப்போது, அந்த செல்வந்தர், கடைக்காரரிடம், “கொஞ்சம் இருங்கள்!” – என்றார்.

“நீங்கள் பாக்கிங் செய்வதற்கு முன் இந்த காமிராவையும், இந்த துணைச்சாதனங்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்று சொல்லித் தந்தால் நல்லது!” – என்றாரே பார்க்கலாம்.

உண்மைதான்..!

செல்வந்தர் வாங்கிய காமிரா மற்றும் அதன் சாதனங்கள் அனைத்தும் ஒளிப்பட அனுபவசாலிகள் மட்டுமே பயன்படுத்தும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்டவை. அனுபவசாலிகளால் மட்டுமே அவற்றை எப்படி கையாள்வது என்று அறிய முடியும்.

அந்த சாதனங்களை வாங்கிய செல்வந்தர், அவற்றைக் குறித்து விஷய ஞானமே இல்லாதிருந்தார். யாரோ அவருக்கு தவறாக வழிகாட்டியிருக்கிறார்கள் என்பதே அதன் பொருள்.

ஒளிப்படமெடுக்க வேண்டும் என்று நினைத்த அவருக்கு, “ஒரு சாதாரணமான காமிரா வாங்குங்கள் போதும்!” – என்று மட்டுமே  ஆலோசனை சொல்லியிருக்க வேண்டும்”

– என்று லண்டன் மாநகரில் தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் ஒளிப்பட ஜாம்பவான் ஆரி மில்லர்.

ஒளிப்படக்கலை என்பது வெறுமனே விலையுயர்ந்த காமிராவோ, மீட்டர் கணக்கில் நீளமான லென்ஸ்களோ, விதவிதமான ஃபில்டர்களோ மட்டுமல்ல என்பதை உள்வாங்கவே இந்த சம்பவத்தை நான் குறிப்பிட்டு காட்டினேன். 


ஒரு காமிராவை எப்படி எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்று ஒரு வரம்பு உண்டு. அதனால், காமிராவை வாங்கும்போதே அது,

•    “எதற்காக பயன்படப் போகிறது?” - என்று தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இது தெரியும்போதுதான் வாங்கும் காமிராவை எதற்காக பயன்படுத்தலாம், எந்த வரம்புவரை பயன்படுத்தலாம் என்ற தெளிவும் கிடைக்கும். வரம்பு மீறி அதை கையாளவும் முடியாது என்று அதன் மதிப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விளங்கியிருக்கும்.

இறைவன் நாடினால்.. அடுத்தவாரம் பலே பிட்பாக்கெட் திருடன் ஒருவன் தனது, கையடக்க ‘பிளேடால்’, எனக்குக் கற்றுத் தந்த பாடம் அதாவது சொந்தமாக எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைக் காணலாம்.

இதற்கு முந்தைய தொடரை வாசிக்க:

001 ஒளியே கதை எழுது 1, நெஞ்சோடு கொஞ்சம்:
https://mrpamaran.blogspot.com/2020/08/1.html

0 comments:

Post a Comment