NewsBlog

Saturday, March 8, 2014

நடப்புச் செய்தி: 'வீர லட்சுமி"


விருது பெற்ற லட்சுமையை அணைத்துக் கொண்டிருக்கும் மிஷெல் ஒபாமா
"நீங்கள் என் முகத்தின் மீது,
திராவகம் வீசவில்லை ;
என் கனவுகள் மீது
வீசப்பட்ட திராவமது.

உங்கள் இதயத்தில் 
அன்பில்லை!
திராவகத்தால் அது
நிறைந்திருந்தது!

நேசத்தை ஒருபோதும்
வெளிப்படுத்தாத கண்கள்..
சுட்டெரிக்கும் பார்வையால்
என்னை எரியூட்டின!

நான் இம்முகத்தை 
சுமந்தலையும்போது,
என் அடையாளத்தின்
ஒரு பகுதியாய் உங்கள்
அரித்தழிக்கும் பெயர்கள்
இணைந்திருப்பது
எனக்கு சோகமூட்டுகிறது!

காலம் என்னை மீட்கவில்லை;
ஒவ்வொரு வியாழனும் 
உங்களை நினைவூட்டிக்
கொண்டேயிருக்கிறது!"

- சர்வதேசவீரப் பெண் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் லட்சுமி வாசித்த கவிதை வரிகள் இவை. 

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சர்வதேச வீரப் பெண் விருது ஆப்கனிஸ்தான், பிஜி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவின் லட்சுமிக்கு திராவகத் தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டு வருவதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபரின் மனைவி மிஷெல் ஒபாமா இந்த விருதுகளை வழங்கினார்.

0 comments:

Post a Comment