NewsBlog

Wednesday, November 27, 2013

காலப்பெட்டகம்: 'நீதியைத் தேடும் சங்கரராமன் கொலைவழக்கு!'

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரும் விடுதலை! போலீஸ் நிரூபிக்கத் தவறியதாக தீர்ப்பில் தகவல்! காஞ்சிமடத்தில் பட்டாசு வெடித்து கோலாகலம்!

உண்மைதானே! நடக்காத (!) ஒரு கொலைக்கு தீர்ப்பு எப்படி எழுதுவதாம்?  

சங்கரராமனா யார் அவர்? கேள்விப்பட்டதில்லையே! கண்ணால் பார்த்த சாட்சிகளும் இல்லை. "எங்களுக்குத் தெரியவே தெரியாது எஜமான்!" - சாட்சிகளின் தடாலடி பிறர் சாட்சியும் சேர்ந்து .. அய்யோ... பாவம் ..! சங்கரராமன்!

அது சரி.. இந்திய மனசாட்சியை கூண்டிலேற்றி தூக்குத் தரமுடியுமே! 

ஓஹோ.. அது அப்ஸல் குரு போன்ற செய்யாத குற்றங்களுக்கான அதுவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான தண்டனையா?

குற்றவாளிகள் விடுதலையானதற்கு காவல்துறைதான் காரணம் என்கிறாரே வழக்குரைஞர் சுதா ராமலிங்கம். அப்படியானால், காவல்துறையினரின் சர்வ அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கிற நமது முதல்வர் உடன் பதவி விலகுவாரா? அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ததற்காக சமீபத்தில் பரிசு மழையைப் பொழிந்தாரே அந்த பரிசுகளை திரும்பவும் பெற்றுக் கொள்வாரா?

பாஸிஸத்தின் வலிமையும், அதன் கருத்துருவாக்கமும், வரவிருக்கும் தேர்தல்களுக்கான திரைமறைவு நாடகங்களையும் இனி தமிழகம் பார்க்கவிருக்கிறது. அதன் திரை கண்ணோட்டம்தான் சங்கரராமன் வழக்கு.

அரியணைதான் நமது குறிக்கோள்; அதனால், ஓடி ஒண்டிக் கொள்ளுங்கள் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்களே!

வழக்கம் போல், எது நடந்தால் நமக்கென்ன விலக்கிப் போவீர் நடுநிலைவாதிகளே!

மறந்துவிடாதீர்.. நீதியைத் தேடுகிறது சங்கரராமனின் கொலை!












0 comments:

Post a Comment