NewsBlog

Sunday, July 19, 2020

"எந்த மதம் என்பது முக்கியமல்ல!": மனிதநேய சேவையில் தமுமுக


தஞ்சாவூர் மாவட்டம் பண்ணவயல் பகுதியைச் சேர்ந்தவர் 62 வயது கருணாநிதி. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவாரம் காலமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மூச்சு திணறல் அதிகரித்து கடந்த வெள்ளியன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

கொரோனாவால் இறந்த கருணாநிதி, தஞ்சாவூர் மாவட்ட பாஜகவின் மாவட்டத் தலைவரான பண்ணவயல் இளங்கோவின் உறவினர் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவரின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. மருத்துவமனையின் மூலமாக இதை கேள்விப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் (தமுமுக) இலவச அவசர ஊர்தி சேவை பிரிவினர் உடன் களத்தில் இறங்கினர். கருணாநிதியின் உடல் தமுமுகவினரால்  எடுத்துச் செல்லப்பட்டு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது .

இறந்தவரின் உடலை பெற அவருடைய உறவினர் யாரும் முன்வரவில்லை. இது கொரோனா சம்பந்தமான பயத்தின் காரணமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு இதில் எந்தவிதமான தயக்கமும் அச்சமும் இல்லை. இறந்தவரின் உடலுக்கு உரிய மரியாதை தரவேண்டும் என்பதற்காக அரசின் வழிகாட்டுதல்படி உடலை நல்லடக்கம் செய்தோம்,'' என்கிறார் தமுமுகவின் மாநில செயலாளர் ஐ.பாதுஷா.

''இறந்தவர் எந்த மதம் என்பது எங்களுக்கு முக்கியமில்லை. இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்யவேண்டும் என்பதை ஒரு சேவையாக தமுமுக தமிழகம் முழுவதும் செய்துவருகிறது” –என்கிறார் பாதுஷா அடக்கத்துடன்.

(படம்: தமுமுக-தஞ்சை)

0 comments:

Post a Comment