Pages - Menu

Pages - Menu

Menu - Pages

Monday, September 23, 2013

வெல்டன் ஜீ : 'சமூக ஒழுக்கத்தைத் தரும் நம்பிக்கைகள்'


மூட நம்பிக்கைகளை ஒழிக்கச் சட்டம் இயற்றினால் நன்றே. அதேநேரத்தில், மூட நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும் கவனமாகப் பிரிக்க வேண்டும். 

குறிப்பாக, மூட நம்பிக்கை ஒழிப்பு என்ற பெயரில் இறை நம்பிக்கையே கூடாது என்பதுபோல ஒரு மாயை உருவாக்கப்படுவது ஏற்கத் தக்கதல்ல. காரணம், மத நம்பிக்கைகளைப் பேணி பாதுகாக்கும் உரிமை என ஐ.நா.மன்றத்தின் சர்வதேச மனித உரிமைகள் சாகனத்தின் ஷரத்து 18 மற்றும் நமது மாண்பமை இந்திய அரசயல் சாசனத்தின் ஷரத்து 25 - ம், உறுதி செய்துள்ளன. 

ஒரு சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை ஒரு தனிமனிதனோ அல்லது அரசியல் ரீதியான சட்டங்களாலோ மட்டுமே மாற்றிட முடியாது என்பது மனிதனின் பல்லாயிரம் ஆண்டு கால அனுபவம். 

ஆனால், இறை நம்பிக்கையினால் 'பிறருக்கு நன்மை செய்தும் வாழ்பவன் துயரற்ற வாழ்வை அடைவான்!'- என்ற நம்பிக்கை காரணமாக சமூகத்தில் ஓரளவாவது மனிதாபிமானமும், சகிப்புத்தன்மையும் நிலவுவதை மறுக்க இயலாது. 

இதை ஒரு சமூகவியலாளரின் மொழியில் சொன்னால்.. மத நம்பிக்கைகள் ஒரு மறைமுகமான சமூக ஒழுக்கத்தினைத் தருகிறது என்பதும் உண்மையே!

- ஆர். திருமூர்த்தி, கோயம்பத்தூர் - 6
(ஆதாரம்: தி இந்து - 23.09.2013 - 'இப்படிக்கு இவர்கள்' பகுதி)

No comments:

Post a Comment