NewsBlog

Saturday, November 30, 2013

நேர்காணல்: ராஜஸ்தான் தேர்தல்கள்: 'சீரான வகுப்பு சூழலோடு தேர்தல் களத்தில் வெல்ஃபர் பார்ட்டி'


 
இன்ஜீனியர் ரஷீத் உசேன், ராஜஸ்தான் மாநில வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர். தலைமையகத்தில் உற்சாகமாக அமர்ந்திருக்கிறார். அரசியல் ஒரு சாக்காடை என்று ஒதுங்கிப் போகாத சிந்தனையாளர். தூய்மையான அரசியல் மாற்றத்துக்காக களமிறங்கியிருப்பவர். பணிபுரிந்து கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனத்திலிருந்து விலகி, அரசியல் களத்திற்கு வந்திருப்பவர். அவருடைய நேர்காணலிலிருந்து..

"உண்மையில், வெல்ஃபர் பார்ட்டி ஐந்து வேட்பாளர்களை களத்தில் இறக்க முடிவெடுத்திருந்தது. ஆனால், எதிர்பாராத சில காரணங்களால் கடைசியில் நான்கு வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டி வந்தது. 

ஜெய்பூரின் 'ஹவா' மஹாலிலிருந்து வழக்குரைஞர் பாக்கர் பரூக்கும், முன்னாள் இணை ஆணையர் முஸ்தாக் அலி, 'ஜுன் ஜுனு' தொகுதியிலும், ஃபஸஹத் அலி 'ஸாவை' மதேபூரிலிருந்தும், 'கோட்டா தெற்கிலிருந்து' ஷபியுல்லாஹ்வும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்.

வேட்புமனுக்களை வாபஸ் பெறும் இறுதி நாளில் காங்கிரஸீடன் ஏற்பட்ட முக்கிய உடன்படிக்கையின் அடிப்படையில் வெல்ஃபர் பார்ட்டி ஸாவை தொகுதியிலிருந்து தனது வேட்பாளரை திரும்ப பெற்றுக் கொண்டது. அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தானிஷ் அப்ரார் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தின் மிக முக்கிய பிரச்னைகளை பிரதானக் கட்சிகள் புறக்கணித்து வருகின்றன. இந்நிலையில் வெல்ஃபர் பார்ட்டி இவற்றை தனது கையில் எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக 'கோபால்கர்' துப்பாக்கி சூடு, SHO-வின் சுர்வாவைச் சேர்ந்த Phool Muhammed ன் கொலை வழக்கு, இன்னும் 40 க்கும் மேற்பட்ட வகுப்பு கலவரங்களுக்கு காரணமான குற்றவாளிகள் முழுமையாக தண்டிக்கப்படாதது. இதேபோல, தலித் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் ஏராளமான அநீதிகள் என்று பிரச்னைகளை கையில் எடுத்திருக்கிறோம். 

வெல்ஃபர் பார்ட்டி நடந்து முடிந்த 20 வகுப்பு கலவரங்களில் கொல்லப்பட்ட 100 பேரின் வழக்குகளை மறு விசாரணைக்கு எடுத்துள்ளது. 

நடக்கவிருக்கும் தேர்தல்களில் இவையெல்லாம் நிச்சயம் எதிரொலிக்கும்.

"காங்கிரஸீம், பிஜேபியும் ஒரே விதமாய் மதவாத கட்சிகளாக காட்சியளிக்கின்றவே?' - என்ற கேள்விக்கு நிதானமாக அழுத்தம் திருத்தமாக  இன்ஜீனியர் உசேன்,

"இரண்டு கட்சிகளும் தெளிவான வேறுபாடுகள் கொண்டவை. பிஜேபி சித்தாந்த ரீதியாக வகுப்புவாதம் கொண்டது. இதே ஒப்புமையை காங்கிரஸீடன் பொருத்திப் பார்ப்பது சரியல்ல. ஆனால், சில தீய சக்திகள் காங்கிரஸில் ஊடுருவி அதை வகுப்புமயமாக்கி வருவதையும், அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் மறுப்பதற்கில்லை!" - என்று தெளிவாக பதில் அளிக்கிறார்.

".. முஸ்லிம்களின் பெயரால் அதிகாரத்துக்கு வரும் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் பாதிக்கப்படும் சிறுபான்மையினரின் குரல்களை எதிரொலிப்பதில்லை. 

இந்த நிலைமை மாற வேண்டும். அதனால், சிறுபான்மை இனத்தலைவர்கள் எழுச்சியுடன் மேலெழ வேண்டிய தருணமிது. அப்போதுதான் சிறுபான்மையினத்து பிரதிநிதிகளாய் அவர்களின் உண்மையான பிரச்னைகளை முன்னெடுத்து செல்ல முடியும்; உதாரணமாக ஜாட், யாதவ், குஜ்ஜார், தலித் இனத் தலைவர்களைப் போல!"

ராஜஸ்'தானின் வலிமை மிக்க தலைவராக விளங்கும் இன்ஜினீயர் உசேன் தெள்ளத் தெளிவாக சொல்கிறார்: "வெல்ஃபர் பார்ட்டி ஒருகாலும் வகுப்புவாத அரசியல் நடத்தாது. பொத்தாம் பொதுவாக எல்லா மக்களுக்கும் அதிலும் குறிப்பாக ஒடுக்கப்படும் அனைத்து இன மக்களுக்கும் பொதுவாக செயல்படும் அரசியல் கட்சியாகும். வகுப்புவாதம் நமது மதசார்பற்ற சமூகத்துக்கு ஒருகாலும்  பொருந்தாது"

"ராஜஸ்தான் மாநில தேர்தல்களில் மிகவும் கடுமையான போட்டிகள் நிலவும் சூழலில் வெல்ஃபர் பார்ட்டியின் வேட்பாளர்கள் வாக்குகளைப் பிரித்து வெற்றியைக் குலைத்துவிடமாட்டார்களா?" என்று கேட்டபோது, இன்ஜீனியர் உசேன் நிமிர்ந்து அமர்கிறார். புன்னகைத்தவாறு சொல்கிறார்:

"களத்திலிருக்கும் எண்ணற்ற பிராந்திய கட்சிகளை நோக்கி இந்த கேள்வி ஏன் எழுப்பப்படுவதில்லை. ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் விழிப்புணர்வு பெற்று தேர்தல்களில் பங்கெடுக்கும்போது அல்லது அதற்கான ஏதாவது முயற்சிகளில் ஈடுபடும்போது மட்டும் இந்த கேள்வி எழும்புவது ஏன்?"

அதே புன்னகையுடன் மீண்டும் தொடர்கிறார்: "... இதுவரை சிறுபான்மையினர் ஓரிரு அரசு சாரா அமைப்புகள் மூலம்தான் தங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இனி அத்தகைய அவல நிலை தேவையில்லை. நாங்கள் தேசிய நீரோட்ட அரசியலில் எங்கள் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள முடியும். நல்லதொரு வகுப்பு சூழலையும் இந்நாட்டில் உருவாக்க முடியும்!"

வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா ஜமாஅத்தே இஸ்லாமியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அரசியல் அமைப்பாகும். இன்ஜினீயர் உசேனும் ஜமாஅத்தின் உறுப்பினராக இருந்தாலும் பிற சமூகத் தலைவர்களும் கட்சியில் இடம் பெற எந்த தடையும் இல்லை என்கிறார். 

தேர்தல்களில் ஜமாஅத்தின் ஆதரவை கோரவிருப்பதாகவும், அதேநேரத்தில் தொகுதிகளுக்கேற்ப முடிவெடுக்கும் அதன் அதிகாரத்தில் தலையிட முடியாது என்றும் தெளிவு படுத்துகிறார். 

தற்போது ராஜஸ்தானில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் ஜமாஅத் தனது முழு ஆதரவையும், வெல்ஃபர் பார்ட்டிக்கு தர இருப்பதையும் இன்ஜினீயர் உசேன் உறுதிப்படுத்துகிறார். 

தேர்தல் கொள்கை சம்பந்தமாக கேட்டபோது, "கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்திலிருந்து விலகி நிற்கிறோம். சோசலிஸ அமைப்பை முன்னெடுத்து செல்கிறோம். எங்களது பலம்; எங்கள் கொள்கைசார் தொண்டர்களால் கட்டமைக்கப்பட்டது. கூலிப்படையால் அல்ல. 

இந்தத் தேர்தல்கள் வியப்புகரிய முடிவுகளை தரவிருக்கிறது. நிச்சயம் இரண்டு இடங்களை நாங்கள் வெல்வோம்! குறைந்தளவு கணக்கு போட்டாலும் ஒரு இடத்தை வெல்வது நிச்சயம்!" - என்கிறார் இன்ஜினீயர் உசேன் பெரும் நம்பிக்கையோடு.

(Source:TwoCicles.net)


0 comments:

Post a Comment