NewsBlog

Saturday, February 8, 2014

அச்சச்சோ..: 'இந்தியா ஒளிரும்!'



நேற்று பிற்பகல்:

ஒரு நண்பர் தனது நண்பரிடம்,

"நாளைக்கு ஒரு கூட்டத்துக்கு போகணும் தயராக இரு!"

"எங்கே?"

"அதெல்லாம் உனக்குத் தேவையில்லை! வந்தா ஐநூறு ரூபாய்!"

நேற்று இரவு:

ஒரு இளைஞன் இன்னொரு இளைஞனிடம்,

"நாளைக்கு ஒரு கூட்டத்துக்கு போகணும். வேனெல்லாம் ரெடியாயிடுச்சு!"

"எங்கே..?"

"அதெல்லாம் உனக்குத் தேவையில்லை. ரெடியாயிரு! போனா ரெண்டாயிரம் ரூபாய்!"

நாளை காலை:

பத்திரிகைகள் செய்தி:

"அலைகடல் என மக்கள் கூட்டம். வண்டலூர் அதிர்ந்தது!"

பின்குறிப்பு: இது ஹாஸ்யம் அல்ல;உண்மை!

0 comments:

Post a Comment