NewsBlog

Sunday, November 3, 2013

நடப்பு செய்தி: 'வெல்பர் பார்ட்டியின் மாநாடு'

பெண்கள் தலைவர் காலிதா பர்வீன் (உள்படம்: மாநாட்டு அமைப்பாளர்: ஷபியுல்லாஹ்)
 வெல்பர் பார்ட்டி ஆஃப் இந்தியா - ஆந்திர கிளையின் சார்பாக, 'நாட்டின் நடப்பு பிரச்னைகளும், அவற்றின் தீர்வுகளும்' என்னும் தலைப்பில் ஹைதராபாத் மாவட்டத்தின் ராஜேந்திர நகரில் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு தேசிய தலைவர் முஜ்தபா பரூக் மற்றும் தேசிய செயலாளர் கியூ. ஆர். இல்யாஸ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  மாநிலத்து பெண்கள் பிரிவின் முக்கியத் தலைவரான காலிதா பர்வீன் உட்பட பல தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கிட்டதட்ட 600 பேர் கலந்து கொண்ட மாநாட்டை அதன் அமைப்பாளரான சையத் ஷபியுல்லாஹ் காதிரி திறம்பட நடத்திக் காட்டியது முக்கியமானது.

0 comments:

Post a Comment