NewsBlog

Wednesday, August 19, 2020

காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

 

ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

பால் வடியும்வரை நிழலான பகுதியில் வைத்து ஓரிரு நாள் கழித்து நடுங்கள்.

பொடி கற்கள், ஆற்று மணல், சிறிதளவு தோட்ட மண், கிடைத்தால் அடுப்பு கரி இவற்றை கலந்து நல்ல வடிகால் வசதியோடு கூடிய ஒரு மண் கலவையை தயார் செய்து நடுங்கள்.

அப்படி நடும்போது, மண்ணில் ஈரமிருந்தால் அதுவே போதுமானது.

அதனால், தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

நல்ல வெய்யிலில் வைத்து விடுங்கள்.

துளிர்விடும்வரை அதிக நீரோ, மழையோ விழாமல் பார்த்து கொள்ளுங்கள்.

கள்ளி செடிகளுக்கு அதிக தண்ணீர் ஆபத்தாகிவிடும்.

0 comments:

Post a Comment