NewsBlog

Wednesday, March 13, 2013

கவிதை: 'விடுமுறையா? விடுதலையா?'

 
எதிரொளிக்கா திடம் கேட்டு
இன்று முதல்
நிறப்பிரிகைகளுக்கு விடுமுறை
அல்லது விடுதலை

கண்கட்டிக் கொண்ட
காட்சிகளில் கிடக்கின்றன
எனது நிம்மதி 
அவசியமில்லாத
அலைதலில்
கிடைப்பது எல்லாம்
உளைச்சலே

சுரங்கத்தினுள்
இப்போது இறங்கிக்கொண்டிருக்கும்
நீரோடை
அமைதி உண்டியலில்
நிறைந்து
தன் சலசலப்பை
குறைத்துக் கொண்டிருக்கிறது

இந்த இருட்டிலும்
தன்னைத் தேடிவரும்
வேர்களின் மூலம்
அதன் பச்சயத்திலோ
பூக்களிலோ
ஊடுருவி
வேறுருவில்
கடந்து வந்தவையை
கண்காணிக்கும்

இது
விடுமுறை
அல்லது விடுதலை.
IDREES YACOOB
 

0 comments:

Post a Comment