NewsBlog

Friday, July 26, 2013

விருந்தினர் பக்கம்: 'சோறு போடும் பெண்கள் புறக்கணிப்பு..!'

தற்போதைய புள்ளிவிவரங்கள்படி நிமிடத்திற்கு 32 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதில் தற்கொலை செய்து கொண்ட பண்ணை மகளிர் (பெண் விவசாயிகள்) குறித்த கணக்கை சேர்ப்பதில்லை.


உண்மையில்,பெண்கள் 19 வகையான வேளாண் பணிகளைச் செய்கின்றனர்.  

சர்வதேச உணவு மற்றும் வேளாண் நிறுவனம்,  

வேளாண்துறையில் - 

வருடத்துக்கு ஒரு ஹெக்டர் நிலத்தில்,


  •  மாடுகள் 1064 மணி நேரமும்,
  • பெண்கள் 3485 மணி நேரமும்,
  • ஆண்கள் 1212 மணி நேரமும்

பணியாற்றுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

வளரும் நாடுகளில் உணவு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பு 60 முதல் 80 சதவீதமாகவும் உலக அளவில் 50 சதவீதமாகவும் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு மற்றும் வருவாய்த் துறையில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது நிலத்தின் பட்டா அவர்களின் பெயரில் இல்லாத காரணத்தால் அவர்கள் இழப்பீடுகள் பெற முடியவில்லை. வேளாண் கடன்கள் வங்கிகளில் பெற முடியவில்லை. வேளாண்துறையில் அதிக பங்களிப்பை செய்யும் பெண்களுக்கு விவசாயிகளுக்கான அங்கீகாரம் வழங்க தொடர்ச்சியாக போராட வேண்டும்.

(கடலூரில் நடக்கும் விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாட்டில் 26.07.2013 அன்று தோழர் வாசுகி உமாநாத் ஆற்றிய வாழ்த்துரையிலிருந்து..)

தகவல்: Sindhan Ra

Sindhan Ra
 

0 comments:

Post a Comment