NewsBlog

Thursday, August 27, 2020

உலக நாடுகளுக்கு, சமநீதி பாடத்தை போதிக்கும் நியூஸிலாந்து

"நீங்கள் செய்த குற்றங்கள் கொடுமையானவை. சாகும் வரை உங்களை சிறையில் வைத்தாலும், நீங்கள் செய்த குற்றத்துக்கு அந்த தண்டனை போதாது"

குற்றவாளியின் நடவடிக்கைகள் ‘மனித நேயமற்ற செயல். அவர் யார் மீதும் கருணை காட்டவில்லை"

நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் கடந்த ஆண்டு இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி 51 பேரை கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின்போது, கிரைஸ்ட்சர்ச் நீதிமன்ற நீதிபதி கேமரன் மேண்டர் வியாழக்கிழமை (27.08.2020) அன்று வெளியிட்ட தீர்ப்பில் தெரிவித்த வாசகங்கள் இவை.

குற்றவாளி, பரோலில் கூட வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் சாகும் வரை சிறையிலேயே தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து நாட்டின் வரலாற்றில் இவ்வாறு தண்டனை விதிக்கப்படும் முதல் நபர் இவன்.

பரோல் இல்லாமல் வாழ்நாள் சிறை தண்டனை என்றால், தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி, ஒரு குறிப்பிட்ட காலம் சிறையில் இருந்த பிறகு அவருக்கு வெளியே வர அனுமதி வழங்கப்படாது. இதுபோன்ற தண்டனைகள், மிகவும் மோசமான கொலையாளிகளுக்கே வழங்கப்படும். நியூஸிலாந்தின் சட்ட அமைப்பில் மரண தண்டனை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

டர்ரன்டுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து நியூஸிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டென் கூறுகையில், "குற்றவாளியை பற்றி இனி சிந்திக்கவோ, அவர் கூறுவதை கேட்கவோ நமக்கு இனி எதுவும் இல்லை என்பதே இத்தீர்ப்பின் பொருள். தீவிரவாதி என்று குறிப்பிடப்படும் நபர் குறித்து கேட்பதோ பேசுவதோ இதுவே கடைசி நாளாக இருக்கும் என நம்புகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிரைஸ்ட்சர்ச்சில் நடந்தது என்ன? 

 

கடந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி அங்குள்ள இரு மசூதிகளில் துப்பாக்கியுடன் நுழைந்த 29 வயதான ஆஸ்திரேலியாவை சேர்ந்த குற்றவாளி வெள்ளையின மேலாதிக்கவாதியான பயங்கரவாதி ப்ரென்டன் டர்ரன்ட் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டான்.

முதலில் அல்-நூர் மசூதியில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி சுட, 30 விநாடிகள் கழித்து தனது காருக்கு சென்று மீண்டும் ஒரு ஆயுதத்தை எடுத்து வந்து மீண்டும் மசூதிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை சுட ஆரம்பித்தான்.

தனது நெற்றியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் அவர் அந்த சம்பவத்தை ஃபேஸ்புக்கில் நேரலை செய்தான்.

பின்னர் லின்வுட் இஸ்லாமிய மையத்திற்கு காரில் சென்றவன், அங்கு வெளியே இருந்த இரு நபர்களை சுட்டதோடு, அதன் ஜன்னல்களிலும் சுட்டான்.

உள்ளிருந்த வந்த நபர் ஒருவர் வெளியே ஓடிவந்து, பயங்கரவாதி ப்ரென்டன் டர்ரன்ட் பயன்படுத்திய துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்து, அவனை துரத்தினார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இரு போலீஸ் அதிகாரிகள், பயங்கரவாதி ப்ரென்டன் டர்ரன்ட்டை விரட்டிப் பிடித்தனர். கைதுக்கு பிறகு அவன் போலீஸாரிடம் மசூதிகளை எரிப்பதே தனது நோக்கம் என்றும், அதை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதாகவும் புலம்பியுள்ளான். 

29 வயதான ஆஸ்திரேலியாவை சேர்ந்த குற்றவாளி வெள்ளையின மேலாதிக்கவாதியான ப்ரென்டன் டர்ரன்ட், 51 பேரை சுட்டுக் கொலை செய்ததையும், 40 பேரை கொலை செய்ய முயற்சித்ததாகவும், தன் மீது இருந்த தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான்.

தனது குடிமக்களுக்கான சமநீதியை உலக நாடுகளுக்கு நியூஸிலாந்து பாடம் நடத்தி கொண்டிருக்கிறது.


0 comments:

Post a Comment