NewsBlog

Friday, August 28, 2020

வெற்றிப்படிகட்டுகளை தொட்டுக் காட்டியவர்!


 
இனி பணியாளராகவே இருக்க கூடாது; முதலாளியாகதான் இருக்க வேண்டும் என்று லட்சிய வேட்கையுடன் செயல்பட்டு கடைசியில் தனது இலக்கை அடையவும் செய்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''
கையில் ஒரு பைசாவும் இல்லாத்தால் மூடிகிடந்த நண்பரின் கடையை கேட்டு வாங்கி திறந்தார். பெயர் பலவை மாட்டவும் வசதி இல்லாத்தால் எதிர் கடையிலிருந்த ஒரு பலகையில் தன் கையாலேயே சொந்தமாக எழுதி பெயர்ப்பலகையை மாட்டினார். நாற்காலிகள் செய்யும் நண்பரிடம் ரூ.25 க்கு நாற்காலிகளை வாங்கி முப்பது ரூபாய்க்கு விற்று விற்பனையைத் துவக்கினார். முழு தொகையை தர முடியாதவர்களிடம் பாதி தொகையைப் பெற்றுக்  கொண்டு மீதத் தொகையை நாள்தோறும் ஒவ்வொரு ரூபாயாக பெற்றுக் கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1950-ஆம் ஆண்டு பிறந்தவர் வசந்தகுமார். பட்டப்படிப்பு முடித்து சென்னைக்கு வேலை தேடி வந்தவர், 1970-களில் விஜிபி நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றினார்.

அதன்பின் அந்தப் பணியிலிருந்து வெளியேறியவர் இனி பணியாளராகவே இருக்க கூடாது; முதலாளியாகதான் இருக்க வேண்டும் என்று லட்சிய வேட்கையுடன் செயல்பட்டு கடைசியில் தனது இலக்கை அடையவும் செய்தார்.

அதிலும் சாமான்யர்கள் எளிதில் வீட்டுப் பொருட்கள் வாங்கும் விதமாக தவணைமுறையில் வசந்த் அண்ட் கோ என்ற பெயரில் துவங்கிய அவரது நிறுவனம் வெகுவிரைவிலேயே பிரபலமானது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் என்று ஆலமரமாய் மொத்தம் 64 கிளைகள் பரப்பி படர்ந்து நின்றது. 2008-இல், வசந்த் தொலைக்காட்சி துவக்கப்பட்டது. தனது உழைப்பால் உயரிய படிக்கட்டுகளை அடைந்த வசந்தகுமார் தனது அனுபவங்களை தொகுத்து "வெற்றிப்படிக்கட்டு" என்ற பெயரில் சுயசரிதையாக்கினார். அந்தப் புத்தகத்தை நடிகர் ரிஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் தலைமையில் வெளியிட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான குமரி ஆனந்தனின் சகோதரர்தான் வசந்தகுமார். 2006 மற்றும் 2016ஆம் ஆண்டு நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.

2019ல் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் இன்று 28.08.2020 மாலை காலமானார்.

0 comments:

Post a Comment