Pages - Menu

Pages - Menu

Menu - Pages

Monday, December 2, 2013

செய்திகள் வாசிப்பது: பாமரன் : ' என்னய்யா நடக்குது இங்கே?'



ஒரு பக்கம் கல்யாணம் பண்ணிக்காம குடும்பம் நடத்துலாம்னு சொல்றீங்..!

திரும்புற இடமெல்லாம் சாராயக் கடை திறந்துவிட்டிருக்கீங்க..! 

'பார்' நைட் டான்ஸீன்னு ஆம்பள, பொம்பளகள கூத்தடிக்க விட்டிருக்கீங்க..!

குடிபோதையிலே இரண்டு பேரும் எசகு ... பிசகா நடந்துட்டப் பிறகு அவன் கெடுத்துட்டான்.. இவன் கெடுத்துட்டான்னு கூச்சல் போடறீங்க..!

ஆம்புளையா.. பொம்புளையான்னு டெஸ்ட் வேற பண்றீங்க..! 

அணி அணியாய் வந்து ஆர்ப்பாட்டம் செய்றீங்க..!

என்னய்யா நடக்குது இங்கே..?

எரியற கட்டையை இழுத்துட்டா தானா அடுப்பு அணைஞ்சுடப் போகுது. இதுகூடவா தெரியாது உங்களுக்கு..!

உங்கள இந்த பாமரனாலே புரிஞ்சுகவே முடியலே சாமி..! ஆளவிடுங்க..! கூலி வேலைக்கு நேரமாகுது..! நாளெல்லாம் உழைச்சாதான் ஒரு வேள கஞ்சியாவது குடிக்க முடியும். 

நீங்க மெத்த படிச்சவங்க.. உங்க பிரச்னைகள நீங்களே தீர்த்துக்க முடியாதா என்ன?

No comments:

Post a Comment