Pages - Menu

Pages - Menu

Menu - Pages

Friday, January 24, 2014

இதழியல்: 'காமிராவில் கைவண்ணம்': 1



ஒரு முறை லண்டனுக்குச் சென்றிருந்தபோது, சில புகைப்படச் சாதனங்கள் வாங்க காமிராக்கள் விற்கும் ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடை லண்டனில் விலை உயர்ந்த ஆடம்பரப் பொருள்கள் விற்கும் பல பொருள் அங்காடித் தொகுதியில் இருந்தது.

வேறு எங்குமே கிடைக்காத காமிராவுக்கான சில பொருள்களைத் தேடித்தான் அங்கு சென்றேன். சற்று நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. எனக்கு அருகில் ஒருவர் இருந்தார். பெரிய பணக்காரராக இருக்க வேண்டும்.

35எம்எம். காமிரா ஒன்றை அவர் வாங்கினார். அது மிகமிக விலை உயர்ந்த காமிரா. அத்துடன் அக்காமிராவுக்குத் தேவையான லென்ஸ், ஃபில்டர்கள் மற்றும் பல உதிரிப் பொருள்களையும் வாங்கினார்.


பில் எவ்வளவு வந்தது என்கிறீர்கள்? எனக்கே வியப்பாக இருந்தது. பவுண்ட் ஸ்டர்லிங்கில் நான்கு இலக்கத் தொகை! நம்மூர்ப் பணத்தில் லட்ச ரூபாய்க்கு மேல்.

பில் போட்டு முடித்ததும் விற்பனையாளர் அப்பொருள்களை பார்சல் பண்ணப் போனார். 

அதற்குள் நம் நண்பர் - பொருள்களை வாங்கியவர், "சற்றுப் பொறுங்கள்!" - என்றார். "நீங்கள் பார்சல் பண்ணும்முன் நான் வாங்கிய பொருள்களை என்ன செய்வது? எப்படிக் கையாள்வது என்றும் சொல்லி விடுகிறீர்களா?" - என்று அவர் கேட்டபோது, என் வியப்பு பல மடங்கானது.

அவர் வாங்கிய பொருள்கள் சாதாரணமாக அனுபவசாலிகளான படப்பிடிப்பாளர்கள் மட்டுமே வாங்கக்கூடியவை. அவர்களுக்கு மட்டுமே அப்பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியும். நம் நண்பர் காமிராக்களைக் கையாண்டு பழக்கம் இல்லாதவர் போலும்! யாரோ அவருக்குத் தவறாக வழிகாட்டி இருக்கிறார்கள்.

அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்றால், "ஒரு சாதாரண காமிரா வாங்குங்கள்!" - என யோசனை சொல்லியிருக்க வேண்டும்.

நல்ல புகைப்படக்கலை என்பது காசு கொடுத்து வாங்கக் கூடியது அல்ல. இது என் அனுபவம்.

- ஆரி மில்லர்.

ஆரி மில்லர்



No comments:

Post a Comment