NewsBlog

Saturday, December 5, 2020

பேசாம நாட்டை குத்தகைக்கு கொடுத்திடலாம் போல!

 


சுரேசுகுமார் நாகராசன்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ரசினி ரசிகனுக அவரோட பதாகைக்குதான் பால் ஊத்துனானுங்க, ஆனா இந்த அரசியல் வியாபாரிங்க ரசினிக்கு உசுரோட இருக்கும்போதே பால் ஊத்தாம விட மாட்டாங்க போல இருக்கு!

இவனுகளை எப்படி காறி துப்பினாலும் பின்வாசல் வழியா, எப்படியாவது, எவனையாவது தொத்திக்கிட்டு தமிழ்நாட்டுக்கு வரணும்னுகிட்டு இருக்காணுவ... சரி அது கிடக்கட்டும்.

எவனை பார்த்தாலும், சாதி, மதம் கடந்து நேர்மையான, ஊழலற்றன்னு எல்லா பயலும் பீத்தி கிட்டு திரியிரானுவ! அடேய் இந்தியாவில் எவன் அரசியல் பண்ணாலும் ஊழலை ஒழிக்க முடியாதுடா வெண்ணெய்ங்களா!

ஏன்னா நம்ம பண்ணி வச்சிருக்க சிஸ்டம் அப்படி.... எவன் ஆட்சிக்கு வந்தாலும் தேர்தலுக்கு செலவு செஞ்ச கும்பணிகளுக்கு தான் ஜெயிச்சவன் விசுவாசமா இருப்பானுங்களே ஒழிய ஓட்டு போடுற சனங்களுக்கு அல்ல...! இது புரியாம ஜனநாயகம், சமத்துவ வெங்காயம்னு பேசிக்கிட்டு.

எனக்கு தெரிஞ்சு சாதி இல்லாத, சாதி பார்க்காத ஒரே மனுசங்க, காசுக்கு உடம்பை விக்கிற பாலியல் தொழிலாளிகள் மட்டும்தான். அவிங்க கிட்டவும் புடுங்கி ஏப்பம் விடுற வெங்கம் பயலுவ உலாவுற நாட்டுல, இப்போ ஒருத்தர் புதுசா நாத்து நட வந்திருக்கார். என்னத்த சொல்ல...?

அதுசரி! வாழத்தெரியாதவன் பெரும்பான்மையா வாழ்ற நாட்டுல, ஆளத் தெரியாதவந்தானே ஆட்சிக்கு வருவான்! இங்க எவனுக்கும் ஒழுங்கா ஆன்மீகமும் தெரியாது! அரசியலும் தெரியாது! இந்த லட்சணத்துல ஒவ்வொருத்தனுக்கும் பரம்பரை பெருமை, நாட்டு பெருமை வேற!

எனக்கு எல்லா கோவமும் இந்த பாழாய் போன கோரோனா மேலதான்... அதாவது ஒழுங்கா தன் வேலையை செஞ்சிருந்தா, பாதி நாடாவது சுத்தமாயிருக்கும்!

அட்லீஸ்ட் பார்லிமெண்டுக்கு உள்ளேயாவது கோரோனா போயிருந்தா நாடு தப்பிச்சிருக்கும்.

அதுனாலதான் ரசினி இப்போ வந்து சொல்றார்; ‘ஒழுங்கா இப்பவாவது தப்பிச்சிருங்க. இல்லைண்ணா எப்பவும் தப்பிக்க முடியாதுன்னு!’ நமக்கு கடைசி சான்சு கொடுத்திருக்காப்புல.... நம்ம ஆளுங்கதான் விவரம் தெரியாம ஆடு மாதிரி தலையை நீட்டி கிட்டு இருக்காணுங்க!

ஆனா நம்ம பயலுவ, கிழவி ஆயிட்டு சமஞ்சாலும், கல்யாணம் பண்ணி வைக்காம விடமாட்டோம்னு அவரை புடிச்சி டார்ச்சர் பண்ணி இழுத்துட்டு வந்துட்டானுங்க...!

ரசினியும் விவரமா... பேசுறது நான்தான்,  ஆனா  நான் பேசுறதுக்கு எழுதி கொடுத்தது இன்னொருத்தர்ன்னு சாடையா சொன்னாலும், ரசிக குஞ்சுகளுக்கு புரியமாட்டேங்கு....!

இங்க திராவிடமும் சரியில்லை; தேசியமும் சரியில்லை! நடிகனும் சரியில்லை; கொடி புடிச்சவனும் சரி இல்லை! ஏன்னா எல்லா பயலுகளும் ஆட்சிக்கு வந்த உடனே ஒன்னு முதலாளி பயலுக்கு வேலை பாக்குறானுங்க! இல்லாட்டி அவங்களே முதலாளி ஆயிடுறாங்க.

அதனால, பேசாம நாட்டை கும்பணி காரங்க கிட்டையே இன்னும் ஒரு ஐநூறு வருஷத்துக்கு குத்தகைக்கு கொடுத்திருங்க. India Private Limted னு பேர் வச்சுக்கலாம்.

என்ன நான் சொல்றது?

(நன்றி: https://www.facebook.com/sureshkumar.nagarajan.5)

0 comments:

Post a Comment