NewsBlog

Monday, November 4, 2013

விருந்தினர் பக்கம்: 'படிக்காததால் என்னவோ..'


  1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டால் கிடைப்பது 6,000 ரூபாய்!
  2. ஒரு ஏக்கர் வாழை போட்டால் கிடைப்பது 9,000 ரூபாய்!
  3. ஒரு ஏக்கர் நெல் போட்டால் கிடைப்பது 15,000 ரூபாய்!
  4. ஆனால், ஒரு ஏக்கர் 'பிளாட்' (PLOTS) போட்டால் கிடைப்பது கை நிறைய - 1.6 கோடி ரூபாய்!

நீங்களும், நானும் படித்து விட்டதால் தேர்ந்தெடுப்போம் நான்காம் அம்சம். 

ஆனால், நமக்கு சோறு போடும் உழவன் படிக்காததால் என்னவோ பட்டாவுக்கு பதிலாக வியர்வையை போடுகிறான். 

அதிகாரப் பூர்வமான புள்ளிவிவரங்களின்படி நாட்டில் ஆண்டுதோறும் 17,500 உழவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உலகுக்கு உணவளிக்கும் உழவனை அங்கீகரிக்காத எந்த சமூகமும் அழிவை நோக்கி செல்வதிலிருந்து யாராலும் தடுக்க முடியாது என்பது உண்மை. 

அதேபோல, டாலர்களுக்கு அடகு வைக்கப்படும் கல்வி, உழவனின் உழைப்புக்கு முன் மண்டியிடும் என்பதும் திண்ணம்.

- Jmferoz Dheen

0 comments:

Post a Comment